ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
பாடம்: 197
ஃபஜ்ருக்கு முந்தைய (சுன்னத்) இரண்டு ரக்அத்ளைத் தவறவிட்டவர், ‘ஃபஜ்ர்’ தொழுகைக்குப் பின் அவற்றைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.
422. (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்த போது (சுப்ஹுத்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து நானும் சுப்ஹுத் தொழுகையைத் தொழுதேன்.
தொழுகை முடிந்து திரும்பிய நபி (ஸல்) அவர்கள், (மீண்டும்) நான் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ”கைஸே! சற்றுப் பொறும்! ஒரு நேரத்தில் (கடமையான) இரண்டு தொழுகைகளா?” என்று கேட்டார்கள்.
அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழவில்லை. (அதைத்தான் இப்போது தொழுகிறேன்)” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படியானால் தவறில்லை” என்றார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் அம்ர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
கைஸ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ், ஸஅத் பின் ஸயீத் (எனும் விமர்சனத்திற்குரிய அறிவிப்பாளர்) வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.
`ஸஅத் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் வழியாகவும் ஓர் அறிவிப்பு வந்துள்ளது. அதில் நபித்தோழர்
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأُقِيمَتِ الصَّلَاةُ، فَصَلَّيْتُ مَعَهُ الصُّبْحَ، ثُمَّ انْصَرَفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَنِي أُصَلِّي، فَقَالَ: «مَهْلًا يَا قَيْسُ، أَصَلَاتَانِ مَعًا»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَمْ أَكُنْ رَكَعْتُ رَكْعَتَيِ الفَجْرِ، قَالَ: «فَلَا إِذَنْ»،
சமீப விமர்சனங்கள்