Category: புஹாரி

Bukhari

Bukhari-7560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57

பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதுதலும், சப்தமும் குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்.

7560. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குர்ஆனை ஓதுகிற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. அதன் மணமும் நன்று. குர்ஆனை ஓதாத (இறைநம்பிக்கையாளரான ஒரு)வரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணம் கிடையாது. குர்ஆனை ஓதுகிற பாவியின் நிலை துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும். அதன் மணம் நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆன் ஓதாத பாவியின் நிலை குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பானது. அதற்கு மணமும் கிடையாது.

என அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.199

Book : 97


«مَثَلُ المُؤْمِنِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَمَثَلُ الَّذِي لاَ يَقْرَأُ كَالتَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ كَمَثَلِ الحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا»


Bukhari-7559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7559. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வல்லோனும் உயர்ந்தோனுமான அல்லாஹ் கூறினான்:

என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு வாற்கோதுமையேனும் படைத்துக்காட்டட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.198

Book :97


وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا ذَرَّةً أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً


Bukhari-7558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7558. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைத்தோர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.197

Book :97


إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ


Bukhari-7557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7557. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இந்த (உயிரினங்களின்) உருவங்களைப் படைப்போர் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம் ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 196

Book :97


إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ


Bukhari-7556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7556. அபூ ஜம்ரா அள்ளுபஈ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (அப்துல் கைஸ் குலத்தாரின் நிகழ்ச்சி பற்றிக்) கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் வந்து, ‘எங்களுக்கும் உங்களுக்குமிடையே ‘முளர்’ குலத்து இணைவைப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். எனவே, (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் மட்டும் தான் நாங்கள் உங்களை வந்தடைய முடியும். எனவே, சில கட்டளைகளை எங்களுக்கு அளியுங்கள். நாங்கள் அவற்றின் படி செயல்பட்டால் சொர்க்கம் செல்லவும், எங்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அவற்றின் படி நடக்க நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்கும். (அத்தகைய கட்டளைகள் சிலவற்றை நீங்கள் எங்களுக்கு இடுங்கள்)’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள், ‘நான் உங்களுக்கு நான் விஷயங்களைக் கட்டளையிடுகிறேன். நான்கு விஷயங்களைத் தடை செய்கிறேன். (நான் கட்டளையிடும் நான்கு விஷயங்கள் இவைதாம்:) அல்லாஹ்வை நம்பிக்கை (ஈமான்) கொள்ளும்படி உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன். அல்லாஹ்வை

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ المُشْرِكِينَ مِنْ مُضَرَ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي أَشْهُرٍ حُرُمٍ، فَمُرْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الجَنَّةَ، وَنَدْعُو إِلَيْهَا مَنْ وَرَاءَنَا، قَالَ: ” آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: آمُرُكُمْ بِالإِيمَانِ بِاللَّهِ، وَهَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ؟ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَتُعْطُوا مِنَ المَغْنَمِ الخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: لاَ تَشْرَبُوا فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالظُّرُوفِ المُزَفَّتَةِ، وَالحَنْتَمَةِ


Bukhari-7555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56

அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான் எனும் (37:96ஆவது) இறைவசனம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49)

(உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் என்று கூறப்படும்.

நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியாசனம் (அர்ஷ்) மீதமர்ந்து (ஆட்சி செய்து) கொண்டுள்ளான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரைகின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவைகளாக அமைத்தான். அவனுக்கே ஆக்கமும் ஆட்சியும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54)

இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிக, படைக்கும் ஆற்றலும்

كَانَ بَيْنَ هَذَا الحَيِّ مِنْ جُرْمٍ وَبَيْنَ الأَشْعَرِيِّينَ وُدٌّ وَإِخَاءٌ، فَكُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ فَقُرِّبَ إِلَيْهِ الطَّعَامُ، فِيهِ لَحْمُ دَجَاجٍ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ كَأَنَّهُ مِنَ المَوَالِي، فَدَعَاهُ إِلَيْهِ فَقَالَ: إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ فَحَلَفْتُ لاَ آكُلُهُ، فَقَالَ: هَلُمَّ فَلْأُحَدِّثْكَ عَنْ ذَاكَ: إِنِّي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ، قَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ»، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَهْبِ إِبِلٍ، فَسَأَلَ عَنَّا، فَقَالَ: «أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ؟»، فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، ثُمَّ انْطَلَقْنَا قُلْنَا: مَا صَنَعْنَا حَلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ لاَ يَحْمِلَنَا وَمَا عِنْدَهُ مَا يَحْمِلُنَا؟ ثُمَّ حَمَلَنَا تَغَفَّلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمِينَهُ وَاللَّهِ لاَ نُفْلِحُ أَبَدًا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا لَهُ: فَقَالَ: «لَسْتُ أَنَا أَحْمِلُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا إِلَّا أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ مِنْهُ وَتَحَلَّلْتُهَا»


Bukhari-7554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7554. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்பாக தனக்குத் தானே விதியொன்றை எழுதிக்கொண்டான். ‘என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது’ என்பது தான் அந்த விதி. அது அவனிடமுள்ள அரியாசனத்திற்கு மேலேயே எழுதப்பட்டுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :97


إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ الخَلْقَ: إِنَّ رَحْمَتِي سَبَقَتْ غَضَبِي، فَهُوَ مَكْتُوبٌ عِنْدَهُ فَوْقَ العَرْشِ


Bukhari-7553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 55

மாறாக, இது பெருமை மிக்கக் குர்ஆன் ஆகும். இது பாதுகாக்கப்பெற்ற பலகையில் (பதிவாகி) உள்ளது எனும் (85:21,22ஆகிய) இறைவசனங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

தூர் (சினாய்) மலை மீது சத்தியமாக! எழுதப்பெற்ற வேதத்தின் மீதும் சத்தியமாக! (52:1,2).

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: எழுதப்பெற்ற’ என்பதற்கு மூல ஏடான மொத்த ஏட்டில் எழுதப்பெற்ற என்று பொருள்.

50:18 ஆவது வசனத்தின் பொருளாவது: மனிதன் பேசும் எந்தப் பேச்சும் எழுதிப் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நன்மை தீமை அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

(5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஹர்ரிஃபூன’ எனும் சொல்லுக்கு அகற்றுகிறார்கள்’ என்ற பொருள் இருந்தாலும், எந்த இறை வேதத்திலிருந்தும் அதன் சொல்லை எவராலும் அகற்ற முடியாது. மாறாக, அதற்கு உண்மைக்குப் புறம்பான விளக்கமளிக்கிறார்கள் என்றே பொருளாகும்.

لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ، كَتَبَ كِتَابًا عِنْدَهُ: غَلَبَتْ، أَوْ قَالَ سَبَقَتْ رَحْمَتِي غَضَبِي، فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ


Bukhari-7552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7552. அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் (நல்லடக்கத்தில்) பங்கெடுத்தார்கள். அப்போது குச்சியொன்றை எடுத்து தரையில் குத்தலானார்கள். மேலும், ‘சொர்க்கத்திலோ நரகத்திலோ தம் இருப்பிடம் எழுதப்பட்டிராத எவருமே உங்களிடையே இல்லை’ என்றார்கள். உடனே மக்கள் ‘நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நற்செயல்கள் புரியாமல்) இருந்துவிட மாட்டோமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லிவிட்டு ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 92:5-10 ஆகிய) இறைவசனங்களைக் கூறினார்கள்.192

Book :97


أَنَّهُ كَانَ فِي جَنَازَةٍ فَأَخَذَ عُودًا فَجَعَلَ يَنْكُتُ فِي الأَرْضِ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ أَوْ مِنَ الجَنَّةِ»، قَالُوا: أَلاَ نَتَّكِلُ؟ قَالَ: «اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ»، {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى} [الليل: 5] الآيَةَ


Bukhari-7551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، فِيمَا يَعْمَلُ العَامِلُونَ؟ قَالَ: «كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ»


Next Page » « Previous Page