8716. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“மறுமை நாள் ஏற்படும் போது, தோல் விரிக்கப்படுவதைப் போல பூமி விரிக்கப்படும். அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்துப் படைப்புகளையும் ஒன்று திரட்டுவான்.
அந்நாளில், கால்நடைகளுக்கு இடையிலான அநீதிகளுக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். எந்தளவுக்கென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை முட்டியிருந்தால், அதற்காக கொம்பில்லாத ஆடு (கொம்புள்ள ஆட்டை) பழிவாங்கும்.
கால்நடைகளுக்கு இடையிலான தீர்ப்புகளை அல்லாஹ் முடித்ததும், அவற்றிடம் ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அவை மண்ணாகிவிடும். இதைக் காணும் இறைமறுப்பாளன், ‘அந்தோ! நானும் மண்ணாகிப் போயிருக்கக் கூடாதா!’ என்று (ஏக்கத்துடன்) கூறுவான்.
அறிவிப்பவர்: அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் (ரஹ்)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் அபுல்முஃகீரா என்பவரைத் தவிர அனைவரும் பலமானவர்கள். அபுல்முஃகீரா என்பவர் அறியப்படாதவர் ஆவார். என்றாலும், ஒரு நபித்தோழர் குர்ஆன் வசனத்திற்கு அளிக்கும் இது போன்ற விளக்கங்கள் ‘முஸ்னத்’ (நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது) என்ற தரத்தைப் பெறும்.
” إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مُدَّتِ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ وَحَشَرَ اللَّهُ الْخَلَائِقَ الْإِنْسَ وَالْجِنَّ وَالدَّوَابَّ وَالْوُحُوشَ فَإِذَا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَعَلَ اللَّهُ الْقِصَاصَ بَيْنَ الدَّوَابِّ حَتَّى تَقُصَّ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الْقَرْنَاءِ بِنَطْحَتِهَا فَإِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقِصَاصِ بَيْنَ الدَّوَابِّ قَالَ لَهَا: كُونِي تُرَابًا، فَتَكُونُ تُرَابًا فَيَرَاهَا الْكَافِرُ فَيَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا
சமீப விமர்சனங்கள்