Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-587

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

587. தன் சமூகத்தாருடன் எனது தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு திரும்ப எண்ணிய போது, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு யார் தொழுவிக்க வேண்டும்? என்று வினவிய போது, உங்களில் குர்ஆனை அதிகமாக திரட்டியவர் அல்லது குர்ஆனை மனனம் செய்தவர் தொழுவிப்பாராக! என்று சொன்னார்கள். சிறுவனாக இருந்துக் கொண்டு மக்களில் நான் குர்ஆனை திரட்டியது போன்று வேறு யாரும் திரட்டியிருக்கவில்லை! என்னிடம் ஒரே ஒரு சால்வைதான் இருந்தது. ஜரீம் கிளையாரின் எந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டாலும் நான் தான் (அவர்களது) இமாமாக தவறியதில்லை. இன்றைய நாள் வரை அவர்களில் இறந்தவர்களுக்கு நான் தான் ஜனாஸா தொழுவித்துக் கொண்டிருக்கின்றேன் என்று அம்ரு பின் ஸலாமா (ரலி) அறிவிக்கின்றார்கள். தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

“என்னுடைய கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது’ என தன் தந்தையிடமிருந்து அறிவிப்பதாக குறிப்பிடாமல் அம்ர் பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸை அம்ர் பின் ஸலமா, மிஸ்அர் பின் ஹபீப் வாயிலாக யசீத் பின் ஹாரூன் அறிவிக்கின்றார்.

أَنَّهُمْ وَفَدُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَرَادُوا أَنْ يَنْصَرِفُوا، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَؤُمُّنَا، قَالَ: «أَكْثَرُكُمْ جَمْعًا لِلْقُرْآنِ» أَوْ «أَخْذًا لِلْقُرْآنِ» قَالَ: فَلَمْ يَكُنْ أَحَدٌ مِنَ الْقَوْمِ جَمَعَ مَا جَمَعْتُهُ، قَالَ: فَقَدَّمُونِي وَأَنَا غُلَامٌ وَعَلَيَّ شَمْلَةٌ لِي، فَمَا شَهِدْتُ مَجْمَعًا مِنْ جَرْمٍ إِلَّا كُنْتُ إِمَامَهُمْ، وَكُنْتُ أُصَلِّي عَلَى جَنَائِزِهِمْ إِلَى يَوْمِي هَذَا


Abu-Dawood-586

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

586. மேலுள்ள ஹதீஸின் கருத்துதான் இங்கே இடம் பெறுகின்றது. ஒட்டுப் போடப்பட்ட ஓட்டை விழுந்த சால்வை அணிந்து கொண்டு மக்களுக்கு தொழுவிப்பேன். நான் சஜ்தா செய்யும்போது எனது பிட்டம் வெளியே தெரியும் என்று அம்ர் பின் சலமா அறிவித்ததாக இந்த அறிவிப்பில் இடம் பெறுகின்றது.


فَكُنْتُ أَؤُمُّهُمْ فِي بُرْدَةٍ مُوَصَّلَةٍ فِيهَا فَتْقٌ فَكُنْتُ إِذَا سَجَدْتُ خَرَجَتْ اسْتِي


Abu-Dawood-585

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

585. மக்கள் எங்களை கடந்து செல்லும் பகுதியில் குடியமர்ந்திருந்தோம். அவர்கள் திரும்பும்போது எங்களைத் தாண்டி செல்வர். அப்போது அவர்கள் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்னதைச் சொன்னார்கள் என எங்களிடம் அறிவிப்பார்கள். நான் அது சமயம் (குர்ஆனை) மனனம் செய்யும் சிறுவனாக இருந்ததால் குர்ஆனை அதிகமாக மனனம் செய்திருந்தேன். என்னுடைய தந்தை தனது சமூகத்தார் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழக் கற்றுக்கொடுத்து உங்களில் குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர் தொழுவிக்கட்டும்! என்றும் சொன்னார்கள். நான் குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்ததால் குர்ஆனை நன்கு ஓதுபவனாக இருந்தேன். எனவே மக்கள் என்னை முற்படுத்தியதும் நான் அவர்களுக்கு தொழுவித்தேன். ஒரு மஞ்சள் நி சிறிய சால்வை மட்டும் நான் அணிந்திருந்ததால் நான் சஜ்தா செய்யும்போது என்னை விட்டும் அது விலகி விடும். அப்போது உங்களுடைய இமாமின் மானத்தை மறைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஒரு பெண்மணி சொன்னதும் அம்மான் நாட்டு சட்டையை எனக்காக வாங்கினர். இஸ்லாத்தை தழுவிய பின்பு இந்த ஆடையினால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் நான் மகிழிச்சி அடைந்ததில்லை.


كُنَّا بِحَاضِرٍ يَمُرُّ بِنَا النَّاسُ إِذَا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانُوا إِذَا رَجَعُوا مَرُّوا بِنَا، فَأَخْبَرُونَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَذَا وَكَذَا وَكُنْتُ غُلَامًا حَافِظًا فَحَفِظْتُ مِنْ ذَلِكَ قُرْآنًا كَثِيرًا فَانْطَلَقَ أَبِي وَافِدًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ فَعَلَّمَهُمُ الصَّلَاةَ، فَقَالَ: «يَؤُمُّكُمْ أَقْرَؤُكُمْ» وَكُنْتُ أَقْرَأَهُمْ لِمَا كُنْتُ أَحْفَظُ فَقَدَّمُونِي فَكُنْتُ أَؤُمُّهُمْ وَعَلَيَّ بُرْدَةٌ لِي صَغِيرَةٌ صَفْرَاءُ، فَكُنْتُ إِذَا سَجَدْتُ تَكَشَّفَتْ عَنِّي، فَقَالَتْ: امْرَأَةٌ مِنَ النِّسَاءِ: وَارُوا عَنَّا عَوْرَةَ قَارِئِكُمْ، فَاشْتَرَوْا لِي قَمِيصًا عُمَانِيًّا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ فَرَحِي بِهِ، فَكُنْتُ أَؤُمُّهُمْ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ


Abu-Dawood-584

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

584. குர்ஆனை ஓதுவரில் முந்தியவர் என்ற வாசகமில்லாமல் குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் “சுன்னத்தை’ (நபிவழியை) நன்கு தெரிந்தவர் தொழுவிக்க வேண்டும் நபிவழியை தெரிந்திருப்பதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் நாடுதுறந்து சென்றதில் முந்தியவர் தொழுவிக்க வேண்டும் என அபூமஸ்வூத் அல்பத்ரி அறிவித்தார் என்று இங்கு இந்த ஹதீஸ் இடம் பெறுகின்றது.

யாருடைய இருக்கையிலும் அவருடைய அனுமதியின்றி நீ உட்கார வேண்டாம் என்ற வாசக அமைப்பு கொண்டதாக இந்த ஹதீஸை இஸ்மாயில் வழியாக ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அறிவிக்கின்றார்.


«فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً» وَلَمْ يَقُلْ: «فَأَقْدَمُهُمْ قِرَاءَةً»


Abu-Dawood-583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

583. ஒருவர் இன்னொருவரின் அதிகாரத்திற்குரிய பகுதியில் தொழுவிக்க வேண்டாம் என்று இந்த ஹதீஸின் வாசகத்துடன் மேலுள்ள ஹதீஸ் இடம் பெறுகின்றது.

“குர்ஆனை ஓதுவதில் முந்தியவர்’ என்ற வாசத்துடனேயே ஷுந்பா வழியாக யஹ்யா பின் கத்தானும் அறிவிக்கின்றார்.


«وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ»


Abu-Dawood-581

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 203

தொழுவிக்க தட்டி கழிக்க கூடாது.

581. தொழுவிக்க தங்களுக்கு ஓர் இமாம் இல்லாமல் பள்ளியில் ஜமாஅத்தினர் தொழுவிப்பதை ஆளுக்குஆள் தட்டிக்கழிப்பது இறுதிநாளின் அடையாளமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என சலமா பின்த் ஹுரிஅறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.


«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُونَ إِمَامًا يُصَلِّي بِهِمْ»


Abu-Dawood-580

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்: 202

மக்களுக்கு தொழுகை நடத்துவதின் சிறப்பு.

580. “மக்களுக்கு தொழுவிப்பவர் சரியான நேரத்தில் தொழுகை நடத்தினால் அவருக்கும் நன்மையாகும்! மக்களுக்கும் நன்மையாகும்! இதில் எதையேனும் அவர் குறைவைத்தால் அவருக்கே அது தீமையாகும். மக்கள் மீது அது தீமையாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»


Abu-Dawood-579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 201

ஜமாஅத்துடன் தொழுதவர் இன்னொரு ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு சென்றால் திரும்ப தொழவேண்டுமா ?

579. “பலாத்’ என்ற இடத்தில் மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் அவர்களுடன் சேர்ந்து தொழவில்லையா? என்று கேட்டதற்கு, நான் தொழுதுவிட்டேன். ஒரு தொழுகையை ஒரே நாளில் இரண்டு தடவைகள் நீங்கள் தொழ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று இப்னுஉமர் (ரலி) பதிலளித்தார் என மைமூனாவின் விடுதலை பெற்ற அடிமை தெரிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெறுகின்றது.


أَتَيْتُ ابْنَ عُمَرَ عَلَى الْبَلَاطِ وَهُمْ يُصَلُّونَ، فَقُلْتُ: أَلَا تُصَلِّي مَعَهُمْ، قَالَ: قَدْ صَلَّيْتُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ»


Abu-Dawood-578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

578. (என்னைப் போல்) எங்களில் ஒருவர் தனது வீட்டில் தொழுகையை தொழுது விட்டு பள்ளிக்கு வந்ததும் இகாமத் சொல்லப்படுகின்றது. அப்போது நானும், அவர்களுடன் சேர்ந்து தொழுகின்றேன். ஆனால் இது என்னுடைய உள்ளத்தில் ஒரு விதமான சந்தேகம் தோற்றுவிக்கின்றது என (இப்படி ஒரு சந்தேகத்தை) பனுஅஸத் பின் குஸாமாவைச் சார்ந்த ஒருவர் அபூஅய்யூப் அல்அன்சாரியிடம் கேட்டபோது நாங்கள் இதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி (ஸஸ்) அவர்கள் இது அவருக்கு கூட்டாக கிடைக்கும் பங்காகும் என்று சொன்னார்கள். 

(இவர் யாரென தெரியாதவராவார் என ஹாபிழ் முன்திரி தெரிவிக்கின்றார்கள்)


أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، فَقَالَ: يُصَلِّي أَحَدُنَا فِي مَنْزِلِهِ الصَّلَاةَ، ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ وَتُقَامُ الصَّلَاةُ فَأُصَلِّي مَعَهُمْ فَأَجِدُ فِي نَفْسِي مِنْ ذَلِكَ شَيْئًا، فَقَالَ أَبُو أَيُّوبَ: سَأَلْنَا عَنْ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ذَلِكَ لَهُ سَهْمُ جَمْعٍ»


Abu-Dawood-573

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

573. தொழுகைக்கு அமைதியாகவே வாருங்கள். கிடைத்த ரக்அத்களை தொழுது உங்களை முந்திவிட்ட ரக்அத்களை திரும்ப தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

(விட்டவர்) திரும்ப தொழுவாராக என்று அபூஹுரைரா (ரலி) வழியாக இவ்வாறு இப்னு சீரின் அறிவிக்கின்றார். இதுபோலவே அபூஹுரைரா (ரலி)யிடமிருந்து அபூராபிஃ அறிவிக்கின்றார்.

ஒரு ஹதீஸில் பூர்த்தி செய்யுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் திரும்ப தொழுங்கள் எனவும் கருத்து மாற்றத்துடன் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.


«ائْتُوا الصَّلَاةَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَصَلُّوا مَا أَدْرَكْتُمْ وَاقْضُوا مَا سَبَقَكُمْ»


Next Page » « Previous Page