தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5889

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77

(புகாரி: 5889)

حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: الزُّهْرِيُّ، حَدَّثَنَا، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رِوَايَةً

الفِطْرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الفِطْرَةِ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ





(குறிப்பு: ஃபித்ரத்-இயற்கை மரபு என்பதற்கு நபிமார்களின் நடைமுறை என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் பொருள் கூறியுள்ளனர். இந்த நடைமுறை மக்களிடம் பரவி அதுவே இயற்கையாக, வழமையாக செய்யும் பண்பாக மாறிவிட்டது)

மேலும் பார்க்க: அஹ்மத்-7139 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.