Author: Farook

Abu-Dawood-311

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 121

பேர்கால ரத்தம்.

311. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பேர்கால தொடக்குள்ள பெண்கள் பேர்கால ரத்தத்திற்கு பிறகு நாற்பது பகல்கள் அல்லது நாற்பது இரவுகள் (தொழாமல், நோன்பு நோற் காமல்) இருப்பார்கள். மேலும் நாங்கள் எங்களுடைய முகங்களில் (ஏற்படுகின்ற பருவை போக்குவதற்காக) வரிஸ் என்ற செடியின் சாயத்தைப் பூசிக் கொள்வோம். 

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது.)


«كَانَتِ النُّفَسَاءُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقْعُدُ بَعْدَ نِفَاسِهَا أَرْبَعِينَ يَوْمًا – أَوْ أَرْبَعِينَ لَيْلَةً – وَكُنَّا نَطْلِي عَلَى وُجُوهِنَا الْوَرْسَ – تَعْنِي – مِنَ الكَلَفِ»


Abu-Dawood-310

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

310. ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் சூதக ரத்தப் போக்கு உடையவர் ஆனார்கள். அவருடைய கணவர் அவரிடம் உடலுறவு கொள்வார்கள். 

அறிவிப்பவர் : ஹிம்னா பின்த் ஜஹ்ஷ்

(குறிப்பு : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ், ஹிம்னா பின்த் ஜஹ்ஷ் ஆயியோரிடம் இக்ரிமா செவியுற்றார் என்ற கருத்து ஆட்சேபனைக்குரியது என்று முன்திரி குறிப்பிடுகிறார்கள்.


«أَنَّهَا كَانَتْ مُسْتَحَاضَةً وَكَانَ زَوْجُهَا يُجَامِعُهَا»


Abu-Dawood-309

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 120

சூதக ரத்தப் போக்குள்ளவரை கட்டி உடலுறவு கொள்ளுதல்.

309. உம்மு ஹபீபா (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக இருக்கும் போது அவரிடம் அவரது கணவர் உடலுறவு கொள்வார்.

அறிவிப்பவர் : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: 

முஅல்லா பின் மன்சூர் நம்பிக்கை யாளர் என்று யஹ்யா பின் முஈன் தெரிவிக் கின்றார். இவர் எதையும் சொந்த அபிப் பிராய கண்ணோட்டத்துடன் அனுகுபவர் என்பதால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் இவரிடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள்.


«كَانَتْ أُمُّ حَبِيبَةَ تُسْتَحَاضُ فَكَانَ زَوْجُهَا يَغْشَاهَا»


Abu-Dawood-307

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 119

துப்புரவுக்குப் பிறகு கலங்கலான (மண் நிறம், மஞ்சள்) நிறத்தைக் கண்டால் ?

307. நாங்கள் (குளித்து) துப்புரவான பிறகு (வெளிப்படும்) மண் நிற மற்றும் மஞ்சள் நிற (திரவ)த்தை கவனத்தில் கொள்ளமாட் டோம் என்று நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்து கொண்ட உம்மு அதிய்யா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஹுதைல்

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. அதில் நாங்கள் துப்புரவான பிறகு என்ற வாசகம் இடம் பெறவில்லை.)


«كُنَّا لَا نَعُدُّ الْكُدْرَةَ، وَالصُّفْرَةَ بَعْدَ الطُّهْرِ شَيْئًا»


Abu-Dawood-306

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

306. ரபீஆ அவர்கள், சூதக ரத்தப்போக்கு உள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று கருத்து கொண்டிருக்கவில்லை எனினும், ரத்தமல்லாத உலூ முறிவு அவரை தீண்டினால் அவர் உலூச் செய்ய வேண்டும் என்பதை தவிர.

அறிவிப்பவர் : வஹப் லைஸ்

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:

இதுவே, மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்களது கருத்தாகும்.


«أَنَّهُ كَانَ لَا يَرَى عَلَى الْمُسْتَحَاضَةِ وُضُوءًا عِنْدَ كُلِّ صَلَاةٍ إِلَّا أَنْ يُصِيبَهَا حَدَثٌ غَيْرُ الدَّمِ، فَتَوَضَّأُ»


Abu-Dawood-305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 118

உளூவை நீக்கும் காரியம்.

305. உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக ஆன போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தனது (வழமையான) மாதவிடாய்களில் (தொழுகையை விட்டு) காத்திருந்து பிறகு குளித்து தொழுமாறும் அதன் பிறகு எதையும் கண்டால் உலூச் செய்து தொழுவாராக என்றும் கட்டளையிட்டார்.

அறிவிப்பவர் : இக்ரிமா

(குறிப்பு : இந்த ஹதீஸ் முர்ஸலானது என்று முந்திரி குறிப்பி டுகின்றார். ஏனெனில் இக்ரிமா நபித் தோழர் அல்ல.)


أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ جَحْشٍ اسْتُحِيضَتْ «فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَنْتَظِرَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ وَتُصَلِّي، فَإِنْ رَأَتْ شَيْئًا مِنْ ذَلِكَ، تَوَضَّأَتْ وَصَلَّتْ»


Abu-Dawood-304

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 117

ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்யலாம்.

304. பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் சூதக ரத்தப் போக்கு உள்ளவராக ஆனபோது அவருக்கு நபி (ஸல்) அவர்கள், இது மாதவிடாய் ரத்தம் எனில் அது அடையாளங்கண்டு கொள்ளப் படும் கரிய ரத்தமாகும். இந்த ரத்தம் உனக்கு வந்தால் நீ தொழுகை விட்டுவிடு. இது அல்லாத ரத்தம் வந்தால் நீ உலூச் செய்து தொழுது கொள் என்றார்கள். 

அறிவிப்பவர் : பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி)

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

எமக்கு இப்னு அபீ அதீ என்பார் தனது மனனத்தின் மூலம் அறிவிக்கும் போது உர்வா (அவர்களுக்கும் பாத்திமா அவர்களுக்கும் இடையில்) அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் என்று அறிவிப்பாளர் இப்னுல் முஸன்னா கூறுகின்றார். (286 வது ஹதீஸின் குறிப்பை பார்க்கவும்).

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்: 

இந்த ஹதீஸை அபூ ஜஃபர் வழியாக ஹக்கம் மூலம் அறிவிக்கும் அலா பின் அல் முஸய்யிப் என்பாரிடமிருந்தும் ஷுஃபா விடமிருந்தும் அறிவிக்கப் படுகின்றது. இந்த

أَنَّهَا كَانَتْ تُسْتَحَاضُ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ دَمُ الْحَيْضِ فَإِنَّهُ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ، فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ، فَتَوَضَّئِي وَصَلِّي»


Abu-Dawood-303

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 116

உதிரப்போக்குடையவள் அவ்வப்போது குளித்தல்.

303. சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தொடர்பாக முஹம்மது பின் உஸ்மான் அவர்கள் காசிம் பின் முஹம்மது அவர்களிடம் வினவிய போது, அப்படிப் பட்டவர் தனது (வழமையான) மாதவிடாய் நாட்களில் தொழுகையை விட்டு விடுவாராக! பின்பு குளித்து தொழுவாராக. பிறகு, (உதிரப்போக்கு) நாட்களில் (அவ்வப்போது) குளிப்பாராக என்று பதிலளித்தார். 

அறிவிப்பவர் : முஹம்மது பின் உஸ்மான்.


أَنَّهُ سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنِ الْمُسْتَحَاضَةِ فَقَالَ: «تَدَعُ الصَّلَاةَ أَيَّامَ أَقْرَائِهَا، ثُمَّ تَغْتَسِلُ فَتُصَلِّي، ثُمَّ تَغْتَسِلُ فِي الْأَيَّامِ»


Abu-Dawood-302

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 115

நண்பகலில் எனக் குறிப்பிட்டுக் கூறாமல் ஒவ்வோொரு நாளும் ஒருமுறை குளிக்க வேண்டும் என்று சொல்லுதல்.

302. சூதக ரத்தப்போக்கு உள்ளவர் தனது மாதவிடாய் நின்றதும் தினந்தோறும் குளிப்பாராக. மேலும் அவர் கொழுப்பு அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிய கம்பளித் துணியை (தனது மர்மத்தானத்தில்) வைத்துக் (கட்டி) கொள்வாராக! 

அறிவிப்பவர் : அலீ (ரலி)

(குறிப்பு : இது கரீபான ஹதீஸ் ஆகும் என முன்திரி குறிப்பிடுகின்றார்.)


«الْمُسْتَحَاضَةُ إِذَا انْقَضَى حَيْضُهَا اغْتَسَلَتْ كُلَّ يَوْمٍ، وَاتَّخَذَتْ صُوفَةً فِيهَا سَمْنٌ أَوْ زَيْتٌ»


Next Page » « Previous Page