Author: Farook

Shuabul-Iman-7593

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7593. ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


تُعْرَضُ الْأَعْمَالُ عَشِيَّةَ كُلِّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يُرْفَعُ فِيهَا قَاطِعُ رَحِمٍ


Musnad-Ahmad-10272

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

10272 . ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ، فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ»


Darimi-213

ஹதீஸின் தரம்: More Info

213. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும் போது எழுந்து “சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்….” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா


وَكَانَ إِذَا كَانَ عَشِيَّةَ الْخَمِيسِ ليْلةِ الْجُمُعَةِ، قَامَ فَقَالَ: «إِنَّ أَصْدَقَ الْقَوْلِ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّ أَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالشَّقِيُّ مَنْ شَقِيَ فِي بَطْنِ أُمِّهِ، وَإِنَّ شَرَّ الرَّوَايَا رَوَايَا الْكَذِبِ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلَّ مَا هُوَ آتٍ قَرِيبٌ»


Abu-Dawood-1379

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1379. அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சிறுவனாக இருந்த சமயம், பனூ ஸலமா கூட்டத்தாரின் சபையில் இருக்கும் போது லைலதுல் கத்ர் இரவு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ஆம் நாள் காலையில் நடந்தது.

(அன்றைய தினம்) நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். பிறகு நான் அவர்களின் வீட்டுவாசலில் நின்றுக் கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். (அவர்கள் என்னைக் கண்டு) வீட்டுக்குள் வா! என்று என்னை அழைத்தார்கள். நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.

அவர்களுக்கு இரவு உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டது. (நானும் சிறிது சாப்பிட்டேன்). அது குறைவாக இருந்ததால் நான் சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் இதைக் கவனித்தார்கள்.

அவர்கள் சாப்பிட்டப்பின், “எனது செறுப்பை எடுத்துவா!” என்று கூறி எழுந்தார்கள். நானும் அவர்களுடன் எழுந்தேன். அப்போது நபி (ஸல்)  அவர்கள், “உமக்கு ஏதேனும் தேவை இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நான், ஆம் (அல்லாஹ்வின் தூதரே!). லைலதுல் கத்ர் பற்றி கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பினார்கள் என்று கூறினேன்.

அதற்கு, இது எத்தனையாவது

كُنْتُ فِي مَجْلِسِ بَنِي سَلَمَةَ وَأَنَا أَصْغَرُهُمْ، فَقَالُوا:: مَنْ يَسْأَلُ لَنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، وَذَلِكَ صَبِيحَةَ إِحْدَى وَعِشْرِينَ مِنْ رَمَضَانَ؟ فَخَرَجْتُ فَوَافَيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْمَغْرِبِ، ثُمَّ قُمْتُ بِبَابِ بَيْتِهِ، فَمَرَّ بِي فَقَالَ: «ادْخُلْ»، فَدَخَلْتُ فَأُتِيَ بِعَشَائِهِ، فَرَآنِي أَكُفُّ عَنْهُ مِنْ قِلَّتِهِ، فَلَمَّا فَرَغَ، قَالَ: «نَاوِلْنِي نَعْلِي» فَقَامَ وَقُمْتُ مَعَهُ، فَقَالَ: «كَأَنَّ لَكَ حَاجَةً»، قُلْتُ: أَجَلْ، أَرْسَلَنِي إِلَيْكَ رَهْطٌ مِنْ بَنِي سَلَمَةَ، يَسْأَلُونَكَ عَنْ لَيْلَةِ الْقَدْرِ، فَقَالَ: «كَمِ اللَّيْلَةُ؟» فَقُلْتُ: اثْنَتَانِ وَعِشْرُونَ، قَالَ: «هِيَ اللَّيْلَةُ»، ثُمَّ رَجَعَ، فَقَالَ: «أَوِ الْقَابِلَةُ»، يُرِيدُ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ


Musnad-Ahmad-2068

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2068. “நபி (ஸல்) அவர்களுக்காக வியாழன் இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு பாத்திரத்தில்) ஊற வைக்கப்படும். அதை வியாழன் பகலிலும், வெள்ளிக் கிழமையிலும் அருந்துவார்கள்.”…
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُنْبَذُ لَهُ لَيْلَةَ الْخَمِيسِ، فَيَشْرَبُهُ يَوْمَ الْخَمِيسِ وَيَوْمَ الْجُمُعَةِ – قَالَ: وَأُرَاهُ قَالَ – وَيَوْمَ السَّبْتِ، فَإِذَا كَانَ عِنْدَ الْعَصْرِ، فَإِنْ بَقِيَ مِنْهُ شَيْءٌ سَقَاهُ الْخَدَمَ، أَوْ أَمَرَ بِهِ فَأُهْرِيقَ


Musnad-Ahmad-2143

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2143. “நபி (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) திங்கள் கிழமை இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும். திங்கள் கிழமை பகலிலும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையிலும் அதை அருந்துவார்கள். மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள். அல்லது கொட்டி விடுவார்கள்.”…
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


ذَكَرُوا النَّبِيذَ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَقَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُنْبَذُ لَهُ فِي السِّقَاءِ – قَالَ شُعْبَةُ: مِثْلَ لَيْلَةِ الاثْنَيْنِ – فَيَشْرَبُهُ يَوْمَ الاثْنَيْنِ، وَالثُّلاثَاءِ إِلَى الْعَصْرِ، فَإِنْ فَضَلَ مِنْهُ شَيْءٌ سَقَاهُ الْخُدَّامَ، أَوْ صَبَّهُ ” قَالَ شُعْبَةُ: وَلا أَحْسِبُهُ إِلا قَالَ: «وَيَوْمَ الْأَرْبِعَاءِ إِلَى الْعَصْرِ، فَإِنْ فَضَلَ مِنْهُ شَيْءٌ سَقَاهُ الْخُدَّامَ أَوْ صَبَّهُ»


Ibn-Khuzaymah-1445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

திடலில் மிம்பர் இல்லாதபோது தரையில் நின்று உரையாற்றுதல்.

1445. நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

இப்னு குஸைமா கூறுகிறார்:

இந்த ஹதீஸில் வரும் عَلَى رِجْلَيْهِ என்ற வார்த்தைக்கு இரண்டு விளக்கம் உள்ளது.

1 . நபி (ஸல்) அவர்கள் நின்று உரையாற்றினார்கள். அமர்ந்து உரையாற்றவில்லை.

2 . தரையில் நின்று உரையாற்றினார்கள். (மிம்பரில் நின்று உரையாற்றவில்லை). மர்வான் அவர்கள், பெருநாளன்று உரையாற்ற மிம்பரை வைத்தபோது அபூஸயீத் (ரலி) அவர்கள் (இதற்கு முன் இவ்வாறு மிம்பர் வைக்கப்படவில்லை என்று) தடுத்தார்கள் (என்பதால் இவ்வாறு பொருள் கொள்ளலாம்).

 


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمَ عِيدٍ عَلَى رَاحِلَتِهِ»


Nasaayi-1574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1574. ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்)அறிவித்தார்:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்துவார்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்தி பிறகு சிறிது உட்கார்ந்து பிறகு எழுந்து உரை நிகழ்த்துவார்கள்; என்று கூறினார்கள்.


سَأَلْتُ جَابِرًا أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا؟، فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً، ثُمَّ يَقُومُ»


Ibn-Majah-1289

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளிலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَخَطَبَ قَائِمًا ثُمَّ قَعَدَ قَعْدَةً ثُمَّ قَامَ»


Musnad-Ahmad-27352

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

27352. ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக் கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமக்கு கணவர் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார், நபி(ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துக்கொள்கிறாய் என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலே தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துக் கொள்கிறாய் என்பதை கவனித்துக்கொள் ஏனென்றால் அவர்தான் உனது சொர்க்கமாகும், உனது நரகமுமாகும். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுசைன் பின் மிஹ்ஸன் (ரலி)


أَنَّ عَمَّةً لَهُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَفَرَغَتْ مِنْ حَاجَتِهَا، فَقَالَ لَهَا: «أَذَاتُ زَوْجٍ أَنْتِ؟» ، قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَأَيْنَ أَنْتِ مِنْهُ؟» – قَالَ يَعْلَى: «فَكَيْفَ أَنْتِ لَهُ؟» – قَالَتْ: مَا آلُوهُ إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ، قَالَ: «انْظُرِي أَيْنَ أَنْتِ مِنْهُ فَإِنَّهُ جَنَّتُكِ وَنَارُكِ»


Next Page » « Previous Page