Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-2253

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2253. நபி (ஸல்) அவர்கள் உம்மு அதிய்யா (ரலி) அவர்களிடம், “நீ (பெண்களுக்கு) விருத்தசேதனம் செய்யும்போது மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! ஏனெனில் இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; அவளின் (வருங்கால) கணவனுக்கும் பிடித்தமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُمِّ عَطِيَّةَ: «إِذَا خَفَضْتِ فَأَشِمِّي وَلَا تَنْهَكِي، فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ، وَأَحْظَى عِنْدَ الزَّوْجِ»


Almujam-Alawsat-1114

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1114. முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின்போது ஸஃபா குன்றின் மீது இருந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது உறுதிமொழி கூறிய ஒரு பெண்ணின் கை ஆணின் கையைப்போன்று இருந்ததால் நபி (ஸல்) அவரிடமிருந்து உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அந்தப் பெண் திரும்பிச் சென்று தனது கையில் மஞ்சள்நிற சாயமிட்டு வந்தார்.

மேலும் ஒரு மனிதர் இரும்பு மோதிரம் அணிந்துக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரும்பு மோதிரம் அணிந்திருக்கும் கையை அல்லாஹ் தூய்மையாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُبَايِعُ النِّسَاءَ عَامَ الْفَتْحِ عَلَى الصَّفَا، فَجَاءَتِ امْرَأَةٌ كَأَنَّ يَدِهَا يَدَ الرَّجُلِ، فَأَبَى أَنْ يُبَايِعَهَا حَتَّى ذَهَبَتْ فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ، وَأَتَاهُ رَجُلٌ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ» ، فَقَالَ: «مَا طَهَّرَ اللَّهُ يَدًا فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ»


Almujam-Alawsat-712

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

712. உம்மு ஸுஃபர்-ஸவ்தா பின்த் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத் எனும்) உறுதி மொழி எடுப்பதற்காக வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், “திரும்பிச் சென்று (கைகளுக்கு) மருதாணியிடுவீராக! பிறகு என்னிடம் வருவீராக! நான் உம்மிடம் (பைஅத் எனும்) உறுதிமொழியை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஆஸிம்…


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَايِعَهُ، فَقَالَ: «اذْهَبِي، فَاخْتَضِبِي، ثُمَّ تَعَالَيْ حَتَّى أُبَايِعَكِ»


Almujam-Alawsat-6706

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6706. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அவரின் கையைப் பிடித்தார்கள். அதற்கு அந்தப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! எதற்கு என் கையை பிடித்தீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் ஆணா? அல்லது பெண்ணா? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَنَّ امْرَأَةً مُدَّتْ يَدَهَا بِكِتَابٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ يَدَهُ عَنْهَا، فَقَالَتْ: لِمَ قَبَضْتَ يَدَكَ عَنِّي؟ فَقَالَ: «رَجُلٌ أَوِ امْرَأَةٌ؟» قَالَتْ: امْرَأَةٌ قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً غَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ»


Almujam-Alawsat-3765

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அவரின் கையைப் பிடித்தார்கள். அதற்கு அந்தப்பெண், அல்லாஹ்வின் தூதரே! நான் என் கையில் வைத்திருந்த கடிதத்தை நீட்டினேன். அதை நீங்கள் வாங்கிக்கொள்ளவில்லையே! (ஏன்?) என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.


أَنَّ امْرَأَةً، مَدَّتْ يَدَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبَضَ يَدَهُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَدَدْتُ يَدِي إِلَيْكَ بِكِتَابٍ، فَلَمْ تَأْخُذْهُ؟ فَقَالَ: «إِنِّي لَا أَدْرِي يَدُ امْرَأَةٍ أَمْ يَدُ رَجُلٍ؟» قُلْتُ: بَلْ يَدُ امْرَأَةٍ قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظَفَارََكِ بِالْحِنَّاءِ»


Almujam-Alawsat-66

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

66.


قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ، فَوَعَظَنَا مَوْعِظَةً وَجَفَتْ مِنْهَا الْقُلُوبُ، وَذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ قَدْ وَعَظْتَنَا مَوْعِظَةَ مُوَدِّعٍ، فَاعْهَدْ إِلَيْنَا، فَقَالَ: «عَلَيْكُمْ بِتَقْوَى اللَّهِ، وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، وَسَيَرَى مَنْ بَقِيَ مِنْ بَعْدِي اخْتِلَافًا شَدِيدًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ، وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَالْمُحْدَثَاتِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»


Almujam-Alawsat-8156

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8156.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِامْرَأَةٍ: «اعْتَمِرِي فِي رَمَضَانَ، فَإِنَّ عُمْرَةً فِي رَمَضَانَ تُجْزِئُكِ مِنْ حَجَّةٍ»


Almujam-Alawsat-8991

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8991. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பரகத் எனும்) அருள்வளம் உங்களில் உள்ள பெரியோர்களுடன் உள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْبَرَكَةُ مَعَ أَكَابِرِكُمْ»


Almujam-Alawsat-5905

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5905. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு எப்போதாவது காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு; அது இரத்தத்தை வற்றச் செய்துவிடும்; உடலை மெலிய வைத்துவிடும்” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்; இவரை என்னிடமிருந்து வெளியேற்றுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى عَهْدُكَ بِأُمِّ مِلْدَمٍ؟» قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعَظْمِ، يَمَصُّ الدَّمَ، وَيَأْكُلُ اللَّحْمَ» قَالَ: مَا اشْتَكَيْتُ قَطُّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَرَادَ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْرِجُوهُ عَنِّي»


Next Page » « Previous Page