Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-984

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

984. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தன் மனைவியை ஒரு அடிமைப் பெண்ணை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறாரே! (அவ்வாறு செய்ய வேண்டாம்).

உங்களில் சிறந்தவர் யாரெனில், அவர் தன் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே ஆவார்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அவ்வாம் (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியின் முதல் பகுதியான “உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்தாரிடம் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே” எனும் செய்தியை ஹிஷாம் பின் உர்வா —> உர்வா என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக’ பலரும் அறிவித்துள்ளனர்.

ஹிஷாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் சில மாணவர்கள் ‘முத்தஸிலாக’ அறிவித்துள்ளனர். (பார்க்க: திர்மிதீ-3895)


“பெண்களை அடிப்பது தொடர்பான” இரண்டாவது பகுதியை ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அதிகமானோர் அறிவித்துள்ளனர்.

இந்தப் பகுதியை ளஹ்ஹாக் பின் உஸ்மான் அவர்கள் ஹிஷாம் பின் உர்வா —> அவரின் தந்தை உர்வா —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.


மேற்கண்ட ஹிஷாம்

«أَلَا عَسَى أَحَدُكُمْ أَنْ يَضْرِبَ امْرَأَتَهُ ضَرْبَ الْأَمَةِ أَلَا خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ»


Bazzar-8296

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது


لتردن الحقوق إلى أهلها يوم القيامة حتى تقاد الشاة الجلحاء بنطحها.


Bazzar-4888

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4888. “(ஹம்மாம் என்று கூறப்படும்) பொதுக் குளியலறையை விட்டு நீங்கள் தவிர்ந்துக் கொள்ளுங்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அங்கு குளிப்பது அழுக்குகளைப் போக்குகிறதே!’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அங்கு உங்கள் மறைவிடங்களை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை மற்றவர்கள் இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர்.

யஃலா பின் உபைத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் யூஸுஃப் பின் மூஸா அவர்கள் மட்டுமே யஃலா பின் உபைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்றே நாம் அறிகிறோம்.

யூஸுஃப் பின் மூஸா அல்லாத மற்றவர்கள் யஃலா பின் உபைத் —> ஸுஃப்யான் ஸவ்ரீ —> இப்னு தாவூஸ் —> தாவூஸ் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் ‘முர்ஸலாக-நபித்தோழரைக் குறிப்பிடாமல்’ அறிவித்துள்ளனர்.


احْذَرُوا بَيْتًا يُقَالُ لَهُ: الْحَمَّامُ قَالُوا: يَا رَسولَ اللهِ يُنَقِّي الْوَسَخَ قَالَ: فَاسْتَتِرُوا.


Bazzar-5332

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5332. ஹதீஸ் எண்-5330 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.



Bazzar-5331

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5331. ஹதீஸ் எண்-5330 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.



Almujam-Alkabir-12757

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

12757.


أَنَّ إِنْسَانًا لَعَنَ الرِّيحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ، وَقَعَتْ عَلَيْهِ اللَّعْنَةُ»


Bazzar-5330

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5330.


أَنَّ الرِّيحَ نَازَعَتْ رَجُلا رِدَاءَهُ فَلَعَنَهَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم فَقَالَ: لا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَى صَاحِبِهَا.


Bazzar-5055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5055. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்று) வியாழக்கிழமை, எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயின் போது மரணித்தார்களோ அந்த நோய் ஏற்பட்டபோது, “என்னிடம் ஒரு ஏடும் மையும் கொண்டு வாருங்கள்! அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறாதவாறு உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதிக் கொடுக்கிறேன்” (என்று கூறினார்கள்).


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இந்தச் செய்தி வேறு சரியான அறிவிப்பாளர்கள்தொடர்கள் வழியாக வந்துள்ளன. இதில் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் ஒரு சொல்லை அதிகமாகச் சேர்த்துள்ளார். அது நிராகரிக்கப்படுகிறது. எனவே, அந்தச் சொல்லை முன்னிட்டு இந்த ஹதீஸ் பலவீனமானதாகி விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்ணியம் கருதி நாம் அந்தக் குறிப்பான சொல்லைக் குறிப்பிடவில்லை.

அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் அவர்கள் கூஃபாவில் வாழ்ந்தார். மேலும் ‘ரய்’ நகரத்தின் நீதிபதியாகவும் இருந்தார். இவர் இப்னு அப்பாஸ் (ரலி) போன்றோர் வழியாக மற்றவர்கள் அறிவிக்காத சில செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இதன் காரணமாக இவர் பலமானவர் அல்ல.


لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


Bazzar-4826

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4826.


لَمَّا كَانَ يَوْمُ الْخَمِيسِ وَمَا يَوْمُ الْخَمِيسِ، ثُمَّ بَكَى ابْنُ عَبَّاسٍ فِي مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم الَّذِي قُبِضَ فِيهِ قَالَ: ائْتُونِي بِصَحِيفَةٍ وَدَوَاةٍ حَتَّى أَكْتُبَ لَكُمْ كِتَابًا لا تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا.


Next Page »