Category: ஸுனன் அபூதாவூத்

Sunan Abu Dawud

Abu-Dawood-3093

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3093. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதரே! குர்ஆனில் உள்ள மிகக் கடினமான இறைவசனத்தை நான் அறிவேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! அது எந்த இறைவசனம்?” என்று கேட்டார்கள். நான், “யார் தீமை செய்கிறாரோ அவர் அதற்குரிய கூலியை வழங்கப்படுவார் (அல்குர்ஆன் 4:123) என்ற இறைவசனத்தைக் கூறினேன்.

அதற்கு அவர்கள், “ஆயிஷாவே! முஃமினுக்கு ஏற்படும் துன்பம், அல்லது (அவர் உடலில்) தைக்கும் முள் போன்றவற்றின் மூலம் அவர் செய்த தீய செயல்களுக்கு (இவ்வுலகிலேயே) அவருக்குக் கூலி வழங்கப்பட்டு விடுகிறது. மேலும், எவரிடம் கணக்குக் கேட்கப்படுகிறதோ அவர் தண்டிக்கப்படுவார்” என்பதை நீ அறியவில்லையா? என்று கூறினார்கள்.

நான், அவர்களிடம், “அவரிடம் இலகுவான முறையில் கணக்குக் கேட்கப்படும்” (அல்குர்ஆன் 84:8) என்று அல்லாஹ் கூறவில்லையா?” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! அது (ஒருவர் செய்தவற்றை அவருக்கு) எடுத்துக் காட்டுவதாகும். யாரிடம் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறதோ அவர் தண்டிக்கப்படுவார்” என்று கூறினார்கள்.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَأَعْلَمُ أَشَدَّ آيَةٍ فِي الْقُرْآنِ؟ قَالَ: «أَيَّةُ آيَةٍ يَا عَائِشَةُ؟»، قَالَتْ: قَوْلُ اللَّهِ تَعَالَى: {مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ} [النساء: 123]، قَالَ: «أَمَا عَلِمْتِ يَا عَائِشَةُ، أَنَّ الْمُؤْمِنَ تُصِيبُهُ النَّكْبَةُ، أَوِ الشَّوْكَةُ فَيُكَافَأُ بِأَسْوَإِ عَمَلِهِ وَمَنْ حُوسِبَ عُذِّبَ» قَالَتْ: أَلَيْسَ اللَّهُ يَقُولُ: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8]، قَالَ: «ذَاكُمُ الْعَرْضُ، يَا عَائِشَةُ مَنْ نُوقِشَ الْحِسَابَ عُذِّبَ»،


Abu-Dawood-2345

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2345. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளருக்கு பேரீச்சம்பழம் எவ்வளவு சிறந்த ஸஹர் உணவாக இருக்கிறதே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«نِعْمَ سَحُورُ الْمُؤْمِنِ التَّمْرُ»


Abu-Dawood-4800

ஹதீஸின் தரம்: விபரம் கீழே உள்ளது

4800. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தான் கூறுவது உண்மையாயினும் வீண் விவாதத்தைக் கைவிடுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் ஓரத்திலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.

யார் விளையாட்டிற்காகக் கூடப் பொய் பேசுவதைக் கைவிடுகிறாரோ, அவருக்குச் சொர்க்கத்தின் நடுவிலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.

யார் தனது நற்பண்புகளை (அழகிய குணங்களை) மேம்படுத்திக் கொள்கிறாரோ, அவருக்குச் சொர்க்கத்தின் உயரிய பகுதியில் ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ»


Abu-Dawood-1234

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1234.


أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ إِذَا سَافَرَ سَارَ بَعْدَ مَا تَغْرُبُ الشَّمْسُ حَتَّى تَكَادَ أَنْ تُظْلِمَ، ثُمَّ يَنْزِلُ فَيُصَلِّي الْمَغْرِبَ، ثُمَّ يَدْعُوا بِعَشَائِهِ فَيَتَعَشَّى، ثُمَّ يُصَلِّي الْعِشَاءَ، ثُمَّ يَرْتَحِلُ، وَيَقُولُ: «هَكَذَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ»، قَالَ عُثْمَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيٍّ، سَمِعْت أَبَا دَاوُد، يَقُولُ: وَرَوَى أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ حَفْصِ بْنِ عُبَيْدِ اللَّهِ يَعْنِي ابْنَ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ أَنَسًا، كَانَ يَجْمَعُ بَيْنَهُمَا حِينَ يَغِيبُ الشَّفَقُ، وَيَقُولُ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَصْنَعُ ذَلِكَ، وَرِوَايَةُ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُهُ


Abu-Dawood-5074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை, மாலை வேளைகளில் இந்த துஆக்களை ஓதுவதை விடுவதே இல்லை:

“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித்துன்யா வல்ஆகிரஹ். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல்ஆஃபியத ஃபீ தீனீ, வ துன்யாய, வ அஹ்லீ, வ மாலீ. அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வ ஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபள்னீ மிம் பைனி யதைய்ய, வ மின் கல்ஃபீ, வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ. வ அஊது பிஅளமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.

(பொருள்: “அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது குறைகளை மறைப்பாயாக! எனது அச்சங்களைப் போக்கி எனக்கு அமைதி அளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்புறத்திலிருந்தும், எனது இடப்புறத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக! நான் எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

உஸ்மான் பின் அபூஷைபா அவர்களின்

لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ، حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي»، وَقَالَ عُثْمَانُ: «عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي»


Abu-Dawood-5045

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5045.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَرْقُدَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ، عِبَادَكَ ثَلَاثَ مِرَارٍ»


Abu-Dawood-5061

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5061. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்தால், “லா இலாஹ இல்லா அன்த்த, ஸுப்ஹானக, அல்லாஹும்ம அஸ்தஃக்ஃபிருக லிதம்பீ, வ அஸ்அலுக ரஹ்மதக, அல்லாஹும்ம ஸித்னீ இல்மா, வலா துஸிஃக் கல்பீ பஃத இத் ஹதைத்தனீ, வ ஹப்லீ மில்லதுன்க ரஹ்மஹ், இன்னக அன்த்தல் வஹ்ஹாப்” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். அல்லாஹ்வே! எனது பாவத்திற்காக உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். உனது அருளை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது கல்வியை அதிகப்படுத்துவாயாக! எனக்கு நீ நேர்வழி காட்டிய பின் எனது உள்ளத்தைப் பிறழச் செய்துவிடாதே! உன்னிடமிருந்து எனக்கு அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே மகா கொடையாளி.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ قَالَ: «لَا إِلَهَ إِلَّا أَنْتَ، سُبْحَانَكَ، اللَّهُمَّ أَسْتَغْفِرُكَ لِذَنْبِي، وَأَسْأَلُكَ رَحْمَتَكَ، اللَّهُمَّ زِدْنِي عِلْمًا، وَلَا تُزِغْ قَلْبِي بَعْدَ إِذْ هَدَيْتَنِي، وَهَبْ لِي مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ»


Abu-Dawood-2337

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2337. அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்பாத் பின் கஸீர் என்பவர் மதீனாவுக்கு வந்தார். அவர் (அங்குள்ள) அலாஉ (பின் அப்துர்ரஹ்மான்) அவர்களின் சபைக்குச் சென்று, அவரது கரத்தைப் பிடித்து அவரை எழுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்:

அல்லாஹ்வே! நிச்சயமாக இவர், தம் தந்தையிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஷஃபான் மாதம் பாதி வந்துவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று கூறியதாக அறிவிக்கிறார்.

அப்போது அலாஉ அவர்களும், “அல்லாஹ்வே! நிச்சயமாக எனது தந்தை, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக எனக்கு அறிவித்தார்” என்று (உறுதியாகக்) கூறினார்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷிப்ல் பின் அலாஉ, அபூஉமைஸ், ஸுஹைர் பின் முஹம்மத் ஆகியோரும் அலாஉ பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் இந்த ஹதீஸை (மக்களுக்கு) அறிவிக்காதவராக இருந்தார். எனவே நான் அஹ்மத் இமாம் அவர்களிடம், ‘ஏன் அவர் அவ்வாறு செய்தார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை ரமளானுடன் இணைத்து (தொடர்ந்து) நோன்பு நோற்பார்கள் என்பது அவரிடம்

قَدِمَ عَبَّادُ بْنُ كَثِيرٍ الْمَدِينَةَ، فَمَالَ إِلَى مَجْلِسِ الْعَلَاءِ، فَأَخَذَ بِيَدِهِ، فَأَقَامَهُ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ إِنَّ هَذَا يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا انْتَصَفَ شَعْبَانُ، فَلَا تَصُومُوا»،

فَقَالَ الْعَلَاءُ: اللَّهُمَّ إِنَّ أَبِي، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ.


Abu-Dawood-5054

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5054. அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தனது படுக்கைக்குச் சென்றால், “பிஸ்மில்லாஹி வளஃது ஜன்பீ, அல்லாஹும்மஃக்பிர்லீ தன்பீ, வ அக்ஸிஃ ஷைத்தானீ, வ ஃபுக்க ரிஹானீ, வஜ்அல்னீ ஃபின்னதிய்யில் அஃலா” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் என் விலாவைப் (படுக்கையில்) வைக்கிறேன். அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக! என் ஷைத்தானை இழிவுபடுத்தி விரட்டிவிடுவாயாக! என் பிணையிலிருந்து (என் உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பாவங்கள், கடன்கள், ஷைத்தானின் பிடி ஆகியவற்றிலிருந்து) என்னை விடுவிப்பாயாக! மேலும், என்னை மிக உயர்ந்த சபையில் சேர்ப்பாயாக!)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸவ்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹம்மாம் அல்அஹ்வாஸீ அவர்கள் (நபித்தோழர் அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) என்ற பெயருக்கு பதிலாக) அபூஸுஹைர் அல்அன்மாரீ (ரலி) என்று அறிவித்துள்ளார்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى»


Abu-Dawood-1600

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1600.


جَاءَ هِلَالٌ أَحَدُ بَنِي مُتْعَانَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعُشُورِ نَحْلٍ لَهُ، وَكَانَ سَأَلَهُ أَنْ يَحْمِيَ لَهُ وَادِيًا، يُقَالُ لَهُ: سَلَبَةُ، فَحَمَى لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ الْوَادِي، فَلَمَّا وُلِّيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ كَتَبَ سُفْيَانُ بْنُ وَهْبٍ، إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ، فَكَتَبَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «إِنْ أَدَّى إِلَيْكَ مَا كَانَ يُؤَدِّي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عُشُورِ نَحْلِهِ، فَاحْمِ لَهُ سَلَبَةَ، وَإِلَّا، فَإِنَّمَا هُوَ ذُبَابُ غَيْثٍ يَأْكُلُهُ مَنْ يَشَاءُ»،


Next Page » « Previous Page