Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-32674

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

32674. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.

அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)


أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ وَالْمِهْرَجَانِ , فَيَقُولُ لِأَهْلِهِ: مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَاقْبَلُوهُ , وَمَا كَانَ سِوَى ذَلِكَ فَرُدُّوهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-32673

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

32673.


إِنَّ لَنَا إِطَارًا مِنَ الْمَجُوسِ وَإِنَّهُمْ يَكُونُ لَهُمُ الْعِيدُ فَيُهْدُونَ لَنَا , فَقَالَتْ: أَمَّا مَا ذُبِحَ لِذَلِكَ الْيَوْمِ فَلَا تَأْكُلُوا , وَلَكِنْ كُلُوا مِنْ أَشْجَارِهِمْ.


Musannaf-Ibn-Abi-Shaybah-24371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24371.


أَنَّ امْرَأَةً سَأَلَتْ عَائِشَةَ، قَالَتْ: إِنَّ لَنَا أَطْيَارًا مِنَ الْمَجُوسِ، وَإِنَّهُ يَكُونُ لَهُمُ الْعِيدُ فَيُهْدُونَ لَنَا، فَقَالَتْ: «أَمَّا مَا ذُبِحَ لِذَلِكَ الْيَوْمِ فَلَا تَأْكُلُوا، وَلَكِنْ كُلُوا مِنْ أَشْجَارِهِمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-24372

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

24372. அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களின் (வீட்டுக்கு) அருகில் சில நெருப்பு வணங்கிகள் வசித்தனர். அவர்கள், (ஈரான்-பாரசீக புத்தாண்டான) நைரூஸ் பண்டிகையின் போதும், உற்சவம் எனும் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் (மிஹ்ரஜான்) திருவிழாவின் போதும் அபூபர்ஸா (ரலி) அவர்(களின் குடும்பத்தாரு)க்கு அன்பளிப்புகளை வழங்குவார்கள்.

அப்போது, அபூபர்ஸா (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம், “அவர்கள் பழங்கள் எதையேனும் பரிசாகக் கொடுத்தால் அதை மட்டும் உண்ணுங்கள். மற்றவற்றைத் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஹஸன் பின் ஹகீம் அவர்களின் தாயார் (அபூபர்ஸா (ரலி) அவர்களின் அடிமைப்பெண்)


أَنَّهُ كَانَ لَهُ سُكَّانٌ مَجُوسٌ، فَكَانُوا يُهْدُونَ لَهُ فِي النَّيْرُوزِ، وَالْمِهْرَجَانِ، فَكَانَ يَقُولُ لِأَهْلِهِ: «مَا كَانَ مِنْ فَاكِهَةٍ فَكُلُوهُ، وَمَا كَانَ مِنْ غَيْرِ ذَلِكَ فَرُدُّوهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-6285

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6285.


لَمَّا كَفَّ بَصَرُهُ أَتَاهُ رَجُلٌ فَقَالَ لَهُ: إِنْ دَاوَيْتُكَ لَهُ إِنْ صَبَرْتَ لِي سَبْعًا لَا تُصَلِّي إِلَّا مُسْتَلْقِيًا، دَاوَيْتُكَ وَرَجَوْتُ أَنْ تَبْرَأَ عَيْنُكَ، قَالَ: فَأَرْسَلَ ابْنُ عَبَّاسٍ إِلَى عَائِشَةَ، وَأَبِي هُرَيْرَةَ، وَغَيْرِهِمَا مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّهُمْ يَقُولُونَ: «أَرَأَيْتُ إِنْ مِتُّ فِي هَذِهِ السَّبْعِ كَيْفَ تَصْنَعُ بِالصَّلَاةِ؟» قَالَ: فَتَرَكَ عَيْنَيْهِ لَمْ يَكُ يُدَاوِيهَا


Musannaf-Ibn-Abi-Shaybah-34214

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

34214. கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

வானவர்கள், ஆதமின் மக்களையும் அவர்கள் செய்யும் பாவங்களையும் கண்டபோது, “அல்லாஹ்வே! மனிதர்கள் பாவம் செய்கிறார்கள்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நீங்களும் அவர்களைப் போல இருந்தால், அவர்கள் செய்வதைப் போலவே செய்வீர்கள்” என்று கூறினான். பின்னர், “உங்களில் இருந்து இரண்டு வானவர்களைத் தேர்ந்தெடுங்கள்” என்றான். அவர்கள் ஹாரூத், மாரூத் எனும் இரு வானவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

பின்னர், உயர்வும் வளமும் மிக்கவனான அல்லாஹ் அவ்விருவரிடம், “எனக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு தூதர் இருக்கிறார். (ஆனால்) எனக்கும் உங்களுக்கும் இடையில் யாரும் இல்லை. (எனவே என்னுடைய கட்டளை உங்களுக்கென்னவெனில்) என்னுடன் யாரையும் இணை வைக்காதீர்கள்; திருடாதீர்கள்; விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று கூறினான்.

மேலும் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவர்கள் அந்த ஒரு நாளை முழுமையாக அடைவதற்குள், தங்களுக்குத் தடைசெய்யப்பட்ட (பாவமான)தில் விழுந்துவிட்டனர்.


” لَمَّا رَأَتِ الْمَلَائِكَةُ بَنِي آدَمَ وَمَا يُذْنِبُونَ , قَالُوا: يَا رَبِّ يُذْنِبُونَ , قَالَ: لَوْ كُنْتُمْ مِثْلَهُمْ فَعَلْتُمْ كَمَا يَفْعَلُونَ , فَاخْتَارُوا مِنْكُمْ مَلَكَيْنِ , قَالَ: فَاخْتَارُوا هَارُوتَ وَمَارُوتَ , فَقَالَ لَهُمَا تَبَارَكَ وَتَعَالَى: إِنَّ بَيْنِي وَبَيْنَ النَّاسِ رَسُولًا , فَلَيْسَ بَيْنِي وَبَيْنَكُمْ أَحَدٌ , لَا تُشْرِكَا بِي شَيْئًا وَلَا تَسْرِقَا وَلَا تَزْنِيَا، قَالَ: عَبْدُ اللَّهِ: قَالَ كَعْبٌ: فَمَا اسْتَكْمَلَا ذَلِكَ الْيَوْمَ حَتَّى وَقَعَا فِيمَا حُرِّمَ عَلَيْهِمَا “


Musannaf-Ibn-Abi-Shaybah-25628

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25628. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹதீஸை விளங்க இயலாதவருக்கு அதை அறிவிக்காதே!. ஏனெனில், அவ்வாறு செய்வது அவரைப் பாதிக்கக்கூடும்; எந்த நன்மையையும் தராது.


«لَا تُحَدِّثْ بِالْحَدِيثِ إِلَّا مَنْ يَعْرِفُهُ، فَإِنَّ مَنْ لَا يَعْرِفُهُ يَضُرُّهُ وَلَا يَنْفَعُهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25529

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25529. அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹதீஸை விளங்க இயலாதவருக்கு அதை அறிவிக்காதே!. ஏனெனில், அவ்வாறு செய்வது அவரைப் பாதிக்கக்கூடும்; எந்த நன்மையையும் தராது.


«لَا تُحَدِّثْ بِالْحَدِيثِ مَنْ لَا يَعْرِفُهُ، فَإِنَّ مَنْ لَا يَعْرِفُهُ يَضُرُّهُ وَلَا يَنْفَعُهُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-14450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு, அவரை தடுத்து நிறுத்தும் அளவிற்கு கடுமையான நோய் அல்லது வெளிப்படையான (அவசியத்) தேவை அல்லது கொடுங்கோல் ஆட்சியாளர் ஆகியவை இல்லாதிருந்தும், இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இருந்தால், அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ தான் விரும்பிய நிலையில் இறக்கட்டும்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் (ரஹ்)


«مَنْ مَاتَ وَلَمْ يَحُجَّ حَجَّةَ الْإِسْلَامِ لَمْ يَمْنَعْهُ مَرَضٌ حَابِسٌ، أَوْ حَاجَةٌ ظَاهِرَةٌ، أَوْ سُلْطَانٌ جَائِرٌ، فَلْيَمُتْ عَلَى أَيِّ حَالٍ شَاءَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»


Next Page »