தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3074

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 190

(போர்ச் செல்வத்தில்) சிறிதளவு மோசடி செய்வது(ம் பாவமே).

(மோசடியாக மேலங்கியொன்றை எடுத்து வைத்திருந்த கிர்கிரா என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்த போது) நபி (ஸல்) அவர்கள் அவரது பொருள்களை எரித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறவில்லை.

இது தான் (அதாவது: எரித்தார்கள் என்று கூறப்படாத இந்த அறிவிப்பு தான் எரித்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள அறிவிப்பை விட) சரியானதாகும்.

 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக ‘கிர்கிரா’ என்றழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்துவிட்டார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்தில் நுழைவார்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.

‘(என் ஆசிரியர்) இப்னு சலாம் (ரஹ்) ‘கிர்கிரா’வை ‘கர்கரா’ என்று வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள்’ என அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.
Book : 56

(புகாரி: 3074)

بَابُ القَلِيلِ مِنَ الغُلُولِ

وَلَمْ يَذْكُرْ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ حَرَّقَ مَتَاعَهُ، وَهَذَا أَصَحُّ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ

كَانَ عَلَى ثَقَلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَجُلٌ يُقَالُ لَهُ كِرْكِرَةُ، فَمَاتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ فِي النَّارِ»، فَذَهَبُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا،

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: “قَالَ ابْنُ سَلاَمٍ: كَرْكَرَةُ يَعْنِي بِفَتْحِ الكَافِ: وَهُوَ مَضْبُوطٌ كَذَا





இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …புகாரி-3074 , இப்னு மாஜா-2849 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.