Category: ஹாகிம்

Hakim

Hakim-8716

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

8716. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“மறுமை நாள் ஏற்படும் போது, தோல் விரிக்கப்படுவதைப் போல பூமி விரிக்கப்படும். அல்லாஹ் மனிதர்கள், ஜின்கள், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்துப் படைப்புகளையும் ஒன்று திரட்டுவான்.

அந்நாளில், கால்நடைகளுக்கு இடையிலான அநீதிகளுக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். எந்தளவுக்கென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை முட்டியிருந்தால், அதற்காக கொம்பில்லாத ஆடு (கொம்புள்ள ஆட்டை) பழிவாங்கும்.

கால்நடைகளுக்கு இடையிலான தீர்ப்புகளை அல்லாஹ் முடித்ததும், அவற்றிடம் ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அவை மண்ணாகிவிடும். இதைக் காணும் இறைமறுப்பாளன், ‘அந்தோ! நானும் மண்ணாகிப் போயிருக்கக் கூடாதா!’ என்று (ஏக்கத்துடன்) கூறுவான்.

அறிவிப்பவர்: அபுல்முஃகீரா அல்கவ்வாஸ் (ரஹ்)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில்  அபுல்முஃகீரா என்பவரைத் தவிர அனைவரும் பலமானவர்கள். அபுல்முஃகீரா என்பவர் அறியப்படாதவர் ஆவார். என்றாலும், ஒரு நபித்தோழர் குர்ஆன் வசனத்திற்கு அளிக்கும் இது போன்ற விளக்கங்கள் ‘முஸ்னத்’ (நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டது) என்ற தரத்தைப் பெறும்.


” إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ مُدَّتِ الْأَرْضُ مَدَّ الْأَدِيمِ وَحَشَرَ اللَّهُ الْخَلَائِقَ الْإِنْسَ وَالْجِنَّ وَالدَّوَابَّ وَالْوُحُوشَ فَإِذَا كَانَ ذَلِكَ الْيَوْمُ جَعَلَ اللَّهُ الْقِصَاصَ بَيْنَ الدَّوَابِّ حَتَّى تَقُصَّ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الْقَرْنَاءِ بِنَطْحَتِهَا فَإِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقِصَاصِ بَيْنَ الدَّوَابِّ قَالَ لَهَا: كُونِي تُرَابًا، فَتَكُونُ تُرَابًا فَيَرَاهَا الْكَافِرُ فَيَقُولُ: يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا


Hakim-3231

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3231. அபூஹுரைரா (ரலி) அவர்கள், “பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே. அந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடவில்லை. பின்னர் அவர்கள் தம் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவார்கள். (அல்குர்ஆன் 6:38) எனும் இறைவசனம் குறித்து கூறியதாவது:

“மறுமை நாளில் கால்நடைகள், ஊர்ந்து செல்பவைகள், பறவைகள் மற்றும் அனைத்துப் படைப்புகளும் ஒன்று திரட்டப்படும். அல்லாஹ்வின் நீதியானது எந்த அளவு (துல்லியமாக) இருக்குமென்றால், கொம்புள்ள ஆடு கொம்பில்லாத ஆட்டை (இவ்வுலகில்) முட்டியிருந்தால், அதற்காக அந்தக் கொம்பில்லாத ஆட்டிற்குப் பழிவாங்கித் தரப்படும்.

பின்னர் அல்லாஹ் (அம்மிருகங்களைப் பார்த்து), ‘நீங்கள் மண்ணாகி விடுங்கள்’ என்று கூறுவான். அதைக் காணும் போதே இறைமறுப்பாளன்,

“அந்தோ பரிதாபம்! நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா?” என்று கூறுவான். (அல்குர்ஆன்: 78:40)

அறிவிப்பவர்: யஸீத் பின் அஸம் (ரஹ்)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும்) ஜஅஃபர் அல்ஜித்ரீ (அல்ஜஸரீ என்பதே சரி) என்பவர் ‘ஜஅஃபர் பின் புர்கான்’ ஆவார். இவரை இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார். எனவே, இச்செய்தி இமாம் முஸ்லிமின் நிபந்தனைப்படி

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ {أُمَمٌ أَمْثَالُكُمْ} [الأنعام: 38] قَالَ: ” يُحْشَرُ الْخَلْقُ كُلُّهُمْ يَوْمَ الْقِيَامَةِ الْبَهَائِمُ، وَالدَّوَابُّ، وَالطَّيْرُ، وَكُلُّ شَيْءٍ فَيَبْلُغُ مِنْ عَدْلِ اللَّهِ أَنْ يَأْخُذَ لِلْجَمَّاءِ مِنَ الْقَرْنَاءِ، ثُمَّ يَقُولُ: كُونِي تُرَابًا فَذَلِكَ {يَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا} [النبأ: 40]


Hakim-7778

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7778.


«اتَّقُوا بَيْتًا يُقَالُ لَهُ الْحَمَّامُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ يُذْهِبُ الدَّرَنَ وَيَنْفَعُ الْمَرِيضَ، قَالَ: «فَمَنْ دَخَلَهُ فَلْيَسْتَتِرْ»


Hakim-581

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

581.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يَدْخُلَ الرَّجُلُ الْمَاءَ إِلَّا بِمِئْزَرٍ»


Hakim-7779

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7779.


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيلَتَهُ الْحَمَّامَ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَجْلِسْ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا الْخَمْرُ»


Hakim-16

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

16.


جَلَسْتُ مَجْلِسًا فِيهِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَمُرَةَ وَلَا أَعْرِفُهُ، فَقَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: «مَا عَلَى الْأَرْضِ نَفْسٌ تَمُوتُ لَا تُشْرِكُ بِاللَّهِ شَيْئًا تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ، يَرْجِعُ ذَلِكَ إِلَى قَلْبٍ مُوقِنٍ إِلَّا غَفَرَ اللَّهُ لَهَا» . قَالَ: فَقُلْتُ: أَأَنْتَ سَمِعْتَ مِنْ مُعَاذٍ، فَعَنَّفَنِي الْقَوْمُ، فَقَالَ: دَعُوهُ فَإِنَّهُ لَمْ يُسِيءِ الْقَوْلَ، نَعَمْ، أَنَا سَمِعْتُهُ مِنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، وَزَعَمَ مُعَاذٌ أَنَّهُ سَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.


Hakim-1948

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1948.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَالتَّرَدِّي، وَالْهَرَمِ، وَالْغَمِّ وَالْغَرَقِ، وَالْحَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ لَدِيغًا»


Hakim-6005

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6005. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உஹுத் போரின்போது நான் உங்களைக் கண்டேன். (ஆனால், எதிர்த்துத் தாக்காமல்) உங்களை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆனால், நான் உன்னைக் கண்டிருந்தால் உன்னை விட்டு முகத்தை திருப்பியிருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.


قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «قَدْ رَأَيْتُكَ يَوْمَ أُحُدٍ فَصَفَحْتُ عَنْكَ» ، فَقَالَ أَبُو بَكْرٍ: «لَكِنِّي لَوْ رَأَيْتُكَ لَمْ أَصْفَحْ عَنْكَ»


Hakim-8718

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8718. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில் ஒரு தடவை) அமர்ந்திருக்கும்போது, அவர்களின் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவு சிரிப்பதை நாங்கள் பார்த்தோம். உடனே உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைச் சிரிக்க வைத்தது எது?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மனிதர்கள், கண்ணியம் மிக்க நம் இரட்சகனின் முன்னிலையில் மண்டியிட்டனர். அவ்விருவரில் ஒருவர், ‘என் இரட்சகனே! என் சகோதரனால் எனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு ஈடுசெய்யும் உரிமையை எனக்கு கொடு!’ என்று கூறினார். அப்போது அல்லாஹ் அந்த உரிமையைக் கோரியவரிடம், ‘உன் சகோதரனிடமோ, அவனது நன்மைகளில் எதுவும் மீதமில்லை! நீ இப்போது என்ன செய்வாய்?’ என்று கேட்டான். அதற்கு அவர், ‘என் இரட்சகனே! அப்படியானால், என்மீதுள்ள பாவச் சுமைகளை அவன் சுமக்கட்டும்!’ என்று கூறினார்.”

(இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் கூறியபோது) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. பின்னர் அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக, அந்த நாள் மகத்தான நாள். தங்கள்மீதுள்ள பாவச் சுமைகளை யாரேனும் சுமந்துகொள்ள மாட்டார்களா என்று மக்கள் ஏங்கக்கூடிய நாள் அது!”

அப்போது

بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ إِذْ رَأَيْنَاهُ ضَحِكَ حَتَّى بَدَتْ ثَنَايَاهُ، فَقَالَ لَهُ عُمَرُ: مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي؟ قَالَ: ” رَجُلَانِ مِنْ أُمَّتِي جَثَيَا بَيْنَ يَدَيْ رَبِّ الْعِزَّةِ، فَقَالَ أَحَدُهُمَا: يَا رَبِّ خُذْ لِي مَظْلِمَتِي مِنْ أَخِي، فَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلطَّالِبِ: فَكَيْفَ تَصْنَعُ بِأَخِيكِ وَلَمْ يَبْقَ مِنْ حَسَنَاتِهِ شَيْءٌ؟ قَالَ: يَا رَبِّ فَلْيَحْمِلْ مِنْ أَوْزَارِي ” قَالَ: وَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبُكَاءِ، ثُمَّ قَالَ: ” إِنَّ ذَاكَ الْيَوْمَ عَظِيمٌ يَحْتَاجُ النَّاسُ أَنْ يُحْمَلَ عَنْهُمْ مِنْ أَوْزَارِهِمْ، فَقَالَ اللَّهُ تَعَالَى لِلطَّالِبِ: ” ارْفَعْ بَصَرَكَ فَانْظُرْ فِي الْجِنَّانِ فَرَفَعَ رَأْسَهُ، فَقَالَ: يَا رَبِّ أَرَى مَدَائِنَ مِنْ ذَهَبٍ وَقُصُورًا مِنْ ذَهَبً مُكَلَّلَةً بِالُّلؤْلُؤِ لِأَيِّ نَبِيٍّ هَذَا أَوْ لِأَيِّ صِدِّيقٍ هَذَا أَوْ لِأَيِّ شَهِيدٍ هَذَا؟ قَالَ: هَذَا لِمَنْ أَعْطَى الثَّمَنَ، قَالَ: يَا رَبِّ وَمَنْ يَمْلِكُ ذَلِكَ؟ قَالَ: أَنْتَ تَمْلِكُهُ، قَالَ: بِمَاذَا؟ قَالَ: بِعَفْوِكَ عَنْ أَخِيكَ، قَالَ: يَا رَبِّ فَإِنِّي قَدْ عَفَوْتُ عَنْهُ، قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: فَخُذْ بِيَدِ أَخِيكَ فَأَدْخِلْهُ الْجَنَّةَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ: «اتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ فَإِنَّ اللَّهَ تَعَالَى يُصْلِحُ بَيْنَ الْمُسْلِمِينَ»


Hakim-2027

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2027. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால், புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை பதிவு செய்யவில்லை.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ: «هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ، وَمَا بَيْنَهُ، وَبَيْنَ اسْمِ اللَّهِ الْأَكْبَرِ، إِلَّا كَمَا بَيْنَ سَوَّادِ الْعَيْنِ، وَبَيَاضِهَا مِنَ الْقُرْبِ»


Next Page » « Previous Page