தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3350

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம்(அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘நான் உங்களிடம், எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்’ என்று கூறுவார். அப்போது இப்ராஹீம்(அலை) அவர்கள், ‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?’ என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம், ‘நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)’ என்று பதிலளிப்பான். பிறகு ‘இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்’ என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில், அது போடப்படும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60

(புகாரி: 3350)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَخْبَرَنِي أَخِي عَبْدُ الحَمِيدِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

يَلْقَى إِبْرَاهِيمُ أَبَاهُ آزَرَ يَوْمَ القِيَامَةِ، وَعَلَى وَجْهِ آزَرَ قَتَرَةٌ وَغَبَرَةٌ، فَيَقُولُ لَهُ إِبْرَاهِيمُ: أَلَمْ أَقُلْ لَكَ لاَ تَعْصِنِي، فَيَقُولُ أَبُوهُ: فَاليَوْمَ لاَ أَعْصِيكَ، فَيَقُولُ إِبْرَاهِيمُ: يَا رَبِّ إِنَّكَ وَعَدْتَنِي أَنْ لاَ تُخْزِيَنِي يَوْمَ يُبْعَثُونَ، فَأَيُّ خِزْيٍ أَخْزَى مِنْ أَبِي الأَبْعَدِ؟ فَيَقُولُ اللَّهُ تَعَالَى: ” إِنِّي حَرَّمْتُ الجَنَّةَ عَلَى الكَافِرِينَ، ثُمَّ يُقَالُ: يَا إِبْرَاهِيمُ، مَا تَحْتَ رِجْلَيْكَ؟ فَيَنْظُرُ، فَإِذَا هُوَ بِذِيخٍ مُلْتَطِخٍ، فَيُؤْخَذُ بِقَوَائِمِهِ فَيُلْقَى فِي النَّارِ


Bukhari-Tamil-3350.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3350.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இணைவைப்பாளர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக் கூடாது என்று அல்லாஹ் உலகத்தில் கண்டித்த பிறகு அவர்கள் திருந்தி விட்டர்கள். (அல்குர்ஆன் 9:114)
  • இதன் பிறகும் அதே கோரிக்கையை எப்படி திரும்பவும் கேட்பார்கள்? எனவே, இது குர்ஆனுக்கு முரணான, கருத்து பிழையுள்ள பலவீனமான செய்தியாகும்.

2 comments on Bukhari-3350

  1. https://tamil.quranandhadis.com/muslim-357/

    இதே போன்று நபியின் பெரிய தந்தை நபியின் பரிந்துரை மூலம் குறைந்த தேதனை கொடுக்கப்படுவார் என்பதையும் நீங்கள் மறுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இணைவைப்போருக்கு பாவமன்னிப்பு கேட்பதை தான் அல்லாஹ், தனது நபிக்கும் முஸ்லிம்களுக்கும் தடை செய்துள்ளேன். பாவமன்னிப்பின் மூலம் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் அபூதாலிப் அவர்களுக்கு இந்த நிலை இல்லை.

      இதுவும், இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தை சம்பந்தப்பட்ட நிகழ்வும் ஒன்றல்ல.

      (ஒரு செய்தியை கருத்தின் அடிப்படையில் சரியில்லை என்று மறுப்பது ஒவ்வொருவரின் புரிதலுக்கு தக்கவாறு வேறுபடும். இதற்கு கூறப்படும் காரணங்களையும், எதிர்வாதங்களையும் வைத்தே நாம் முடிவு செய்ய வேண்டும். எனவே இது போன்ற செய்திகளுக்கு உடனே தரத்தை பதிவிட எதிர்பார்க்க வேண்டாம்.

      நமது தளத்தில் இதுபோன்ற செய்திகளின் தரங்களை பலரின் கருத்துக்களுடன் ஒப்பிட்டு பார்த்தே பதிவு செய்வோம்.)

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.