Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-886

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ருகூஃ செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்தான என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.

மேலும், அவர் ஸஜ்தா செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ (உயர்ந்த என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும். (ஏனெனில் இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.


” إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى ثَلَاثًا، وَذَلِكَ أَدْنَاهُ “،


Abu-Dawood-4010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4010. அபுல்மலீஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷாம் (எனும் சிரியா) நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் நாட்டினர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்கள் ஊரில் பெண்கள் பொதுக் குளிப்பிடங்களுக்கு செல்கின்றார்கள் தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்” என்று கூறினர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூற செவியுற்றிருக்கிறேன்:

தனது வீட்டைத் தவிர வேறு இடத்தில் தனது ஆடையைக் களையும் எந்தப் பெண்ணும் அவளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் (அதாவது வெட்கத்தைக் கைவிட்டுவிட்டாள்).


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது ஜரீர் பின் அப்துல்ஹமீத் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். இதுவே முழுமையானது.

ஜரீர் அவர்கள் அபுல்மலீஹ் அவர்களைக் குறிப்பிடவில்லை. (மாறாக மன்ஸூர் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றே குறிப்பிட்டுள்ளார்.


دَخَلَ نِسْوَةٌ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: مِمَّنْ أَنْتُنَّ قُلْنَ مِنْ أَهْلِ الشَّامِ قَالَتْ: لَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ قُلْنَ: نَعَمْ قَالَتْ: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنَ امْرَأَةٍ تَخْلَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا إِلَّا هَتَكَتْ، مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ تَعَالَى»


Abu-Dawood-5191

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

அனுமதி கோர வேண்டிய மூன்று அந்தரங்க நேரங்கள்.

5191. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்களில் அதிகமானோர் (அல்குர்ஆன்: 24:58) இல் வரும் அனுமதி கோரும் இறைவசனத்தின்படி நடக்கவில்லை. ஆனால், நான் என்னுடைய இந்த அடிமைப்பெண்ணை என்னிடம் வருவதற்கு அனுமதி கோருமாறு ஏவுகிறேன்.

அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் அபூயஸீத் (ரஹ்)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்.


«لَمْ يُؤْمَرْ بِهَا أَكْثَرُ النَّاسِ آيَةَ الْإِذْنِ، وَإِنِّي لَآمُرُ جَارِيَتِي هَذِهِ تَسْتَأْذِنُ عَلَيَّ»


Abu-Dawood-5192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5192. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஈராக்வாசிகளில் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, “இப்னு அப்பாஸ் அவர்களே! அல்லாஹ் நமக்கு உத்தரவிட்ட ஒரு வசனத்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த வசனத்தின்படி யாரும் செயல்படுவதில்லையே!. அந்த வசனம் (கீழ்க்கண்ட) இதுதான்” என்று கூறினர்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 24:58)

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் விசயத்தில் பொறுமையுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். மறைப்பதை அவன் விரும்புகிறான்.

அன்றைய

أَنَّ نَفَرًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ كَيْفَ تَرَى فِي هَذِهِ الْآيَةِ الَّتِي أُمِرْنَا فِيهَا بِمَا أُمِرْنَا، وَلَا يَعْمَلُ بِهَا أَحَدٌ؟ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ} [النور: 58] لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ قَرَأَ الْقَعْنَبِيُّ إِلَى {عَلِيمٌ حَكِيمٌ} [النور: 59] قَالَ ابْنُ عَبَّاسٍ: «إِنَّ اللَّهَ حَلِيمٌ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ يُحِبُّ السَّتْرَ، وَكَانَ النَّاسُ لَيْسَ لِبُيُوتِهِمْ سُتُورٌ وَلَا حِجَالٌ، فَرُبَّمَا دَخَلَ الْخَادِمُ أَوِ الْوَلَدُ أَوْ يَتِيمَةُ الرَّجُلِ وَالرَّجُلُ عَلَى أَهْلِهِ، فَأَمَرَهُمُ اللَّهُ بِالِاسْتِئْذَانِ فِي تِلْكَ الْعَوْرَاتِ، فَجَاءَهُمُ اللَّهُ بِالسُّتُورِ وَالْخَيْرِ، فَلَمْ أَرَ أَحَدًا يَعْمَلُ بِذَلِكَ بَعْدُ»


Abu-Dawood-3164

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

இரவில் அடக்கம் செய்தல்.

3164. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் ஒரு மையவாடியில் நெருப்பைக் கண்டார்கள். அங்கு சென்று பார்த்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருவரின் மண்ணறைக்கருகில் இருந்தார்கள். மேலும், “உங்களுடைய தோழரை என்னிடம் தாருங்கள்” என்று கூறியவாறு இருந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதர் இறைவனை அதிக சப்தத்துடன் திக்ர் செய்தவர் என்பது தெரியவந்தது.


رَأَى نَاسٌ نَارًا فِي الْمَقْبَرَةِ، فَأَتَوْهَا فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقَبْرِ، وَإِذَا هُوَ يَقُولُ: «نَاوِلُونِي صَاحِبَكُمْ» فَإِذَا هُوَ الرَّجُلُ الَّذِي كَانَ يَرْفَعُ صَوْتَهُ بِالذِّكْرِ


Abu-Dawood-4628

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4628.


كُنَّا نَقُولُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ: «أَفْضَلُ أُمَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ، ثُمَّ عُمَرُ، ثُمَّ عُثْمَانُ، رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ»


Abu-Dawood-4977

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4977. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனை “ஸய்யித்-தலைவர்” என்று அழைக்காதீர்கள். ஏனெனில், அவன் தலைவனாக இருந்தால், நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கோபத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)


«لَا تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّدًا فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ عَزَّ وَجَلَّ»


Abu-Dawood-4806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4806. அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆமிர் குலத்தார் குழுவுடன் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள், “நீங்கள் எங்கள் ஸய்யித்-தலைவர்” என்றோம். அதற்கு அவர்கள், “ஸய்யித் வளமும், உயர்வும் கொண்ட அல்லாஹ் ஒருவனே” என்றார்கள். “சிறப்பாலும் செல்வாக்காலும் எங்களுள் சிறந்தவர் நீங்கள்” என்றோம். அதற்கு அவர்கள், “உங்களுடைய கூற்றைக் கூறுங்கள். அல்லது அதன் ஒரு பகுதியைக் கூறுங்கள். ஷைத்தான் உங்களை இழுத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.


انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقُلْنَا: أَنْتَ سَيِّدُنَا، فَقَالَ: «السَّيِّدُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى» قُلْنَا: وَأَفْضَلُنَا فَضْلًا وَأَعْظَمُنَا طَوْلًا، فَقَالَ: «قُولُوا بِقَوْلِكُمْ، أَوْ بَعْضِ قَوْلِكُمْ، وَلَا يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ»


Abu-Dawood-4613

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4613.


كَانَ لِابْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّامِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَيْءٍ مِنَ الْقَدَرِ، فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَيَّ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ»


Abu-Dawood-4191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4191.


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ» تَعْنِي عَقَائِصَ


Next Page » « Previous Page