Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-1795

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1795. முஹம்மத் பின் அலீ பின் ஹுஸைன் பின் அலீ பின் அபூதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் உள்ளன. அவை, அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை ஏற்பட்டதில்லை.

1 . ரமளான் மாதத்தின் முதல் இரவில் சந்திர கிரகணம் ஏற்படுவதாகும்.
2 . அதன் பாதியில் (அதாவது 14 அல்லது 15 ஆம் நாளில்) சூரிய கிரகணம் ஏற்படுவதாகும்.

இவ்விரண்டும் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து இதுவரை நிகழ்ந்ததில்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ்


«إِنَّ لَمَهْدِيِّنَا آيَتَيْنِ لَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ , يَنْخَسِفُ الْقَمَرُ لَأَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ , وَتَنْكَسِفُ الشَّمْسُ فِي النِّصْفِ مِنْهُ , وَلَمْ تَكُونَا مُنْذُ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ»


Daraqutni-1832

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறந்தவரின்) ஜனாஸா தொழுகையின் முதல் தக்பீரின் போது கைகளை உயர்துவார்கள். பிறகு (மீதமுள்ள தக்பீர்களில்) கைகளை உயர்த்தமாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى الْجِنَازَةِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ ثُمَّ لَا يَعُودُ»


Daraqutni-2193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2193.


سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ زَيْدِ بْنِ الْخَطَّابِ , يَقُولُ: إِنَّا صَحِبْنَا أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَعَلَّمْنَا مِنْهُمْ وَإِنَّهُمْ حَدَّثُونَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ , فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَعُدُّوا ثَلَاثِينَ , فَإِنْ شَهِدَ ذَوَا عَدْلٍ فَصُومُوا وَأَفْطِرُوا وَأَنْسِكُوا»


Daraqutni-1270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1270.


صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْتُهُ حِينَ قَالَ: ” {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7] ” , قَالَ: «آمِينَ» وَأَخْفَى بِهَا صَوْتَهُ , وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى , وَسَلَّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ.


Daraqutni-2183

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2183. அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ர் நேரம் இரு வகையாகும். அடிவானில் நீளவாக்கில் செங்குத்தாய் வெண்மை தெரியும் நேரம். இது (உன்னை) ஸஹர் உணவு உண்பதிலிருந்து தடுத்துவிடவேண்டாம். மேலும் இந்த நேரத்தில் (நீ ஃபஜ்ர்) தொழுவது கூடாது.

அடிவானில் அகலவாக்கில் வெண்மை பரவிவிட்டால் (நீ ஸஹர்) உணவு உண்பது தடையாகும். இதில் நீ அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையை தொழுதுக் கொள்!.

அறிவிப்பவர்: ரபீஆ பின் யஸீத் (ரஹ்)

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.


«الْفَجْرُ فَجْرَانِ فَأَمَّا الْمُسْتَطِيلُ فِي السَّمَاءِ فَلَا يَمْنَعَنَّ السَّحُورَ وَلَا تَحِلُّ فِيهِ الصَّلَاةُ , وَإِذَا اعْتَرَضَ فَقَدْ حَرُمَ الطَّعَامُ فَصَلِّ صَلَاةَ الْغَدَاةِ»


Daraqutni-1054

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மஃக்ரிப், இஷாத் தொழுகையின் நேரங்கள்.

1054. உபாதா பின் ஸாமித் (ரலி), ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

(அந்தி நேரம்) அடிவானத்தில் ஏற்படும் நிலை இரு வகையாகும். ஒன்று, சிவந்த நிறமாக மாறுவது. மற்றொன்று, வெண்மை நிறமாக மாறுவது.

(செவ்வானம் எனும் செம்மை மறையும் வரை மஃக்ரிப் தொழுகை தொழுவது கூடும்.) அது மறைந்துவிட்டால் (இஷாத்) தொழுகை தொழுவது கூடும்.

ஃபஜ்ர் நேரம் இரு வகை. ஒன்று, அடிவானில் நீளவாக்கில் (செங்குத்தாய்) வெண்மை தெரியும் நேரம். மற்றொன்று, அகலவாக்கில் பரவலாக வெண்மை தெரியும் நேரம். அகலவாக்கில் வெண்மை வெளிப்பட்டுவிட்டால் (ஃபஜ்ர்) தொழுகை தொழுவது கூடும்.

அறிவிப்பவர்: மக்ஹூல் (ரஹ்)


الشَّفَقُ شَفَقَانِ: الْحُمْرَةُ وَالْبَيَاضُ فَإِذَا غَابَتِ الْحُمْرَةُ حَلَّتِ الصَّلَاةُ , وَالْفَجْرُ فَجْرَانِ الْمُسْتَطِيلُ وَالْمُعْتَرِضُ فَإِذَا انْصَدَعَ الْمُعْتَرِضُ حَلَّتِ الصَّلَاةُ


Daraqutni-2184

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2184.


«هُمَا فَجْرَانِ فَأَمَّا الَّذِي كَأَنَّهُ ذَنَبُ السَّرْحَانِ فَإِنَّهُ لَا يُحِلُّ شَيْئًا وَلَا يُحَرِّمُهُ , وَأَمَّا الْمُسْتَطِيلُ الَّذِي عَارَضَ الْأُفُقَ فَفِيهِ تَحِلُّ الصَّلَاةُ وَيَحْرُمُ الطَّعَامُ»


Daraqutni-1053

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1053.


«الْفَجْرُ فَجْرَانِ فَأَمَّا الْفَجْرُ الَّذِي يَكُونُ كَذَنَبِ السَّرْحَانِ فَلَا يُحِلُّ الصَّلَاةَ وَلَا يُحَرِّمُ الطَّعَامَ , وَأَمَّا الَّذِي يَذْهَبُ مُسْتَطِيلًا فِي الْأُفُقِ فَإِنَّهُ يُحِلُّ الصَّلَاةَ وَيُحَرِّمُ الطَّعَامَ»


Daraqutni-2185

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2185.


«الْفَجْرُ فَجْرَانِ فَجَرٌ تُحْرَمُ فِيهِ الصَّلَاةُ وَيَحِلُّ فِيهِ الطَّعَامُ , وَفَجْرٌ يَحْرُمُ فِيهِ الطَّعَامُ وَتَحِلُّ فِيهِ الصَّلَاةُ»


Daraqutni-3079

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஒருவர் மற்றவருக்கு) தீங்கிழைக்கவும் கூடாது. (பழிக்குப் பழி வாங்குவதில்) அதிகமாக தீங்கிழைக்கவும் கூடாது.

ஒருவர் மற்றவருக்கு தீங்கிழைத்தால் அல்லாஹ் அவருக்கு தீங்கிழைக்கிறான். ஒருவர் மற்றவருக்கு சிரமத்தை அளித்தால் அவருக்கு அல்லாஹ் சிரமத்தை அளிக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ , مَنْ ضَارَّ ضَرَّهُ اللَّهُ , وَمَنْ شَاقَّ شَقَّ اللَّهُ عَلَيْهِ»


Next Page »