Author: Farook

Bukhari-773

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 105

ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுவது.

நபி (ஸல்) அவர்கள் அத்தூர் (எனும் 56 ஆவது) அத்தியாத்தை ஓதித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் இறையில்லத்தை தவாஃப் செய்து (சுற்றிக்) கொண்டிருந்தேன் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

773. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ‘உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிப் புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப்பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் எறிய பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்களிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பியபோது ‘உங்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன’ என்று அந்த ஷைத்தான்கள் கூறினர்.

‘புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை என  சென்று என்னவென்று ஆராயுங்கள்! என்று தலைவர்கள் கூறினர்.

ஷைத்தான்கள்

انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ، وَقَدْ حِيلَ بَيْنَ الشَّيَاطِينِ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْهِمُ الشُّهُبُ، فَرَجَعَتِ الشَّيَاطِينُ إِلَى قَوْمِهِمْ، فَقَالُوا: مَا لَكُمْ؟ فَقَالُوا: حِيلَ بَيْنَنَا وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، وَأُرْسِلَتْ عَلَيْنَا الشُّهُبُ، قَالُوا: مَا حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ إِلَّا شَيْءٌ حَدَثَ، فَاضْرِبُوا مَشَارِقَ الأَرْضِ وَمَغَارِبَهَا، فَانْظُرُوا مَا هَذَا الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، فَانْصَرَفَ أُولَئِكَ الَّذِينَ تَوَجَّهُوا نَحْوَ تِهَامَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِنَخْلَةَ عَامِدِينَ إِلَى سُوقِ عُكَاظٍ، وَهُوَ يُصَلِّي بِأَصْحَابِهِ صَلاَةَ الفَجْرِ، فَلَمَّا سَمِعُوا القُرْآنَ اسْتَمَعُوا لَهُ، فَقَالُوا: هَذَا وَاللَّهِ الَّذِي حَالَ بَيْنَكُمْ وَبَيْنَ خَبَرِ السَّمَاءِ، فَهُنَالِكَ حِينَ رَجَعُوا إِلَى قَوْمِهِمْ، وَقَالُوا: يَا قَوْمَنَا: {إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا، يَهْدِي إِلَى الرُّشْدِ، فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا} [الجن: 2]، فَأَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الجِنِّ} [الجن: 1] وَإِنَّمَا أُوحِيَ إِلَيْهِ قَوْلُ الجِنِّ


Bukhari-772

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

772. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன்) ஓதப் பட வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம்.

(தொழுகையில்) குர்ஆனின் அன்னை (யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விடக் கூடுதலாக வேறு எதையும் நீ ஓதாவிட்டாலும் (உமது தொழுகை) நிறைவேறிவிடும். ஆயினும், அதைவிட அதிகமாக நீ ஓதினால், அதுவே சிறந்ததாகும்.

அத்தியாயம்: 10


«فِي كُلِّ صَلاَةٍ يُقْرَأُ، فَمَا أَسْمَعَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْمَعْنَاكُمْ، وَمَا أَخْفَى عَنَّا أَخْفَيْنَا عَنْكُمْ، وَإِنْ لَمْ تَزِدْ عَلَى أُمِّ القُرْآنِ أَجْزَأَتْ وَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ»


Bukhari-771

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 104 ஃபஜ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும்.

(ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் அத்தூர்’ (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

771. ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்:

நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். ‘கடமையான தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?’ என்று நாங்கள் கேட்டோம்.

‘நீங்கள் முதல் தொழுகை என்று கூறக் கூடிய நண்பகல் தொழுகையை (நடு வானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸர் தொழுவார்கள்.

எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்’ என்றார்கள். மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். ‘கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை நபி(ஸல்) அவர்கள் விரும்புபவர்களாக இருந்தனர். இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர்.

அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர்

دَخَلْتُ أَنَا وَأَبِي عَلَى أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، فَسَأَلْنَاهُ عَنْ وَقْتِ الصَّلَوَاتِ، فَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَالعَصْرَ، وَيَرْجِعُ الرَّجُلُ إِلَى أَقْصَى المَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ – وَنَسِيتُ مَا قَالَ فِي المَغْرِبِ – وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ العِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ، وَلاَ يُحِبُّ  النَّوْمَ قَبْلَهَا، وَلاَ الحَدِيثَ بَعْدَهَا، وَيُصَلِّي الصُّبْحَ، فَيَنْصَرِفُ الرَّجُلُ، فَيَعْرِفُ جَلِيسَهُ، وَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ – أَوْ إِحْدَاهُمَا – مَا بَيْنَ السِّتِّينَ إِلَى المِائَةِ»


Bukhari-770

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103 (இஷாத் தொழுகையின்) முதலிரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓத வேண்டும். இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓத வேண்டும். 

770. ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.

‘தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் மக்கள் உம்மைப் பற்றிப் புகார் செய்துள்ளனர்’ என்று உமர்(ரலி) ஸஃது(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு ஸஃது(ரலி) ‘முதலிரண்டு ரக்அத்களில் நீளமாகவும் பிந்திய இரண்டு ரக்அத்களில் சுருக்கமாகவும் ஓதுவேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையை அப்படியே பின்பற்றுவதில் நான் எந்தக் குறையும் செய்யவில்லை’ என்றார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) ‘நாமும் உம்மைப் பற்றி அவ்வாறே எண்ணுகிறோம்’ என்றார்கள்.
Book : 10


قَالَ عُمَرُ لِسَعْدٍ: لَقَدْ شَكَوْكَ فِي كُلِّ شَيْءٍ حَتَّى الصَّلاَةِ، قَالَ: «أَمَّا أَنَا، فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ، وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ: صَدَقْتَ ذَاكَ الظَّنُّ بِكَ أَوْ ظَنِّي بِكَ


Bukhari-769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 102 இஷாத் தொழுகையில் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும். 

769. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இஷாத் தொழுகையில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ என்ற அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓத செவியுற்றுள்ளேன். அவர்களை விட அழகிய குரலில் வேறெவரும் ஓத நான் செவியுற்றதில்லை.
Book : 10


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يَقْرَأُ: وَالتِّينِ وَالزَّيْتُونِ فِي العِشَاءِ، وَمَا سَمِعْتُ أَحَدًا أَحْسَنَ صَوْتًا مِنْهُ أَوْ قِرَاءَةً


Bukhari-768

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 101

இஷாத் தொழுகையில் சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது. 

768. அபூ ராஃபிவு கூறினார்:

அபூ ஹுரைரா (ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, ‘நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கம் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்’ என்று கூறினார்கள்.
Book : 10


صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ: مَا هَذِهِ؟ قَالَ: «سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»


Bukhari-767

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

767. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் ‘வத்தீனி வஸ்ஸைத் தூனி’ என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.
Book :10


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي سَفَرٍ فَقَرَأَ فِي العِشَاءِ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ: بِالتِّينِ وَالزَّيْتُونِ


Bukhari-766

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 100

இஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுதல். 

766. அபூ ராஃபிவு கூறினார்:

அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது ‘இதஸ் ஸமாவுன் ஷக்கத்’ என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கும் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்’ என்று கூறினார்கள்.
Book : 10


صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ العَتَمَةَ، فَقَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ، فَقُلْتُ لَهُ: قَالَ: «سَجَدْتُ خَلْفَ أَبِي القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ»


Bukhari-765

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 99 மஃக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல். 

765. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதும்போது செவியுற்றேன்.
Book : 10


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَرَأَ فِي المَغْرِبِ بِالطُّورِ»


Bukhari-764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

764. மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “நீங்கள் ஏன் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங்களையே ஓதுகிறீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியுற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.50

அத்தியாயம் : 10


قَالَ لِي زَيْدُ بْنُ ثَابِتٍ: «مَا لَكَ تَقْرَأُ فِي المَغْرِبِ بِقِصَارٍ، وَقَدْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِطُولَى الطُّولَيَيْنِ»


Next Page » « Previous Page