தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1851

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 இஹ்ராம் கட்டியிருப்பவர் இறந்துவிட்டால் நபிவழியின்படி அவருக்காகச் செய்ய வேண்டியவை. 

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் தங்கியிருந்தபோது அவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்து விட, அவர் மரணித்துவிட்டார்.

நபி(ஸல்) அவர்கள், ‘இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரைக் குளிப்பாட்டுங்கள்; இரண்டு ஆடைகளில் இவருக்கு கபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரின் தலையை மூடாதீர்கள்! ஏனெனில், கியாமத் நாளில் இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்!’ எனக் கூறினார்கள்.
Book : 28

(புகாரி: 1851)

بَابُ سُنَّةِ المُحْرِمِ إِذَا مَاتَ

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ رَجُلًا كَانَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَقَصَتْهُ  نَاقَتُهُ وَهُوَ مُحْرِمٌ، فَمَاتَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ، وَلاَ تَمَسُّوهُ بِطِيبٍ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.