Author: Abdul Hakkim

Hakim-8718

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8718. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில் ஒரு தடவை) அமர்ந்திருக்கும்போது, அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரிப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைச் சிரிக்க வைத்தது எது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மனிதர்கள், கண்ணியம் மிக்க நம் இரட்சகனின் முன்னிலையில் மண்டியிட்டனர். அவ்விருவரில் ஒருவர், ‘என் இரட்சகனே! என் சகோதரனால் எனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு ஈடுசெய்யும் உரிமையை எனக்கு கொடு!’ என்று கூறினார். அப்போது அல்லாஹ் அந்த உரிமையைக் கோரியவரிடம், ‘உன் சகோதரனிடமோ, அவனது நன்மைகளில் எதுவும் மீதமில்லை! நீ இப்போது என்ன செய்வாய்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘என் இரட்சகனே! அப்படியானால், என்மீதுள்ள பாவச் சுமைகளை அவன் சுமக்கட்டும்!’ என்று கூறினார்.”

(இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் கூறியபோது) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக, அந்த நாள் மகத்தான நாள். தங்கள்மீதுள்ள பாவச் சுமைகளை யாரேனும் சுமந்துகொள்ள மாட்டார்களா என்று மக்கள் ஏங்கக்கூடிய நாள் அது!”

அப்போது

بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ إِذْ رَأَيْنَاهُ ضَحِكَ حَتَّى بَدَتْ ثَنَايَاهُ، فَقَالَ لَهُ عُمَرُ: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي؟ قَالَ: ” رَجُلَانِ مِنْ أُمَّتِي جَثَيَا بَيْنَ يَدَيْ رَبِّ الْعِزَّةِ، فَقَالَ أَحَدُهُمَا: يَا رَبِّ خُذْ لِي مَظْلِمَتِي مِنْ أَخِي، فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلطَّالِبِ: فَكَيْفَ تَصْنَعُ بِأَخِيكِ وَلَمْ يَبْقَ مِنْ حَسَنَاتِهِ شَيْءٌ؟ قَالَ: يَا رَبِّ فَلْيَحْمِلْ مِنْ أَوْزَارِي ” قَالَ: وَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبُكَاءِ، ثُمَّ قَالَ: ” إِنَّ ذَاكَ الْيَوْمَ عَظِيمٌ يَحْتَاجُ النَّاسُ أَنْ يُحْمَلَ عَنْهُمْ مِنْ أَوْزَارِهِمْ، فَقَالَ اللَّهُ تَعَالَى لِلطَّالِبِ: ” ارْفَعْ بَصَرَكَ فَانْظُرْ فِي الْجِنَّانِ فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: يَا رَبِّ أَرَى مَدَائِنَ مِنْ ذَهَبٍ وَقُصُورًا مِنْ ذَهَبً مُكَلَّلَةً بِالُّلؤْلُؤِ لِأَيِّ نَبِيٍّ هَذَا أَوْ لِأَيِّ صِدِّيقٍ هَذَا أَوْ لِأَيِّ شَهِيدٍ هَذَا؟ قَالَ: هَذَا لِمَنْ أَعْطَى الثَّمَنَ، قَالَ: يَا رَبِّ وَمَنْ يَمْلِكُ ذَلِكَ؟ قَالَ: أَنْتَ تَمْلِكُهُ، قَالَ: بِمَاذَا؟ قَالَ: بِعَفْوِكَ عَنْ أَخِيكَ، قَالَ: يَا رَبِّ فَإِنِّي قَدْ عَفَوْتُ عَنْهُ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: فَخُذْ بِيَدِ أَخِيكَ فَأَدْخِلْهُ الْجَنَّةَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «اتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ فَإِنَّ اللَّهَ تَعَالَى يُصْلِحُ بَيْنَ الْمُسْلِمِينَ»


Kubra-Bayhaqi-9351

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9351.


جِئْتُ مُسَلِّمًا عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَصَحِبْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ حَتَّى دَخَلَ فِي الطَّوَافِ فَطَافَ ثَلَاثَةً رَمَلًا وَأَرْبَعَةً مَشْيًا , ثُمَّ إِنَّهُ صَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ , ثُمَّ إِنَّهُ عَادَ إِلَى الْحَجَرِ فَاسْتَلَمَهُ , ثُمَّ خَرَجَ إِلَى الصَّفَا فَقَامَ عَلَى الشِّقِّ الَّذِي عَلَى الصَّفَا فَلَبَّى فَقُلْتُ: إِنِّي نُهِيتُ عَنِ التَّلْبِيَةِ , فَقَالَ: ” وَلَكِنْ آمُرُكَ بِهَا كَانَتِ التَّلْبِيَةُ اسْتِجَابَةً اسْتَجَابَهَا إِبْرَاهِيمُ ” فَلَمَّا هَبَطَ إِلَى الْوَادِي سَعَى , فَقَالَ: ” اللهُمَّ اغْفِرْ وَارْحَمْ , وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ “


Darimi-205

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

205. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆன் மக்களுக்கு மத்தியில் பரவலாகும். அதை பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் ஓதுவார்கள்.

அப்போது ஒரு மனிதர் கூறுவார்: நான் குர்ஆனை ஓதிவிட்டேன். ஆனால், நான் பின்பற்றப்படவில்லை. (அதாவது மக்கள் என்னைப் பின்பற்றவில்லை). அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவர்களுக்கு மத்தியில் நின்று அதை நிறைவேற்றுவேன். ஒருவேளை நான் பின்பற்றப்படலாம். அவர் அவர்களுக்கு மத்தியில் நின்று அதை நிறைவேற்றுவார். ஆனால் அவர் பின்பற்றப்படமாட்டார்.

அப்போது அவர், “நான் குர்ஆனை ஓதிவிட்டேன். ஆனால் நான் பின்பற்றப்படவில்லை. நான் அவர்களுக்கு மத்தியில் நின்று அதை நிறைவேற்றினேன். அப்போதும் நான் பின்பற்றப்படவில்லை. நான் எனது வீட்டில் எனக்கென ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொள்வேன். ஒருவேளை நான் பின்பற்றப்படலாம்” என்று கூறுவார். அவர் தனது வீட்டில் ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொள்வார். அப்போதும் அவர் பின்பற்றப்படமாட்டார்.

அப்போது அவர், “நான் குர்ஆனை ஓதிவிட்டேன். ஆனால் நான் பின்பற்றப்படவில்லை. நான் அவர்களுக்கு மத்தியில் நின்று நிறைவேற்றினேன். அப்போதும் நான் பின்பற்றப்படவில்லை. எனது வீட்டில் எனக்கென ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொண்டேன். அப்போதும் நான் பின்பற்றப்படவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக!

” يُفْتَحُ الْقُرْآنُ عَلَى النَّاسِ حَتَّى يَقْرَأَهُ الْمَرْأَةُ وَالصَّبِيُّ وَالرَّجُلُ، فَيَقُولُ الرَّجُلُ: قَدْ قَرَأْتُ الْقُرْآنَ فَلَمْ أُتَّبَعُ، وَاللَّهِ لَأَقُومَنَّ بِهِ فِيهِمْ لَعَلِّي أُتَّبَعُ، فَيَقُومُ بِهِ فِيهِمْ فَلَا يُتَّبَعُ، فَيَقُولُ: قَدْ قَرَأْتُ الْقُرْآنَ فَلَمْ أُتَّبَعْ، وَقَدْ قُمْتُ بِهِ فِيهِمْ، فَلَمْ أُتَّبَعْ، لَأَحتَظِرَنَّ فِي بَيْتِي مَسْجِدًا لَعَلِّي أُتَّبَعُ، فَيَحْتَظِرُ فِي بَيْتِهِ مَسْجِدًا فَلَا يُتَّبَعُ، فَيَقُولُ: قَدْ قَرَأْتُ الْقُرْآنَ فَلَمْ أُتَّبَعْ، وَقُمْتُ بِهِ فِيهِمْ فَلَمْ أُتَّبَعْ، وَقَدِ احْتظرْتُ فِي بَيْتِي مَسْجِدًا، فَلَمْ أُتَّبَعْ، وَاللَّهِ لَآتِيَنَّهُمْ: بِحَدِيثٍ لَا يَجِدُونَهُ فِي كِتَابِ اللَّهِ – جَلَّ وَعَلَا – وَلَمْ يَسْمَعُوهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَعَلِّي أُتَّبَعُ قَالَ مُعَاذٌ: فَإِيَّاكُمْ وَمَا جَاءَ بِهِ فَإِنَّ مَا جَاءَ بِهِ ضَلَالَةٌ “


raavi-13926-ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல் - حماد بن زيد بن درهم الأزدي - أبو إسماعيل இறப்பு: ஹி-179. தரம்: மிகப் பலமானவர்; பிரபலமான முக்கிய மார்க்க அறிஞர்; ஹதீஸை அறிவிப்பதில் பேணுதல் உள்ளவர். இயற்பெயர்: ஹம்மாத் தந்தை பெயர்: ஸைத் வமிசம்: அல்அஸ்தீ, ... புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஇஸ்மாயீ, அல்அஸ்ரக், அள்ளரீர், ... ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரி-98. இறப்பு:...

Musnad-Ahmad-8553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8553.


«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّ جَارِ الْمَقَامِ، فَإِنَّ جَارَ الْمُسَافِرِ إِذَا شَاءَ أَنْ يُزَايِلَ زَايَلَ»


Nasaayi-5502

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

தீய அண்டை வீட்டாரை விட்டுப் பாதுகாப்புத் தேடுதல்.

5502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிலையான வசிப்பிடத்தில் உள்ள தீய அண்டை வீட்டாரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில், (பயணம் செய்து வந்துள்ள) கிராமப்புறத்து அண்டை வீட்டாரோ உங்களை விட்டு (இடம் பெயர்ந்து) சென்றுவிடுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَعَوَّذُوا بِاللَّهِ، مِنْ جَارِ السَّوْءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ عَنْكَ»


Al-Adabul-Mufrad-117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

117.


كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا يَتَحَوَّلُ»


Almujam-Alawsat-2757

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2757. நபி (ஸல்) அவர்கள் நீரோடை ஓடும் பள்ளமான இடத்தில் விரைந்து நடந்தால், “அல்லாஹும் மஃக்ஃபிர் வர்ஹம், வ அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! மன்னிப்பாயாக! மேலும், கருணை காட்டுவாயாக! நீயே எல்லோரையும்விட மிகவும் கண்ணியமானவனும், மிக்க கொடையாளியும் ஆவாய்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து லைஸ் பின் அபூஸுலைம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அப்துல்வாரிஸ் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَعَى فِي بَطْنِ الْمَسِيلِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْ، وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


Alilal-Ibn-Abi-Hatim-2029

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2029. இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (அபூஹாதிம்) அவர்களிடம், ஸைத் பின் முபாரக் அஸ்ஸன்ஆனீ என்பவர் ஸல்லாம் பின் வஹ்ப் —> அவரின் தந்தை வஹ்ப் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட ஹதீஸ் குறித்துக் கேட்டேன்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.


அதற்கு, என் தந்தை (அபூஹாதிம்) அவர்கள், “இந்தச் செய்தி ‘முன்கர்’ – மறுக்கப்பட வேண்டிய செய்தி” என்று கூறினார்கள்.


أَنَّ عُثمانَ بنَ عَفّانَ سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَن {بِسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} ، فَقالَ : هُوَ اسمٌ مِن أَسماءِ اللهِ تَعالَى وَما بَينَهُ وَبَينَ اسمِ اللهِ الأَكبَرِ إِلاَّ كَما بَينَ سَوادِ العَينَينِ وَبَياضِهِما مِنَ القُربِ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.


Next Page » « Previous Page