தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1697

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1697. ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! மக்களுக்கென்ன நேர்ந்தது? அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்களே! ஆனால் நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே!’ எனக் கேட்டேன்.

அதற்கவர்கள் ‘நான் தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன். என்னுடைய பலிப்பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்க விட்டுள்ளேன்; எனவே நான் ஹஜ்ஜை நிறைவேற்றாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன்!’ எனக் கூறினார்கள்.
Book :25

(புகாரி: 1697)

بَابُ فَتْلِ القَلاَئِدِ لِلْبُدْنِ وَالبَقَرِ

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَتْ

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا شَأْنُ النَّاسِ حَلُّوا وَلَمْ تَحْلِلْ أَنْتَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي، وَقَلَّدْتُ هَدْيِي، فَلاَ أَحِلُّ حَتَّى أَحِلَّ مِنَ الحَجِّ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.