5089. ஹதீஸ் எண்-5088 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
என்றாலும் இதில் அபான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிகழ்வு கூறப்படவில்லை.
نَحْوَهُ
5089. ஹதீஸ் எண்-5088 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
என்றாலும் இதில் அபான் (ரஹ்) அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிகழ்வு கூறப்படவில்லை.
نَحْوَهُ
5088. ஒருவர் மாலையில் “பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹீ ஷைஉன் ஃபில்அர்ளி, வலா ஃபிஸ்ஸமாஇ, வஹுவஸ் ஸமீஉல் அலீம்” என்று மூன்று முறை கூறினால் அவருக்கு காலை வரை திடீர் துன்பம் ஏற்படாது. மேலும், இதை காலையில் மூன்று முறை கூறினால் அவருக்கு மாலை வரை திடீர் துன்பம் ஏற்படாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
(துஆவின் பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்). அவனுடைய பெயருடன் இருக்கும்போது வானத்திலோ, பூமியிலோ எந்தப் பொருளும் தீங்கு செய்யாது. மேலும், அவன் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிபவன்.)
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
இந்த ஹதீஸை அறிவித்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டது. இந்த ஹதீஸை அவரிடமிருந்து செவியுற்ற ஒருவர் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அபான் (ரஹ்) அவர்கள், “ஏன் என்னைப் பார்க்கிறீர்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது பொய் சொல்லவில்லை. உஸ்மான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்லவில்லை. எனக்கு பக்கவாதம் ஏற்பட்ட அன்று நான் கோபமாக இருந்ததால் இதை ஓத மறந்துவிட்டேன்” என்று கூறினார்.
«مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ، حَتَّى يُصْبِحَ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ»،
وَقَالَ: فَأَصَابَ أَبَانَ بْنَ عُثْمَانَ، الْفَالِجُ، فَجَعَلَ الرَّجُلُ الَّذِي سَمِعَ مِنْهُ الْحَدِيثَ يَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ لَهُ: «مَا لَكَ تَنْظُرُ إِلَيَّ؟ فَوَاللَّهِ مَا كَذَبْتُ عَلَى عُثْمَانَ وَلَا كَذَبَ عُثْمَانُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَكِنَّ الْيَوْمَ الَّذِي أَصَابَنِي فِيهِ مَا أَصَابَنِي غَضِبْتُ فَنَسِيتُ أَنْ أَقُولَهَا»
3781.
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ الذِّرَاعُ» قَالَ: «وَسُمَّ فِي الذِّرَاعِ وَكَانَ يَرَى أَنَّ الْيَهُودَ هُمْ سَمُّوهُ»
3780.
«كَانَ أَحَبُّ الْعُرَاقِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرَاقَ الشَّاةِ»
4514.
قَالَ أَبُو سَعِيدِ بْنُ الْأَعْرَابِيِّ: كَذَا قَالَ: عَنْ أُمِّهِ وَالصَّوَابُ عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ مُبَشِّرٍ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ مَعْنَى حَدِيثِ مَخْلَدِ بْنِ خَالِدٍ، نَحْوَ حَدِيثِ جَابِرٍ قَالَ: فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ فَقَالَ: مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ جَابِرٍ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ وَلَمْ يَذْكُرِ الْحِجَامَةَ
4513. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு முபஷ்ஷிர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த நோயின் போது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு ஏற்பட்ட இந்த நோய்க்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? என் மகன்-பிஷ்ர் பின் பராஉக்கு வேறு எதாலும் வந்தது என்று நான் நினைக்கவில்லை; நீங்கள் கைபரில் அவருடன் உண்ட அந்த விஷம் கலந்த ஆட்டினால் தான் வந்தது என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என் நிலைக்கு அதையே தவிர வேறு எதையும் காரணமாக எண்ணவில்லை. இப்போதுதான் அது என் பெருநாளத்தை (முதுகுத் தண்டுக்கு அருகில் உள்ள நரம்பை) துண்டித்துவிட்டது” என்று கூறினார்கள்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள், சில சமயங்களில் மஃமர் —> ஸுஹ்ரீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர் தொடரில் (முர்ஸலாக) அறிவித்தார். மேலும், சில சமயங்களில் மஃமர் —> ஸுஹ்ரீ —> அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் —> (நபி-ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.
இது பற்றி அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் கூறுகையில், மஃமர் (ரஹ்) அவர்கள் சில சமயங்களில் இந்த ஹதீஸை முர்ஸலாக அறிவித்தார்; அதை நாங்கள் எழுதிக்கொண்டோம். சில சமயங்களில் அதை முழு அறிவிப்பாளர்தொடருடன்
أَنَّ أُمَّ مُبَشِّرٍ، قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: مَا يُتَّهَمُ بِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَإِنِّي لَا أَتَّهِمُ بِابْنِي شَيْئًا إِلَّا الشَّاةَ الْمَسْمُومَةَ الَّتِي أَكَلَ مَعَكَ بِخَيْبَرَ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَأَنَا لَا أَتَّهِمُ بِنَفْسِي إِلَّا ذَلِكَ، فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي»
4512. நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள், ஆனால் தர்மப் பொருட்களை உண்ண மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
வஹ்ப் இப்னு பகிய்யா (ரஹ்) அவர்கள் வேறொரு இடத்தில் இந்தச் செய்தியை, காலித் —> முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பெயரை குறிப்பிடப்படவில்லை.
மேலதிகமாக (இந்த அறிவிப்பில் வந்துள்ளதாவது:), கைபரில் ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த சுடப்பட்ட ஆட்டை அன்பளிப்பாகக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்களும், மற்ற மக்களும் அதிலிருந்து உண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் கைகளை எடுத்து விடுங்கள்! ஏனெனில், இந்த ஆடு விஷம் கலக்கப்பட்டது என்று எனக்கு அறிவித்துவிட்டது” என்று கூறினார்கள்.
இதன் காரணமாக, பிஷ்ர் பின் பராஉ பின் மஃரூர் அல்அன்ஸாரீ (ரலி) மரணமடைந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த யூதப் பெண்ணிடம் ஆளனுப்பி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் ஒரு நபியாக இருந்தால், நான் செய்த விஷம் உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது. நீங்கள் ஒரு மன்னராக இருந்தால், (உங்களை விட்டு) மக்களை விடுவிப்பேன்” என்று கூறினாள்.
நபி
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ» حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ فِي مَوْضِعٍ آخَرَ عَنْ خَالِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، وَلَمْ يَذْكُرْ أَبَا هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَقْبَلُ الْهَدِيَّةَ وَلَا يَأْكُلُ الصَّدَقَةَ» زَادَ: فَأَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً سَمَّتْهَا فَأَكَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا وَأَكَلَ الْقَوْمُ فَقَالَ: «ارْفَعُوا أَيْدِيَكُمْ فَإِنَّهَا أَخْبَرَتْنِي أَنَّهَا مَسْمُومَةٌ» فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ «مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ؟» قَالَتْ: إِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ الَّذِي صَنَعْتُ، وَإِنْ كُنْتَ مَلِكًا أَرَحْتُ النَّاسَ مِنْكَ، فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ، ثُمَّ قَالَ: فِي وَجَعِهِ الَّذِي مَاتَ فِيهِ «مَازِلْتُ أَجِدُ مِنَ الْأَكْلَةِ الَّتِي أَكَلْتُ بِخَيْبَرَ فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي»
4511. ஹதீஸ் எண்-4510 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது மாற்றமாக வந்துள்ளது. இதில்,
கைபரில் ஒரு யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்கு சுடப்பட்ட ஆடு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்…என்று ஆரம்பித்து ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே வந்துள்ளது.
(இதில் கூடுதலாக:)
(இந்த விஷம் கலந்த ஆட்டை உண்டதாலேயே) பிஷ்ர் பின் பராஉ பின் மஃரூர் அல்அன்ஸாரீ (ரலி) மரணமடைந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த யூதப் பெண்ணிடம் ஆளனுப்பி, “நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். பிறகு உள்ளவை ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளதைப் போன்றே வந்துள்ளது.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். இந்த அறிவிப்பில் இரத்தம் நீக்கும் சிகிச்சை (ஹிஜாமா) பற்றிய தகவல் குறிப்பிடப்படவில்லை.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَهْدَتْ لَهُ يَهُودِيَّةٌ بِخَيْبَرَ شَاةً مَصْلِيَّةً نَحْوَ حَدِيثِ جَابِرٍ قَالَ: فَمَاتَ بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ الْأَنْصَارِيُّ فَأَرْسَلَ إِلَى الْيَهُودِيَّةِ «مَا حَمَلَكِ عَلَى الَّذِي صَنَعْتِ» فَذَكَرَ نَحْوَ حَدِيثِ جَابِرٍ فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُتِلَتْ وَلَمْ يَذْكُرْ أَمْرَ الْحِجَامَةِ
4510. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபரைச் சேர்ந்த ஒரு யூதப் பெண்மணி, சுடப்பட்ட ஆட்டு இறைச்சியில் விஷம் கலந்து நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டின் முன் துடைப் பகுதியை எடுத்துச் சாப்பிட்டார்கள். அவர்களுடன் இருந்த சில தோழர்களும் சாப்பிட்டார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் கைகளை எடுத்து விடுங்கள்!” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த யூதப் பெண்ணை அழைத்து வரச் சொல்லி, அவளிடம், “இந்த ஆட்டில் நீ விஷம் கலந்தாயா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தப் பெண், “யார் உங்களுக்கு இதைத் தெரிவித்தார்?” என்று கேட்டாள். நபி (ஸல்) அவர்கள், “என் கையில் உள்ள இந்த முன் துடைதான் எனக்கு அறிவித்தது” என்று கூறினார்கள். அவள் “ஆம்” என்று ஒப்புக்கொண்டாள்.
நபி (ஸல்) அவர்கள், “ஏன் அப்படிச் செய்தாய்?” என்று கேட்டார்கள். அவள், “இவர் ஒரு நபியாக இருந்தால், அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. ஒருவேளை இவர் நபியாக இல்லையென்றால், இவரை விட்டு நாங்கள் நிம்மதி அடைவோம் என்று நினைத்தேன்” என்று பதிலளித்தாள்.
நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை மன்னித்துவிட்டார்கள். அவளுக்கு எந்தத் தண்டனையும் கொடுக்கவில்லை. ஆனால், அந்த ஆட்டிலிருந்து சாப்பிட்ட சில தோழர்கள்
أَنَّ يَهُودِيَّةً، مِنْ أَهْلِ خَيْبَرَ سَمَّتْ شَاةً مَصْلِيَّةً ثُمَّ أَهْدَتْهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الذِّرَاعَ، فَأَكَلَ مِنْهَا، وَأَكَلَ رَهْطٌ مِنْ أَصْحَابِهِ مَعَهُ، ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْفَعُوا أَيْدِيَكُمْ» وَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا، فَقَالَ لَهَا «أَسَمَمْتِ هَذِهِ الشَّاةَ» قَالَتِ الْيَهُودِيَّةُ: مَنْ أَخْبَرَكَ؟ قَالَ «أَخْبَرَتْنِي هَذِهِ فِي يَدِي» لِلذِّرَاعِ، قَالَتْ: نَعَمْ، قَالَ «فَمَا أَرَدْتِ إِلَى ذَلِكَ؟» قَالَتْ: قُلْتُ: إِنْ كَانَ نَبِيًّا فَلَنْ يَضُرَّهُ، وَإِنْ لَمْ يَكُنْ نَبِيًّا اسْتَرَحْنَا مِنْهُ، فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يُعَاقِبْهَا، وَتُوُفِّيَ بَعْضُ أَصْحَابِهِ الَّذِينَ أَكَلُوا مِنَ الشَّاةِ، وَاحْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنَ الشَّاةِ، حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ، وَهُوَ مَوْلًى لِبَنِي بَيَاضَةَ مِنَ الْأَنْصَارِ
4508.
أَنَّ امْرَأَةً يَهُودِيَّةً أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَسْمُومَةٍ: فَأَكَلَ مِنْهَا، فَجِيءَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهَا عَنْ ذَلِكَ، فَقَالَتْ: أَرَدْتُ لِأَقْتُلَكَ، فَقَالَ: «مَا كَانَ اللَّهُ لِيُسَلِّطَكِ عَلَى ذَلِكَ» أَوْ قَالَ: «عَلَيَّ» فَقَالُوا: أَلَا نَقْتُلُهَا؟ قَالَ: «لَا» فَمَا زِلْتُ أَعْرِفُهَا فِي لَهَوَاتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்