Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-33038

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

33038. ஸல்மான் (ரலி) அவர்கள், “ஒரு மனிதர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; மற்றொரு மனிதர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு விளக்கினார்கள்:

இரு மனிதர்கள் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றனர். அக்கூட்டத்தினர் தங்களுக்கென ஒரு சிலையினை வைத்து (அதனை வணங்கி) அதில் மூழ்கிப் போயிருந்தனர். ‘இன்று எம்மை எவர் கடந்து சென்றாலும் (இந்தச் சிலைக்கு) ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்காமல் செல்லக்கூடாது’ என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிக்கொண்டனர்.

அவர்கள் அவ்விருவரில் ஒருவரிடம், ‘ஏதாவது ஒன்றை (சிலைக்கு) அர்ப்பணிப்பீராக!’ என்று கூறினர். அவர் (அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் எதையும் அர்ப்பணிக்க) மறுத்துவிட்டார். அதனால் அவர் கொல்லப்பட்டார். (அவர் சொர்க்கம் சென்றார்).

பின்னர் அவர்கள் மற்றொருவரிடம், ‘நீரும் ஏதாவது ஒன்றை அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லையே’ என்றார். அவர்கள், ‘ஓர் ஈயையேனும் அர்ப்பணிப்பீராக!’ என்றனர். அதற்கு அவர், ‘ஒரு ஈதானே, இதில் என்ன இருக்கப் போகிறது’ என்று கூறி, ஓர் ஈயை அர்ப்பணித்தார். (இதன் காரணமாக) அவர் நரகில் நுழைந்தார்.”

அப்போது ஸல்மான் (ரலி) அவர்கள், “இவர் ஓர் ஈயினால் சொர்க்கம் சென்றார்; அவர் ஓர் ஈயினால் நரகம் சென்றார்”

«دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ وَدَخَلَ رَجُلٌ النَّارَ، مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ قَدْ عَكَفُوا عَلَى صَنَمٍ لَهُمْ» وَقَالُوا: لَا يَمُرُّ عَلَيْنَا الْيَوْمَ أَحَدٌ إِلَّا قَدَّمَ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَدِّمْ شَيْئًا، فَأَبَى فَقُتِلَ، وَقَالُوا لِلْآخَرِ: قَدِّمْ شَيْئًا، فَقَالُوا: قَدِّمْ وَلَوْ ذُبَابًا، فَقَالَ: وَأَيْشٍ ذُبَابٌ، فَقَدَّمَ ذُبَابًا فَدَخَلَ النَّارَ، فَقَالَ سَلْمَانُ: «فَهَذَا دَخَلَ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ هَذَا النَّارَ فِي ذُبَابٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-19522

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

19522.


بَعَثَ أَبُو بَكْرٍ جَيْشًا إِلَى الشَّامِ فَخَرَجَ يُشَيِّعُهُمْ عَلَى رِجْلَيْهِ فَقَالُوا: يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَنْ لَوْ رَكِبَتْ , قَالَ: أَحْتَسِبُ خُطَايَ فِي سَبِيلِ اللَّهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-36795

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

36795. அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “உஹுத் போரின்போது நான் உங்களைக் கண்டேன். (ஆனால், எதிர்த்துத் தாக்காமல்) உங்களை விட்டு முகத்தை திருப்பிக் கொண்டேன்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆனால், நான் உன்னைக் கண்டிருந்தால் உன்னை விட்டு முகத்தை திருப்பியிருக்க மாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.


قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ لِأَبِي بَكْرٍ: ” رَأَيْتُكَ يَوْمَ أُحُدٍ فَصَدَفْتُ عَنْكَ , قَالَ: فَقَالَ أَبُو بَكْرٍ: «لَكِنِّي لَوْ رَأَيْتُكَ مَا صَدَفْتُ عَنْكَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-15565

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

15565. ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது பத்னுல் வாதீ எனும்) பள்ளத்தின் நடுவில் வேகமாகச் செல்லும்போது, “ரப்பிஃக்ஃபிர் வர்ஹம் இன்னக்க அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறிவந்தார்கள்.

(பொருள்: என் இரட்சகனே! மன்னிப்பாயாக. கிருபை செய்வாயாக. நிச்சயமாக நீயே எல்லோரையும்விட மிக கண்ணியமானவனும், மிக்க கொடை வள்ளலும் ஆவாய்)


كَانَ عَبْدُ اللَّهِ إِذَا سَعَى فِي بَطْنِ الْوَادِي قَالَ: «رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-7619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7619.


سَمِعْتُ رَبَّ هَذِهِ الدَّارِ يَعْنِي ابْنَ مَسْعُودٍ: «حَلَفَ فَبَالَغَ فِي الْيَمِينِ، مَا صَلَّتِ امْرَأَةٌ صَلَاةً أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ صَلَاةٍ فِي بَيْتِهَا إِلَّا فِي حَجٍّ أَوْ عُمْرَةٍ، إِلَّا امْرَأَةٌ قَدْ أَيِسَتْ مِنَ الْبُعُولَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-34941

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

34941.


كَانَ يُقَالُ: بَادِرُوا بِالْعَمَلِ أَرْبَعًا: بِالْحَيَاةِ قَبْلَ الْمَمَاتِ , وَبِالصِّحَّةِ قَبْلَ السَّقَمِ , وَبِالْفَرَاغِ قَبْلَ الشُّغْلِ , وَلَمْ أَحْفَظِ الرَّابِعَةَ


Musannaf-Ibn-Abi-Shaybah-34319

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

34319. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:

ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!

1 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.
2 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
5 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ , وَفَرَاغَكَ قَبْلَ شَغْلِكَ , وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ , وَشَبَابَكَ قَبْلَ هَرَمِكَ , وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ “


Next Page »