Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-22101

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

22101. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக்  கொல்வானாக! அவர் உன்னிடம் உள்ள தற்காலிக விருந்தாளி ஆவார். பிறகு உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வரவிருக்கிறார்” என்று கூறுவார்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا فِي الدُّنْيَا إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الْحُورِ الْعِينِ: لَا تُؤْذِيهِ قَاتَلَكِ اللَّهُ؛ فَإِنَّمَا هُوَ عِنْدَكِ دَخِيلٌ يُوشِكُ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا


Musnad-Ahmad-5864

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

5864. (பிராணிகளை அறுப்பதற்கு முன்பு) கத்தியைத் தீட்டிக் கொள்ளுமாறும்; அதை பிராணிகளிடமிருந்து மறைக்குமாறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

மேலும், “உங்களில் ஒருவர் பிராணிகளை அறுப்பதாக இருந்தால் விரைவாக அறுக்கட்டும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِحَدِّ الشِّفَارِ، وَأَنْ تُوَارَى عَنِ الْبَهَائِمِ، وَإِذَا ذَبَحَ أَحَدُكُمْ فَلْيُجْهِزْ»


Musnad-Ahmad-2234

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் அதிகமாக பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான கவலைகளிலிருந்தும் அல்லாஹ் விடுதலையளிப்பான். மேலும் அவருக்கு ஏற்பட்ட எல்லா வகையான நெருக்கடிகளிலிருந்தும் வெளியேற வழியை ஏற்படுத்துவான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் பொருளாதாரத்தை வழங்குவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنِ أكْثَرَ مِنَ الاسْتِغْفَارِ، جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ هَمٍّ فَرَجًا، وَمِنْ كُلِّ ضِيقٍ مَخْرَجًا، وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ»


Musnad-Ahmad-3783

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3783. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணை முறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸிமாக் அவர்கள், “ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக செய்வது” என்றால் என்ன என்பது பற்றி விளக்கமளிக்கையில், “ஒருவர் ஒரு பொருளை விற்கும் போது தவணைமுறையில் வாங்கினால் இன்ன விலையும்; உடனடி விலைக்கு வாங்கினால் இன்ன விலையும் என்று கூறி விற்பதாகும்” என்று கூறினார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَفْقَتَيْنِ فِي صَفْقَةٍ وَاحِدَةٍ»

قَالَ أَسْوَدُ: قَالَ شَرِيكٌ: قَالَ سِمَاكٌ: ” الرَّجُلُ يَبِيعُ الْبَيْعَ، فَيَقُولُ: هُوَ بِنَسَاءٍ بِكَذَا وَكَذَا، وَهُوَ بِنَقْدٍ بِكَذَا وَكَذَا “


Musnad-Ahmad-7423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு ரமளான் மாதத்தின் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம்.

அதற்கவர்கள், “இல்லை. மாறாக 22 நாட்கள் முடிந்துவிட்டன; 7 நாட்களே மீதம் உள்ளன. இன்றைய இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” எனக் கூறினார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

யஃலா அவர்களின் அறிவிப்பில், (7 நாட்களே மீதம் உள்ளன என்ற வாக்கியத்துடன்) “இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது” என்று நபி (ஸல்) கூறியதாக கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


«كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قَالَ: قُلْنَا: مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، بَلْ مَضَتْ مِنْهُ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ سَبْعٌ، اطْلُبُوهَا اللَّيْلَةَ» قَالَ يَعْلَى، فِي حَدِيثِهِ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»


Musnad-Ahmad-13048

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

13048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியாரின் உள்ளம் சரியாகும் வரை, அவருடைய ஈமான் சரியாகாது. அவருடைய நாவு சீராகும் வரை, அவருடைய உள்ளம் சரியாகாது.

எவருடைய அண்டைவீட்டார் அவரின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதர் சொர்க்கம் செல்ல முடியாது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا يَسْتَقِيمُ إِيمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيمَ قَلْبُهُ، وَلَا يَسْتَقِيمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيمَ لِسَانُهُ، وَلَا يَدْخُلُ رَجُلٌ الْجَنَّةَ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»


Musnad-Ahmad-12561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12561. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் (தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில்) மக்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ஆவார்.

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ஆவார்.

எவர் பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அந்த அடியார் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»


Musnad-Ahmad-6758

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6758.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبْغِضُ الْبَلِيغَ مِنَ الرِّجَالِ، الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ، كَمَا تَتَخَلَّلُ الْبَاقِرَةُ بِلِسَانِهَا»


Musnad-Ahmad-6543

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6543.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبْغِضُ الْبَلِيغَ مِنَ الرِّجَالِ، الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ، كَمَا تَخَلَّلَ الْبَاقِرَةُ بِلِسَانِهَا»


Next Page » « Previous Page