பாடம்: 8
ஓதுபவர் சஜ்தாச் செய்யும் போது கேட்பவரும் சஜ்தாச் செய்ய வேண்டும்.
சிறுவரான தமீம் பின் ஹத்லம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சஜ்தா வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அவரிடம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சஜ்தாச் செய்வீராக! ஏனெனில் இந்த விஷயத்தில் நீரே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறீர் என்று கூறினார்கள்.
1075. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.
அத்தியாயம்: 17
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ، فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ»
சமீப விமர்சனங்கள்