Author: Farook

Bukhari-853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 160 சமைக்கப்படாத வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டுள்ளி (போன்ற வாடையுள்ளவற்றைச்) சாப்பிடுவது குறித்து வந்துள்ளவையும், பசி காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ வெள்ளைப் பூண்டு,வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் எனும் நபி மொழியும். 

853. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியை நெருங்க வேண்டாம்’ என்று கைபர் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 10


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي غَزْوَةِ خَيْبَرَ: «مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ – يَعْنِي الثُّومَ – فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا»


Bukhari-852

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 159 (தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும், திரும்பிச் செல்வதும்.

அனஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்த பின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப்பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கம் திரும்புவதை மட்டுமே தேர்வு செய்வோரை அவர்கள் கண்டிப்பார்கள். 

852. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தன்னுடைய தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி(ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.
Book : 10


لاَ يَجْعَلْ أَحَدُكُمْ لِلشَّيْطَانِ شَيْئًا مِنْ صَلاَتِهِ يَرَى أَنَّ حَقًّا عَلَيْهِ أَنْ لاَ يَنْصَرِفَ إِلَّا عَنْ يَمِينِهِ «لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثِيرًا يَنْصَرِفُ عَنْ يَسَارِهِ»


Bukhari-851

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 158 தொழுகை நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் இமாம் (அமராமல்) மக்களைக் கடந்து செல்வது. 

851. உக்பா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள்.

‘என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 10


صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ العَصْرَ، فَسَلَّمَ، ثُمَّ قَامَ مُسْرِعًا، فَتَخَطَّى رِقَابَ النَّاسِ إِلَى بَعْضِ حُجَرِ نِسَائِهِ، فَفَزِعَ النَّاسُ مِنْ سُرْعَتِهِ، فَخَرَجَ عَلَيْهِمْ، فَرَأَى أَنَّهُمْ عَجِبُوا مِنْ سُرْعَتِهِ، فَقَالَ: «ذَكَرْتُ شَيْئًا مِنْ تِبْرٍ عِنْدَنَا، فَكَرِهْتُ أَنْ يَحْبِسَنِي، فَأَمَرْتُ بِقِسْمَتِهِ»


Bukhari-850

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

850. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பார்கள். அவர்கள் இல்லம் செல்வதற்கு முன் பெண்கள் தம் இல்லங்களுக்குச் செல்வார்கள்.
Book :10


«كَانَ يُسَلِّمُ، فَيَنْصَرِفُ النِّسَاءُ، فَيَدْخُلْنَ بُيُوتَهُنَّ مِنْ قَبْلِ أَنْ يَنْصَرِفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-849

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

849. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் இருப்பார்கள்.

பெண்கள் தம் இல்லம் திரும்பிச் செல்வதற்காகவே அப்படித் தங்கியுள்ளனர் என்று நாம் கருதுகிறோம் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்கள்.
Book :10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَلَّمَ يَمْكُثُ فِي مَكَانِهِ يَسِيرًا» قَالَ ابْنُ شِهَابٍ: «فَنُرَى وَاللَّهُ أَعْلَمُ لِكَيْ يَنْفُذَ مَنْ يَنْصَرِفُ مِنَ النِّسَاءِ»


Bukhari-848

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம் : 157

சலாம் கொடுத்த பின் இமாம் தொழுத இடத்திலேயே இருப்பது. 

848. நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) கடமையான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (ஸுன்னத்தான தொழுகைகளைத்) தொழுபவர்களாக இருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களின் பேரர் காஸிம் இப்னு முஹம்மத் இவ்வாறு தொழுதுள்ளார்.

(புகாரீ இமாம் கூறுகிறார்)

‘இமாம் கடமையான தொழுகையைத் தொழுத இடத்தில் உபரியான தொழுகைகளைத் தொழக் கூடாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்ததாக கூறப்படுகிறது. அது ஆதாரப்பூர்வமானது அன்று.

அத்தியாயம் : 10


«يُصَلِّي فِي مَكَانِهِ الَّذِي صَلَّى فِيهِ الفَرِيضَةَ وَفَعَلَهُ القَاسِمُ»

وَيُذْكَرُ عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ «لاَ يَتَطَوَّعُ الإِمَامُ فِي مَكَانِهِ وَلَمْ يَصِحَّ»


Bukhari-847

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

847. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (இஷாத்) தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப் படுத்திப் பின்னர் எங்களிடம் வந்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நேராக நோக்கி ‘நிச்சயமாக மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்திருப்பதால் தொழுகையில் இருப்பவர்களாகவே ஆவீர்கள்’ என்று கூறினார்கள்.
Book :10


أَخَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلاَةَ ذَاتَ لَيْلَةٍ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ خَرَجَ عَلَيْنَا، فَلَمَّا صَلَّى أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَرَقَدُوا، وَإِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلاَةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلاَةَ»


Bukhari-846

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

846. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘ஹுதைபிய்யா’ எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்’ என்று நாங்கள் கூறினோம்.

‘என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10


صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الصُّبْحِ بِالحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: ” أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالكَوْكَبِ


Bukhari-845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 156 சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது. 

845. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நோக்கி நேராக  திரும்புவார்கள்.
Book : 10


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ  عَلَيْنَا بِوَجْهِهِ»


Bukhari-844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

844. முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.

‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன், அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

அத்தியாயம்: 10


أَمْلَى عَلَيَّ المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فِي كِتَابٍ إِلَى مُعَاوِيَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ مَكْتُوبَةٍ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ»


Next Page » « Previous Page