Author: Farook

Daraqutni-1436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1436. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளை சூரியன் உதயமாகும் வரை தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின்னும் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَلْيُصَلِّهِمَا»


Kubra-Bayhaqi-4231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4231. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْغَدَاةِ فَلْيُصَلِّ إِذَا طَلَعَتِ الشَّمْسُ


Assunan-Assaghir-Bayhaqi-751

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

751. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளை சூரியன் உதயமாகும் வரை தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின்னும் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَلْيُصَلِّهِمَا»


Assunan-Assaghir-Bayhaqi-750

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

750. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ نَسِيَ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا إِذَا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ»


Hakim-1153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1153. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ نَسِيَ رَكْعَتَيِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا إِذَا طَلَعَتِ الشَّمْسُ»


Hakim-1015

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1015. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ فَلْيُصَلِّهِمَا»


Ibn-Khuzaymah-1117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1117. யார் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லையோ அவர் அவ்விரு ரக்அத்துகளையும் சூரியன் உதித்த பின் தொழுவாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ نَسِيَ رَكْعَتَيِ الْفَجْرَ، فَلْيُصَلِّهِمَا إِذَا طَلَعَتِ الشَّمْسُ»


Tirmidhi-423

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 198

சூரியன் உதயமான பின்னரும் ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.

423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழாதவர், சூரியன் உதயமான பின்னர் அவற்றைத் தொழுது கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு தொழுதுள்ளதாக (அதாவது அவர்களின் செயலாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இவ்வாறே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) ஆகியோரும் கூறுகின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும்

«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ»


Tirmidhi-422

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 197

ஃபஜ்ருக்கு முந்தைய  (சுன்னத்) இரண்டு ரக்அத்ளைத் தவறவிட்டவர், ‘ஃபஜ்ர்’ தொழுகைக்குப் பின் அவற்றைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.

422.  (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்த போது (சுப்ஹுத்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து நானும் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதேன்.

தொழுகை முடிந்து திரும்பிய நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) நான் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ”கைஸே! சற்றுப் பொறும்! ஒரு நேரத்தில் (கடமையான) இரண்டு தொழுகைகளா?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. (அதைத்தான் இப்போது தொழுகிறேன்)” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால் தவறில்லை” என்றார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ், ஸஅத் பின் ஸயீத் (எனும் விமர்சனத்திற்குரிய அறிவிப்பாளர்) வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.

`ஸஅத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் வழியாகவும் ஓர் அறிவிப்பு வந்துள்ளது. அதில் நபித்தோழர்

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُقِيمَتِ الصَّلَاةُ، فَصَلَّيْتُ مَعَهُ الصُّبْحَ، ثُمَّ انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَنِي أُصَلِّي، فَقَالَ: «مَهْلًا يَا قَيْسُ، أَصَلَاتَانِ مَعًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَمْ أَكُنْ رَكَعْتُ رَكْعَتَيِ الفَجْرِ، قَالَ: «فَلَا إِذَنْ»،


Ibn-Majah-1154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரை சுபுஹுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழக் கண்டார்கள். அப்போது அவர்கள், “சுபுஹ் தொழுகை இரண்டு தடவையா ? ” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “சுபுஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்துகளைத் தொழவில்லை. அவ்விரண்டையும் இப்போது தொழுதேன்” என்று பதிலளித்ததும், நபி (ஸல்) அவர்கள் மவுனமாகி விட்டார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் அம்ர் (ரலி)


رَأَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي بَعْدَ صَلَاةِ الصُّبْحِ رَكْعَتَيْنِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَاةَ الصُّبْحِ مَرَّتَيْنِ؟» فَقَالَ لَهُ الرَّجُلُ: إِنِّي لَمْ أَكُنْ صَلَّيْتُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَهَا، فَصَلَّيْتُهُمَا. قَالَ: فَسَكَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page