Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-15264

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

15264. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக நோன்பு ஒரு கேடயமாகும். அதைக் கொண்டு அடியான் நரக நெருப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.

(மேலும் அல்லாஹ் கூறுகிறான்:) அந்த நோன்பு எனக்கே உரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«إِنَّمَا الصِّيَامُ جُنَّةٌ، يَسْتَجِنُّ بِهَا الْعَبْدُ مِنَ النَّارِ، هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ»


Musnad-Ahmad-4142

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4142. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தரையில்) ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள்.

பின்னர் அதற்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை சிதறிக்கிடக்கும் (பல) வழிகள். இந்த ஒவ்வொரு வழியிலும் ஒரு சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)


(இவை, “சிதறிக்கிடக்கும் பல வழிகள்” என்ற வார்த்தைகளில் “சிதறிக்கிடக்கும்” என்று வார்த்தையை யஸீத் பின் ஹாரூன் அவர்கள் அறிவித்துள்ளார்.)


خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: ” هَذِهِ سُبُلٌ – قَالَ يَزِيدُ: مُتَفَرِّقَةٌ – عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ “، ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ، فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ)


Musnad-Ahmad-4437

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4437. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் கையால் ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் நேரான வழியாகும்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து அதன் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை பல வழிகளாகும். இவற்றில் ஒவ்வொரு வழியிலும் ஒரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)


خَطَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَطًّا بِيَدِهِ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ مُسْتَقِيمًا» ، قَالَ: ثُمَّ خَطَّ عَنْ يَمِينِهِ، وَشِمَالِهِ، ثُمَّ قَالَ: «هَذِهِ السُّبُلُ، لَيْسَ مِنْهَا سَبِيلٌ إِلَّا عَلَيْهِ شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ)


Musnad-Ahmad-9333

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

9333.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Musnad-Ahmad-8847

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8847.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَلْحَاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»


Musnad-Ahmad-8288

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

8288.


” قَالَ: لَتُؤَدُّنَّ الْحُقُوقُ إِلَى أَهْلِهَا، حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَمَّاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ يَوْمَ الْقِيَامَةِ “


Musnad-Ahmad-7996

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7996.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»


Musnad-Ahmad-7204

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

7204.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقْتَصَّ لِلشَّاةِ الْجَمَّاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ نَطَحَتْهَا»
وَقَالَ ابْنُ جَعْفَرٍ – يَعْنِي فِي حَدِيثِهِ -: «يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ»


Musnad-Ahmad-16797

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

16797. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண், நாய், கழுதை ஆகியவை (குறுக்கே செல்வது கவனச் சிதறலால்) தொழுகையை முறித்துவிடும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி)


«يَقْطَعُ الصَّلَاةَ الْمَرْأَةُ وَالْكَلْبُ وَالْحِمَارُ»


Musnad-Ahmad-24546

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

24546. “கழுதை, இறைமறுப்பாளர், நாய், பெண் ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் ஒரு முஸ்லிமின் தொழுகையை (கவனச் சிதறலால்) முறிப்பதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களை தீய விலங்குகளுடன் (சமமாக) ஆக்கிவிட்டீர்களே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ராஷித் பின் ஸஃத் (ரஹ்)


«لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ شَيْءٌ إِلَّا الْحِمَارُ، وَالْكَافِرُ، وَالْكَلْبُ، وَالْمَرْأَةُ» ، فَقَالَتْ عَائِشَةُ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ قُرِنَّا بِدَوَابِّ سُوءٍ


Next Page » « Previous Page