Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1153

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1153.


أَنَّ سَعِيدَ بْنَ الْعَاصِ، سَأَلَ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ، وَحُذَيْفَةَ بْنَ الْيَمَانِ، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَبِّرُ فِي الْأَضْحَى وَالْفِطْرِ؟ فَقَالَ أَبُو مُوسَى: «كَانَ يُكَبِّرُ أَرْبَعًا تَكْبِيرَهُ عَلَى الْجَنَائِزِ»، فَقَالَ حُذَيْفَةُ: صَدَقَ، فَقَالَ أَبُو مُوسَى: «كَذَلِكَ كُنْتُ أُكَبِّرُ فِي الْبَصْرَةِ، حَيْثُ كُنْتُ عَلَيْهِمْ»، وَقَالَ أَبُو عائِشَةَ: «وَأَنَا حَاضِرٌ سَعِيدَ بْنَ الْعَاصِ»


Abu-Dawood-932

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

932.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَرَأَ {وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، قَالَ: «آمِينَ»، وَرَفَعَ بِهَا صَوْتَهُ


Abu-Dawood-2083

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(மணப்பெண்ணின்) காப்பாளர்.

2083. “தனது காப்பாளரின் அனுமதியின்றி, எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்தால் அவளது திருமணம் செல்லாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு இதை மூன்று தடவை கூறினார்கள்.

“அவளுடன் தாம்பத்தியம் கொண்டால், அவளுடைய கற்புரிமைக்காக மஹர் கொடுக்கப்பட வேண்டும். (காப்பாளர்களும், மணப்பெண்ணும்) சச்சரவு செய்தால், காப்பாளர் இல்லாதவருக்கு ஆட்சியாளரே (அல்லது நீதிபதியே) காப்பாளர் ஆவார்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«أَيُّمَا امْرَأَةٍ نَكَحَتْ بِغَيْرِ إِذْنِ مَوَالِيهَا، فَنِكَاحُهَا بَاطِلٌ»، ثَلَاثَ مَرَّاتٍ «فَإِنْ دَخَلَ بِهَا فَالْمَهْرُ لَهَا بِمَا أَصَابَ مِنْهَا، فَإِنْ تَشَاجَرُوا فَالسُّلْطَانُ وَلِيُّ مَنْ لَا وَلِيَّ لَهُ»


Tirmidhi-2721

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2721.

நான் நபி (ஸல்) அவர்களைக் காண விரும்பினேன், ஆனால் முடியவில்லை. எனவே நான் அமர்ந்தேன். அப்போது சிலர் அங்கு வந்தனர். நான் அவர்களை அறியவில்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடையே சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் முடித்ததும், அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களுடன் எழுந்தனர். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அதைக் கண்டதும் நான், “உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு சாந்தி என்பது இறந்தவர்களை வாழ்த்தும் முறையாகும். உங்களுக்கு சாந்தி என்பது இறந்தவர்களை வாழ்த்தும் முறையாகும்.” என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் என்னை நோக்கித் திரும்பி, “ஒரு முஸ்லிம் தனது சகோதரர் முஸ்லிமைச் சந்தித்தால், ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு’ என்று கூறட்டும்” என்றார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் அளித்தார்கள்: “உங்களுக்கும் (சாந்தி உண்டாகட்டும்), அல்லாஹ்வின் கருணையும் (உண்டாகட்டும்), உங்களுக்கும் (சாந்தி உண்டாகட்டும்), அல்லாஹ்வின் கருணையும் (உண்டாகட்டும்), உங்களுக்கும் (சாந்தி

طَلَبْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أَقْدِرْ عَلَيْهِ فَجَلَسْتُ، فَإِذَا نَفَرٌ هُوَ فِيهِمْ وَلَا أَعْرِفُهُ وَهُوَ يُصْلِحُ بَيْنَهُمْ، فَلَمَّا فَرَغَ قَامَ مَعَهُ بَعْضُهُمْ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ. فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ قُلْتُ: عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ المَيِّتِ، إِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ المَيِّتِ» ثَلَاثًا، ثُمَّ أَقْبَلَ عَلَيَّ فَقَالَ: ” إِذَا لَقِيَ الرَّجُلُ أَخَاهُ المُسْلِمَ فَلْيَقُلْ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ “، ثُمَّ رَدَّ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَعَلَيْكَ وَرَحْمَةُ، اللَّهِ وَعَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ، وَعَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ»:

وَقَدْ رَوَى هَذَا الحَدِيثَ أَبُو غِفَارٍ، عَنْ أَبِي تَمِيمَةَ الهُجَيْمِيِّ، عَنْ أَبِي جُرَيٍّ جَابِرِ بْنِ سُلَيْمٍ الهُجَيْمِيِّ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الحَدِيثَ “


Abu-Dawood-5209

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5209.

அபூ ஜுரை அல்-ஹுஜைமி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு கூறாதீர். ஏனெனில் ‘அஸ்ஸலாமு அலைக்க’ என்பது இறந்தவர்களை வாழ்த்தும் முறையாகும்” என்று கூறினார்கள்.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا تَقُلْ عَلَيْكَ السَّلَامُ، فَإِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَوْتَى»


Abu-Dawood-4075

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4075.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் ஒரு துணியால் (சட்டை போன்றது) தங்கள் கால்களைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதன் விளிம்பு அவர்களின் கால்களில் விழுந்திருந்தது.


«أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْتَبٍ بِشَمْلَةٍ، وَقَدْ وَقَعَ هُدْبُهَا عَلَى قَدَمَيْهِ»


Abu-Dawood-4084

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கீழாடையை (தரையின்) கீழே படுமாறு அணிவது குறித்து வந்துள்ளவை.

4084. அபூஜுரை-ஜாபிர் பின் ஸுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நான் ஒரு மனிதரைப் பார்த்தேன். மக்கள் அவரது கருத்தைக் கேட்டு நடக்கிறார்கள். அவர் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். நான் (சிலரிடம்) , ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘இவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்’ என்று அவர்கள் கூறினார்கள்.

(பிறகு) நான், ‘அஸ்ஸலாமு அலைக்க யா ரஸூலல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்)’ என்று இரண்டு முறை கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க என்று கூறாதே. ஏனெனில் அது இறந்தவர்களுக்கு ஸலாம் கூறும் முறையாகும். ஸலாமுன் அலைக்க (உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று கூறு!” என்றார்கள்.

நான், ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர். அந்த அல்லாஹ் எப்படிப்பட்டவன் எனில், உனக்குத் துன்பம் ஏற்பட்டு அவனை நீ அழைத்தால் அதை அவன் நீக்குவேன். (புற்பூண்டுகள், செடி கொடிகள், தாவரங்கள் முளைக்காமல்) வறட்சி ஏற்படும்போது நீ அவனை அழைத்தால், (மழையை தந்து) அவற்றை உனக்காக மீண்டும் வளரச் செய்வான். பாலைவனத்தில் அல்லது வெட்டவெளியில் உன் ஒட்டகம் தொலைந்து போய் அவனை அழைத்தால்,

رَأَيْتُ رَجُلًا يَصْدُرُ النَّاسُ عَنْ رَأْيِهِ، لَا يَقُولُ شَيْئًا إِلَّا صَدَرُوا عَنْهُ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،


قُلْتُ: عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، مَرَّتَيْنِ، قَالَ: ” لَا تَقُلْ: عَلَيْكَ السَّلَامُ، فَإِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَيِّتِ، قُلْ: السَّلَامُ عَلَيْكَ


قَالَ: قُلْتُ: أَنْتَ رَسُولُ اللَّهِ؟ قَالَ: «أَنَا رَسُولُ اللَّهِ الَّذِي إِذَا أَصَابَكَ ضُرٌّ فَدَعَوْتَهُ كَشَفَهُ عَنْكَ، وَإِنْ أَصَابَكَ عَامُ سَنَةٍ فَدَعَوْتَهُ، أَنْبَتَهَا لَكَ، وَإِذَا كُنْتَ بِأَرْضٍ قَفْرَاءَ – أَوْ فَلَاةٍ – فَضَلَّتْ رَاحِلَتُكَ فَدَعَوْتَهُ، رَدَّهَا عَلَيْكَ»،


قَالَ: قُلْتُ: اعْهَدْ إِلَيَّ، قَالَ: «لَا تَسُبَّنَّ أَحَدًا» قَالَ: فَمَا سَبَبْتُ بَعْدَهُ حُرًّا، وَلَا عَبْدًا، وَلَا بَعِيرًا، وَلَا شَاةً،


قَالَ: «وَلَا تَحْقِرَنَّ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ، وَأَنْ تُكَلِّمَ أَخَاكَ وَأَنْتَ مُنْبَسِطٌ إِلَيْهِ وَجْهُكَ إِنَّ ذَلِكَ مِنَ الْمَعْرُوفِ،


وَارْفَعْ إِزَارَكَ إِلَى نِصْفِ السَّاقِ، فَإِنْ أَبَيْتَ فَإِلَى الْكَعْبَيْنِ، وَإِيَّاكَ وَإِسْبَالَ الْإِزَارِ، فَإِنَّهَا مِنَ المَخِيلَةِ، وَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمَخِيلَةَ،


وَإِنِ امْرُؤٌ شَتَمَكَ وَعَيَّرَكَ بِمَا يَعْلَمُ فِيكَ، فَلَا تُعَيِّرْهُ بِمَا تَعْلَمُ فِيهِ، فَإِنَّمَا وَبَالُ ذَلِكَ عَلَيْهِ»


Abu-Dawood-2524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2524. உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார். மற்றொருவர் ஒரு வாரமோ அல்லது சில நாட்களோ கழித்து (இயற்கையாக) மரணமடைந்தார். நாங்கள் (இரண்டாவதாக) இறந்தவரை அடக்கம் செய்த பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.

நாங்கள், “அவருக்காக துஆ செய்தோம். ‘இறைவா! அவரை மன்னித்து அவரது தோழருடன் சேர்ப்பாயாக!’ என்று கூறினோம்” என்றோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரது தொழுகைக்கும் இவரது தொழுகைக்கும், அவரது நோன்புக்கும் இவரது நோன்புக்கும், அவரது செயலுக்கும் இவரது செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நிச்சயமாக, அவர்களுக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் போன்ற வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் கஸீர் கூறுகிறார்:

ஷுஅபா அவர்கள், தனக்கு இந்தச் செய்தியை அறிவித்த அம்ர் பின் முர்ரா அவர்கள், “நோன்பு” என்ற வார்த்தையை கூறினார்களா? இல்லையா? என்பதை சந்தேகமாக அறிவித்தார்.)


آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ رَجُلَيْنِ، فَقُتِلَ أَحَدُهُمَا، وَمَاتَ الْآخَرُ بَعْدَهُ بِجُمُعَةٍ، أَوْ نَحْوِهَا، فَصَلَّيْنَا عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» فَقُلْنَا: دَعَوْنَا لَهُ، وَقُلْنَا: اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَلْحِقْهُ بِصَاحِبِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ، وَصَوْمُهُ بَعْدَ صَوْمِهِ؟ – شَكَّ شُعْبَةُ – فِي صَوْمِهِ، وَعَمَلُهُ بَعْدَ عَمَلِهِ، إِنَّ بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»


Abu-Dawood-2348

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2348.

“உண்ணுங்கள், பருகுங்கள். (வானத்தில்) செங்குத்தாகத் தோன்றும் ஒளி உங்களைத் தடுத்து விடவேண்டாம். (வானத்தில்) செந்நிறம் குறுக்காகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். (செந்நிறம் தெரிந்துவிட்டால் ஸஹரை நிறுத்திவிடுங்கள்)


«كُلُوا وَاشْرَبُوا، وَلَا يَهِيدَنَّكُمُ السَّاطِعُ الْمُصْعِدُ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَعْتَرِضَ لَكُمُ الْأَحْمَرُ»،


Next Page »