Author: Abdul Hakkim

Tirmidhi-2495

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2495. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்: ‘என் அடியார்களே! நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே, எனவே, என்னிடம் நேர்வழி கேளுங்கள், நான் உங்களுக்கு நேர்வழி காட்டுவேன். நீங்கள் அனைவரும் ஏழைகளே, நான் செல்வந்தனாக்கியவர்களைத் தவிர, எனவே, என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு வழங்குவேன்.

நான் மன்னித்தவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே, எனவே, உங்களில் எவர் நான் மன்னிக்கக்கூடியவன் என்பதை அறிந்து, என் மன்னிப்பைக் கோருகிறாரோ, நான் அவரை மன்னிப்பேன், அது எனக்கு ஒரு பொருட்டல்ல (அது என்னை பாதிக்காது). உங்களில் முதலாமவரும், உங்களில் கடைசியானவரும், உங்களில் உயிருடன் இருப்பவர்களும், உங்களில் இறந்தவர்களும், உங்களில் ஈரமானவர்களும், உங்களில் உலர்ந்தவர்களும் என் அடியார்களில் அதிக தக்வா (இறையச்சம்) உள்ள இதயத்திற்கு உதவ ஒன்று கூடினாலும், அது என் ஆட்சியில் ஒரு கொசுவின் இறக்கையளவு கூட கூட்டாது.

உங்களில் முதலாமவரும், உங்களில் கடைசியானவரும், உங்களில் உயிருடன் இருப்பவர்களும், உங்களில் இறந்தவர்களும், உங்களில் ஈரமானவர்களும், உங்களில் உலர்ந்தவர்களும் என் அடியார்களில் மிக மோசமான இதயத்திற்கு உதவ ஒன்று கூடினாலும், அது என் ஆட்சியில் இருந்து

” يَقُولُ اللَّهُ تَعَالَى: يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ فَسَلُونِي الهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَكُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى المَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا عَلَى أَتْقَى قَلْبِ عَبْدٍ مِنْ عِبَادِي مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا عَلَى أَشْقَى قَلْبِ عَبْدٍ مِنْ عِبَادِي مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلَ كُلُّ إِنْسَانٍ مِنْكُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ فَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مِنْكُمْ مَا سَأَلَ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي إِلَّا كَمَا لَوْ أَنَّ أَحَدَكُمْ مَرَّ بِالبَحْرِ فَغَمَسَ فِيهِ إِبْرَةً ثُمَّ رَفَعَهَا إِلَيْهِ، ذَلِكَ بِأَنِّي جَوَادٌ وَاجِدٌ مَاجِدٌ أَفْعَلُ مَا أُرِيدُ عَطَائِي كَلَامٌ وَعَذَابِي كَلَامٌ إِنَّمَا أَمْرِي لِشَيْءٍ إِذَا أَرَدْتُهُ أَنْ أَقُولَ لَهُ: كُنْ، فَيَكُونُ


Musnad-Ahmad-21540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21540. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“என் அடியார்களே! நான் பாவங்களை மன்னித்து அருள்புரிந்தவரைத் தவிர உங்கள் யாவரும் பாவிகளே! எனவே, நீங்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்களை மன்னிப்பேன்! மேலும், உங்களில் எவரேனும் பாவங்களை மன்னிக்க நான் ஆற்றலுடையவன் என்று அறிந்து கொண்டு, என் ஆற்றலின் மூலம் என்னிடம் பாவமன்னிப்புத் தேடினால் அவரை நான் மன்னிப்பேன். நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்.

மேலும், நான் நேர்வழியில் செலுத்தியவரைத் தவிர உங்கள் யாவரும் வழிதவறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் நேர்வழி கேளுங்கள்! உங்களுக்கு நேர்வழி காட்டுவேன்!

மேலும், நான் செல்வம் அளித்தவரைத் தவிர உங்கள் யாவரும் வறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் கேளுங்கள்! உங்களுக்கு நான் உணவளிப்பேன்!

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும்…, உங்கள் காய்ந்ததுமான… யாவரும் என் அடியார்களில் மிக அஞ்சிய அடியானின் உள்ளத்தின் மீது கூடி நின்றாலும், என் ஆட்சியில் ஓர் கொசுவின் இறக்கையளவும் அதிகரிக்க முடியாது.

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும், உங்கள் காய்ந்ததுமான யாவரும்

” إِنَّ اللَّهَ يَقُولُ: يَا عِبَادِي، كُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي، غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَكُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَأُولَاكُمْ وَأُخْرَاكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي لَمْ يَزِيدُوا فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَأُولَاكُمْ وَآَخِرَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، وَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مَا سَأَلَ، لَمْ يَنْقُصْنِي، إِلَّا كَمَا لَوْ مَرَّ أَحَدُكُمْ عَلَى شَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ إِبْرَةً ثُمَّ انْتَزَعَهَا، ذَلِكَ لِأَنِّي جَوَادٌ مَاجِدٌ وَاجِدٌ، أَفْعَلُ مَا أَشَاءُ، عَطَائِي كَلَامٌ، وَعَذَابِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “


Abu-Dawood-4611

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

4611. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் தோழர்களில் ஒருவரான யஸீத் பின் உமைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எந்த ஒரு திக்ருடைய அமர்வில் அமர்ந்தாலும், ‘அல்லாஹ்தான் நீதியுள்ள தீர்ப்பாளன்; சந்தேகங்கொண்டோர் அழிந்தனர்!’ என்று கூறாமல் இருந்ததில்லை.

ஒருநாள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:

“நிச்சயமாக உங்களுக்குப் பின்னால் பெரும் குழப்பங்கள் வர இருக்கின்றன. அவற்றில் (சில), செல்வம் (அளவுக்கு அதிகமாக) பெருகும். மேலும், குர்ஆனின் (கல்வி) விரிவுபடுத்தப்படும். அதனால் அதை நம்பிக்கை கொண்டோரும், நயவஞ்சகர்களும், ஆணும், பெண்ணும், சிறியோரும், பெரியோரும், அடிமையும், சுதந்திரமானவரும் என அனைவரும் கற்றுக்கொள்வார்கள்.

அப்போது (குர்ஆனைப் படித்த) ஒருவர், ‘நான் குர்ஆனைப் படித்துள்ளேன்! ஏன் மக்கள் என்னைப் பின்பற்ற மறுக்கிறார்கள்? நான் அவர்களுக்காக இதல்லாத வேறொன்றைப் புதிதாக உருவாக்காமல், அவர்கள் என்னைப் பின்பற்றப்போவதில்லை’ என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.

எனவே, நீங்கள் புதிதாக உருவாக்கப்பட்டவற்றை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடே ஆகும்.

ஒரு அறிஞர் நேர்வழியிலிருந்து விலகுவதைப் பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் சில

كَانَ لَا يَجْلِسُ مَجْلِسًا لِلذِّكْرِ حِينَ يَجْلِسُ إِلَّا قَالَ: «اللَّهُ حَكَمٌ قِسْطٌ هَلَكَ الْمُرْتَابُونَ»، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَوْمًا: ” إِنَّ مِنْ وَرَائِكُمْ فِتَنًا يَكْثُرُ فِيهَا الْمَالُ، وَيُفْتَحُ فِيهَا الْقُرْآنُ حَتَّى يَأْخُذَهُ الْمُؤْمِنُ وَالْمُنَافِقُ، وَالرَّجُلُ، وَالْمَرْأَةُ، وَالصَّغِيرُ، وَالْكَبِيرُ، وَالْعَبْدُ، وَالْحُرُّ، فَيُوشِكُ قَائِلٌ أَنْ يَقُولَ: مَا لِلنَّاسِ لَا يَتَّبِعُونِي وَقَدْ قَرَأْتُ الْقُرْآنَ؟ مَا هُمْ بِمُتَّبِعِيَّ حَتَّى أَبْتَدِعَ لَهُمْ غَيْرَهُ، فَإِيَّاكُمْ وَمَا ابْتُدِعَ، فَإِنَّ مَا ابْتُدِعَ ضَلَالَةٌ، وَأُحَذِّرُكُمْ زَيْغَةَ الْحَكِيمِ، فَإِنَّ الشَّيْطَانَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ عَلَى لِسَانِ الْحَكِيمِ، وَقَدْ يَقُولُ الْمُنَافِقُ كَلِمَةَ الْحَقِّ “، قَالَ: قُلْتُ لِمُعَاذٍ: مَا يُدْرِينِي رَحِمَكَ اللَّهُ أَنَّ الْحَكِيمَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ وَأَنَّ الْمُنَافِقَ قَدْ يَقُولُ كَلِمَةَ الْحَقِّ؟ قَالَ: «بَلَى، اجْتَنِبْ مِنْ كَلَامِ الْحَكِيمِ الْمُشْتَهِرَاتِ الَّتِي يُقَالُ لَهَا مَا هَذِهِ، وَلَا يُثْنِيَنَّكَ ذَلِكَ عَنْهُ، فَإِنَّهُ لَعَلَّهُ أَنْ يُرَاجِعَ، وَتَلَقَّ الْحَقَّ إِذَا سَمِعْتَهُ فَإِنَّ عَلَى الْحَقِّ نُورًا»،


Ibn-Majah-3858

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3858. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ஹம்த், லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, அல்மன்னான், பதீஉஸ் ஸமாவாதி வல்அர்ள். துல்ஜலாலி வல்இக்ராம்

(பொருள்: அல்லாஹ்வே! எல்லாப் புகழும் உனக்கே உரியது என்பதன் மூலம் நான் உன்னிடம் கேட்கிறேன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை, நீ தனித்தவன், உனக்கு இணையில்லை. பேருபகாரன், வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன், மகத்துவமும் கண்ணியமும் உடையவன்.)

என்று கூறுவதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர் அல்லாஹ்வின் மகத்தான பெயரைக் கொண்டு கேட்டிருக்கிறார். அதன் மூலம் அவனிடம் கேட்டால் அவன் கொடுக்கிறான். அதன் மூலம் அவனை அழைத்தால் அவன் பதிலளிக்கிறான்” என்று கூறினார்கள்.


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ، فَقَالَ: «لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى، وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ»


Abu-Dawood-2038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2038.


أَنَّ سَعْدًا، وَجَدَ عَبِيدًا مِنْ عَبِيدِ الْمَدِينَةِ يَقْطَعُونَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ فَأَخَذَ مَتَاعَهُمْ، وَقَالَ: يَعْنِي لِمَوَالِيهِمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى أَنْ يُقْطَعَ مِنْ شَجَرِ الْمَدِينَةِ شَيْءٌ، وَقَالَ: «مَنْ قَطَعَ مِنْهُ شَيْئًا فَلِمَنْ أَخَذَهُ سَلَبُهُ»


Kubra-Bayhaqi-5376

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5376. உபைத் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலிலிருந்து ஒரு முற்பகல் நேரத்தில் வெளியேறினேன். அப்போது, ஒரு பெண் எங்களைச் சந்தித்தாள். அவளிடமிருந்த நறுமணம் போன்ற ஒன்றை நான் என் மூக்கால் அதற்கு முன் ஒருபோதும் முகர்ந்ததில்லை. அவளிடம் அபூஹுரைரா (ரலி) “அஸ்ஸலாமு அலைக்கி” (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) எனக் கூறினார். அதற்கு அவள், “வ அலைக்க” (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்) எனக் கூறினாள்.

அவர், “எங்கே செல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டார். அவள், “பள்ளிவாசலுக்கு” எனக் கூறினாள். அவர், “இந்த நறுமணத்தால் எதற்காக நீ மணம் பூசிக்கொண்டாய்?” எனக் கேட்டார். அவள், “பள்ளிவாசலுக்காகத்தான்” எனக் கூறினாள். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” எனக் கேட்டார். அவள், “அல்லாஹ்வின் மீதாணையாக” எனக் கூறினாள். அவர் மீண்டும், “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” எனக் கேட்டார். அவள், “அல்லாஹ்வின் மீதாணையாக” எனக் கூறினாள்.

அவர், “என்னுடைய நேசரான அபுல்காஸிம் (முஹம்மத் ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: ஒரு பெண், தன் கணவனுக்காக அன்றி வேறொருவருக்காக வாசனை பூசிக்கொண்டால், அவள் அந்த வாசனையிலிருந்து பெருந்துடக்குக்கு குளிப்பதைப் போன்ற ஒரு குளியலை மேற்கொள்ளும் வரை, அவளுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

எனவே,

خَرَجْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ مِنَ الْمَسْجِدِ ضُحًى فَلَقِيَتْنَا امْرَأَةٌ بِهَا مِنَ الْعِطْرِ شَيْءٌ لَمْ أَجِدْ بِأَنْفِي مِثْلَهُ قَطُّ، فَقَالَ لَهَا أَبُو هُرَيْرَةَ: عَلَيْكِ السَّلَامُ، فَقَالَتْ: وَعَلَيْكَ، قَالَ: فَأَيْنَ تُرِيدِينَ؟ قَالَتْ: الْمَسْجِدَ، قَالَ: وَلِأِيِّ شَيْءٍ تَطَيَّبْتِ بِهَذَا الطِّيبِ؟ قَالَتْ: لِلْمَسْجِدِ، قَالَ: آللَّهِ؟ قَالَتْ: آللَّهِ، قَالَ: آللَّهِ؟ قَالَتْ: آللَّهِ، قَالَ: فَإِنَّ حِبِّي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنِي أَنَّهُ ” لَا تُقْبَلُ لِامْرَأَةٍ صَلَاةٌ تَطَيَّبَتْ بِطِيبٍ لِغَيْرِ زَوْجِهَا حَتَّى تَغْتَسِلَ مِنْهُ غُسْلَهَا مِنَ الْجَنَابَةِ “، فَاذْهَبِي فَاغْتَسِلِي مِنْهُ، ثُمَّ ارْجِعِي فَصَلِّي.


Nasaayi-1381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1381. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் (வெள்ளிக்கிழமை தலையைக்) கழுவி, குளித்து, பள்ளிவாசலுக்கு முன்னதாகவே வந்து, இமாமுக்கு அருகில் அமர்ந்து, வீண் பேச்சு பேசாமல் இருக்கிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு முழுவதும் நோன்பு நோற்று, (இரவில்) நின்று வணங்கியதற்கான கூலி கிடைக்கும்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)


«مَنْ غَسَّلَ وَاغْتَسَلَ، وَغَدَا وَابْتَكَرَ، وَدَنَا مِنَ الْإِمَامِ وَلَمْ يَلْغُ كَانَ لَهُ بِكُلِّ خُطْوَةٍ عَمَلُ سَنَةٍ صِيَامُهَا وَقِيَامُهَا»


Abu-Dawood-3477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3477. ஹிஜ்ரத் செய்த நபித்தோழர்களில் ஒருவர் கூறினார்:

நான் நபி (ஸல்) அவர்களுடன் மூன்று முறை போரில் கலந்துக் கொண்டுள்ளேன். அவர்கள், “முஸ்லிம் (மக்கள்) அனைவருக்கும் மூன்று (விஷயங்களில்) பொதுவான பங்கு உண்டு. அவை மேய்ச்சல் நிலம், தண்ணீர், நெருப்பு” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.


غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا أَسْمَعُهُ، يَقُولُ: ” الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ: فِي الْكَلَإِ، وَالْمَاءِ، وَالنَّارِ “


Next Page » « Previous Page