Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-534

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

534.

ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَيُّمَا رَجُلٍ مَسَّ فَرْجَهُ فَلْيَتَوَضَّأْ , وَأَيُّمَا امْرَأَةٍ مَسَّتْ فَرْجَهَا فَلْتَتَوَضَّأْ»


Daraqutni-1819

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1819. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுதார்கள். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது நபிவழியில் உள்ளது என்றோ அல்லது இது முழுமையான நபிவழி என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)


صَلَّى ابْنُ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ , فَقُلْتُ لَهُ , فَقَالَ: إِنَّهُ مِنَ السُّنَّةِ , أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ


Daraqutni-1514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1514.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»


Daraqutni-371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

371.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَمُؤَخِّرَهُ وَصُدْغَيْهِ , ثُمَّ أَدْخَلَ إِصْبُعَيْهِ السَّبَّابَتَيْنِ فَمَسَحَ أُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا»


Daraqutni-86

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

86. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான், சூரிய வெளிச்சத்தில் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருக்கும்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், ஹுமைராவே! (சிகப்பழகியே!) இவ்வாறு செய்யாதே! ஏனெனில் இந்த (சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட) தண்ணீர் குஷ்ட நோயை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

தாரகுத்னீ இமாம் கூறுகிறார்:

இது மிகவும் அரிதான செய்தி. இதில் வரும் காலித் பின் இஸ்மாயீல் என்பவர் (பொய்யர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால்) கைவிடப்பட்டவர் ஆவார்.


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَخَّنْتُ مَاءً فِي الشَّمْسِ , فَقَالَ: «لَا تَفْعَلِي يَا حُمَيْرَا فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ»


Daraqutni-87

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

87.


نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَوَضَّأَ بِالْمَاءِ الْمُشَمَّسِ أَوْ يُغْتَسَلَ بِهِ , وَقَالَ: «إِنَّهُ يُورِثُ الْبَرَصَ»


Daraqutni-4760

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4760. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திடலில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தமது உரையை முடித்தவுடன் மிம்பரிலிருந்து இறங்கினார்கள். ஒரு ஆடு கொண்டு வரப்பட்டது. அதனை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கையினால் அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே மிகப் பெரியவன்); இது என் சார்பாகவும், என்னுடைய உம்மத்தில் உள்ஹிய்யா கொடுக்காதவர்கள் சார்பாகவும் ஆகும்” எனக் கூறினார்கள்.


شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا صَلَّى وَقَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ فَأُتِيَ بِكَبْشِهِ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ , وَقَالَ: «بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَنْ مَنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»


Next Page » « Previous Page