117. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
«إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
117. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
«إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
116. ஒருவர் தன் மனைவியிடம் உடலுறவு மூலம் இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்து விடுகிறார். (இவர் நிலை என்ன?) என்று ஸைத் இப்னு ஸாபித் அன்சாரி(ரலி) அவர்களிடம் மஹ்மூத் இப்னு லுபைதுல் அன்சாரி கேட்க, குளிக்க வேண்டும் என்று ஸைத்(ரலி) கூறினார்கள்.
உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் குளிக்கத் தேவையில்லை என்ற முடிவில் இருந்தார் என மஹ்மூத் கூறினார்கள். உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் இறக்கும் பொது அந்த முடிவில் இருந்து மாறி விட்டார் என ஸைத்(ரலி) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
أَنَّ مَحْمُودَ بْنَ لَبِيدٍ الْأَنْصَارِيَّ سَأَلَ زَيْدَ بْنَ ثَابِتٍ، عَنِ الرَّجُلِ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ؟ فَقَالَ زَيْدٌ: يَغْتَسِلُ. فَقَالَ لَهُ مَحْمُودٌ: إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ كَانَ لَا يَرَى الْغُسْلَ. فَقَالَ لَهُ زَيْدُ بْنُ ثَابِتٍ: «إِنَّ أُبَيَّ بْنَ كَعْبٍ نَزَعَ عَنْ ذَلِكَ، قَبْلَ أَنْ يَمُوتَ»
115. ஒரு விஷயத்தில் நபித் தோழர்கள் கொண்ட கருத்து வேறுபாடு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது. அதை உங்கள் முன் (தீர்ப்புக்காக?) வைப்பதே சிறந்தது எனக் கருதுகிறேன் என்று நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) கூறினார்கள். அது என்ன? ”உன் தாயிடம் எதைப் பற்றிக் கேட்பீரோ, அதை என்னிடம் நீர் கேட்பீராக”” என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ‘ஒருவர் தன் மனைவியிடம் (உடல் உறவு மூலம்) இணைகிறார். பின்பு விந்து வெளியாகாமலேயே பிரிந்தார். (இவர் குளிக்க வேண்டுமா?) என்று கேட்டார். ‘பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு இணைந்து விட்டால் குளிப்பது கடமை” என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதும், உங்களுக்குப் பின்னால் யாரிடமும் இது பற்றி எப்போதும் கேட்க மாட்டேன் என அபூ மூஸா அல் அஷ் அரி(ரலி) கூறினார்கள் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.
(இதன் கருத்து முஸ்லிம், திர்மிதி யில் இடம் பெற்றுள்ளது).
أَنَّ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ أَتَى عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهَا: لَقَدْ شَقَّ عَلَيَّ اخْتِلَافُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَمْرٍ، إِنِّي لَأُعْظِمُ أَنْ أَسْتَقْبِلَكِ بِهِ. فَقَالَتْ مَا هُوَ؟ مَا كُنْتَ سَائِلًا عَنْهُ أُمَّكَ، فَسَلْنِي عَنْهُ. فَقَالَ: الرَّجُلُ يُصِيبُ أَهْلَهُ ثُمَّ يُكْسِلُ وَلَا يُنْزِلُ؟ فَقَالَتْ: «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ». فَقَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ لَا أَسْأَلُ عَنْ هَذَا أَحَدًا، بَعْدَكِ أَبَدًا
114. அபூஸலமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிப்பது எப்போது கடமையாகும்? என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், அபூஸலமாவே! கோழிகளுடன் சேர்ந்து சப்தமிடும் கோழிக் குஞ்சு போன்றவர் நீர் என்பது உமக்குத் தெரியுமா? என்று கூறிவிட்டு, “பெண்ணுறுப்புடன் ஆணுறுப்பு சேர்ந்து விட்டால் குளிப்பது கடமையாகும்” என பதிலளித்தார்கள்.
سَأَلْتُ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا يُوجِبُ الْغُسْلَ؟ فَقَالَتْ: هَلْ تَدْرِي مَا مَثَلُكَ يَا أَبَا سَلَمَةَ مَثَلُ الْفَرُّوجِ يَسْمَعُ الدِّيَكَةَ تَصْرُخُ فَيَصْرُخُ مَعَهَا «إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
பாடம் 26
மறைவுறுப்பு இரண்டு இணைந்து விடடால் குளிப்புக் கடமையாகும்
113. பெண்ணுறுப்பை ஆணுறுப்பு அடைந்தால் குளிப்பது கடமையாகும் என உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆயிஷா(ரலி) ஆகியோர் கூறியதாக ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَعُثْمَانَ بْنَ عَفَّانَ، وَعَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانُوا يَقُولُونَ: «إِذَا مَسَّ الْخِتَانُ الْخِتَانَ فَقَدْ وَجَبَ الْغُسْلُ»
112. குளிப்புக் கடமையான பெண் குளிப்பது பற்றி கேட்கப்பட்ட போது, ”தண்ணீரில் இருந்து தன் தலையின் மீது அவள் மூன்று முறை ஊற்றட்டும். பின்பு தன் கைகளால் அவள் தன் தலையை கோதி விடட்டும் என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள், என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
(புகாரி, அபூதாவூதில் இது இடம் பெற்றுள்ளது).
أَنَّ عَائِشَةَ سُئِلَتْ عَنْ غُسْلِ الْمَرْأَةِ مِنَ الْجَنَابَةِ، فَقَالَتْ: «لِتَحْفِنْ عَلَى رَأْسِهَا ثَلَاثَ حَفَنَاتٍ مِنَ الْمَاءِ، وَلْتَضْغَثْ رَأْسَهَا بِيَدَيْهَا»
111. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கடமையான குளிப்பைக் குளித்தால் தன் வலது கையில் (தண்ணீர்) ஊற்றி, அதைக் கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தனது மறைவுறுப்பைக் கழுவுவார்கள். பின்பு வாய் கொப்பளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்துவார்கள். பின்பு முகத்தைக் கழுவி விட்டு, தன் கண்களில் தெளிப்பார்கள். பின்பு வலது கையைக் கழுவி, இடது கையையும் கழுவுவார்கள். பின்பு தன் தலையை கழுவி விட்டு குளிப்பார்கள். தண்ணீரைத் தன் மீது (ஊற்றி) ஓட விடுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ «فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُمْنَى، فَغَسَلَهَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْثَرَ. ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَنَضَحَ فِي عَيْنَيْهِ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى، ثُمَّ الْيُسْرَى. ثُمَّ غَسَلَ رَأْسَهُ. ثُمَّ اغْتَسَلَ وَأَفَاضَ عَلَيْهِ الْمَاءَ»
110. குளிப்புக் கடமைக்காக (12 முத்து கொள்ளளவு) ஃபரக் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ الْفَرَقُ مِنَ الْجَنَابَةِ»
பாடம் 25
குளிப்பு முறை
109. நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்கும் போது தன் கைகளை கழுவ ஆரம்பிப்பார்கள். பின்பு தொழுகைக்காக ஒளுச் செய்வது போல் ஒளுச் செய்வார்கள். பின்பு தன் விரல்களை தண்ணீருக்குள் நுழைத்து அவைகளை தன் (தலை) முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்பு தன் தலை மீது கைகளால் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றுவார்கள். பின்பு தன் உடல் முழுவதும் தண்ணீரை (ஊற்றி) ஓட விடுவார்கள் என அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ யில் உள்ளது).
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، بَدَأَ «بِغَسْلِ يَدَيْهِ، ثُمَّ تَوَضَّأَ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ، ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلَاثَ غَرَفَاتٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ»
107. ஒருவன் தன் மனைவியை முத்தமிடுவதனால் ஒளுச் செய்தல் அவசியம் என்று அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) கூறுகின்றார்கள்.
(குறிப்பு: மேற்கண்டவைகள் நபிமொழிகள் அல்ல என்பதை கவனத்தில் கொள்க. நபி(ஸல்) அவர்கள் தொழும் போது படுத்திருந்த ஆயிஷா(ரலி) அவர்களின் காலை சுரண்டுவது மூலம் அவர்களைத் தொட்டுள்ளார்கள். மேலும் 5:6 வசனத்தில் உள்ள ”முலாமஸத்”” என்ற வாசகத்திற்கு, ‘உடலுறவு கொள்வது” என்பதே பொருளாகும்).
«مِنْ قُبْلَةِ الرَّجُلِ امْرَأَتَهُ الْوُضُوءُ»
சமீப விமர்சனங்கள்