Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-34612

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

34612. பள்ளிவாசல்களுக்கு அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். அவர்களின் சபைத்தோழர்களாக வானவர்கள் இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைப் பற்றி விசாரிப்பார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹாஸிம் (ரஹ்)


«إِنَّ لِلْمَسَاجِدِ مِنْ عِبَادِ اللَّهِ أَوْتَادًا، جُلَسَاؤُهُمُ الْمَلَائِكَةُ، فَإِنْ فَقَدُوهُمْ سَأَلُوا عَنْهُمْ، فَإِنْ كَانُوا مَرْضَى عَادُوهُمْ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29621

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

29621. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ ஸூஇ இகாபிஹீ, வ ஷர்ரி இபாதிஹீ, வமின் ஷர்ரிஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் கெட்ட தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் தீமையை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا فَزِعَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَسُوءِ عِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ شَرِّ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ


Musannaf-Ibn-Abi-Shaybah-23604

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், “பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ ஷர்ரி இகாபிஹீ, வஷர்ரி இபாதிஹீ, வஷர்ரிஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தீய தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் தீமையை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي مَنَامِهِ فَلْيَقُلْ «بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَشَرِّ عِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَشَرِّ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-23547

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23547. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், ” பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ ஸூஇ இகாபிஹீ, வமின் ஷர்ரி இபாதிஹீ, வமின் ஷர்ரிஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.

(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் கெட்ட தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் தீமையை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

தன் பிள்ளைகளில் விவரமுள்ளவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) இவைகளை கற்றுக் கொடுப்பார்கள். விவரமில்லாத பிள்ளைகளுக்கு அதை எழுதி அவர்களின் உடலில் கட்டிவிடுவார்கள்.


إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي نَوْمِهِ فَلْيَقُلْ: بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَسُوءِ عِقَابِهِ، وَمِنْ شَرِّ عِبَادِهِ، وَمِنْ شَرِّ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ «فَكَانَ عَبْدُ اللَّهِ يُعَلِّمُهَا وَلَدَهُ مَنْ أَدْرَكَ مِنْهُمْ، وَمَنْ لَمْ يُدْرِكْ كَتَبَهَا وَعَلَّقَهَا عَلَيْهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-5721

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5721. இருபெருநாள் தொழுகைகளில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கூறவேண்டும் என்று இப்னு உமர் (ரலி) கூறினார்.

அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)


«التَّكْبِيرُ فِي الْعِيدَيْنِ سَبْعٌ وَخَمْسٌ»


Musannaf-Ibn-Abi-Shaybah-5694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5694. நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் ஆக மொத்தம் 12 தக்பீர்களை கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ فِي عِيدٍ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً، سَبْعًا فِي الْأُولَى، وَخَمْسًا فِي الْآخِرَةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25186

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25186 . மஸ்ரூக் (ரஹ்) அவர்களின் வாள் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)


«كَانَ مَسْرُوقٌ سَيْفُهُ مُحَلًّى»


Musannaf-Ibn-Abi-Shaybah-29814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29814.


إذَا خَرَجَ مِنْ بَيْتِهِ فَقَالَ : بِسْمِ اللهِ ، تَوَكَّلْت عَلَى اللهِ ، وَلا حول ولا قُوَّةَ إِلاَّ بِاللهِ , تلقت الشَّيَاطِينُ بَعْضُهُمْ بَعْضًا قَالُوا : هَذَا عَبْدٌ قَدْ هُدِيَ وَحُفِظَ وَكُفِيَ فَلا سَبِيلَ لَكُمْ عَلَيْهِ ، فَيَتَصَدَّعُونَ عَنهُ.


Musannaf-Ibn-Abi-Shaybah-29813

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29813.


إذَا خَرَجَ الرَّجُلُ مِنْ مَنْزِلِهِ اسْتَقْبَلَتْهُ الشَّيَاطِينُ ، فَإِذَا قَالَ بِسْمِ اللهِ قَالَتِ الْمَلائِكَةُ : هُدِيتَ ، وَإِذَا قَالَ : تَوَكَّلْت عَلَى اللهِ قَالَتْ : كُفِيت ، وَإِذَا قَالَ لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلاَّ بِاللهِ قَالَتْ : حُفِظْت ، فَتَقُولُ الشَّيَاطِينُ بَعْضُهَا لِبَعْضٍ : مَا سَبِيلُكُمْ عَلَى مَنْ كُفِيَ وَهُدِيَ وَحُفِظَ.


Next Page » « Previous Page