Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-3138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3138. ஒரு பெண் கடல் பயணம் சென்றார். அப்போது அவர் ஒரு மாதம் நோன்பு வைப்பதாக நேர்ச்சை செய்துக்கொண்டார். அந்த நோன்புகளை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவரின் சகோதரி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து விளக்கம் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டவரின் சார்பாக நோன்புவைக்குமாறு அவருக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


رَكِبتَ امْرَأَةٌ الْبَحْرَ، فَنَذَرَتْ أَنْ تَصُومَ شَهْرًا، فَمَاتَتْ قَبْلَ أَنْ تَصُومَ، فَأَتَتْ أُخْتُهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَتْ ذَلِكَ لَهُ: «فَأَمَرَهَا أَنْ تَصُومَ عَنْهَا»


Musnad-Ahmad-3078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3078.

என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


سَأَلَ سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَأَمَرَ بِقَضَائِهِ


Musnad-Ahmad-3048

ஹதீஸின் தரம்: Pending

3048. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِ عَنْهَا»


Musnad-Ahmad-2336

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2336. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், உன் தாயார் மீது கடன் இருந்து அவர் சார்பாக நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்! என்றார். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ فَقَالَ: «لَوْ كَانَ عَلَى أُمِّكَ دَيْنٌ، أَكُنْتَ قَاضِيَهُ عَنْهَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى»


Musnad-Ahmad-2140

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2140. ஒரு பெண் ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவரின் சகோதரர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றி (கூறி என்ன செய்வது என்று) கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ امْرَأَةً نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَمَاتَتْ، فَأَتَى أَخُوهَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ عَلَى أُخْتِكَ دَيْنٌ ، أَكُنْتَ قَاضِيَهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضُوا اللَّهَ عَزَّ وَجَلَّ، فَهُوَ أَحَقُّ بِالْوَفَاءِ»


Musnad-Ahmad-2005

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2005. ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், உன் தாயார் மீது கடன் இருந்து அவர் சார்பாக நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்! என்றார். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ كَانَ عَلَى أُمِّهَا صَوْمُ شَهْرٍ فَمَاتَتْ، أَفَأَصُومُهُ عَنْهَا؟ قَالَ: «لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ، أَكُنْتِ قَاضِيَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ: «فَدَيْنُ اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَقُّ أَنْ يُقْضَى»


Musnad-Ahmad-1970

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1970. ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், உன் தாயார் மீது கடன் இருந்து அவர் சார்பாக நீர் அதை நிறைவேற்றுவீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்! என்றார். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِي عَنْهَا؟ قَالَ: فَقَالَ: «أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَمَا كُنْتِ تَقْضِينَهُ؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَدَيْنُ اللَّهِ عَزَّ وَجَلَّ أَحَقُّ»


Musnad-Ahmad-1893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1893. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ؟ فَقَالَ: «اقْضِهِ عَنْهَا»


Musnad-Ahmad-23846

ஹதீஸின் தரம்: Pending

23846. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய தாயார் அவர் மீது ஒரு நேர்ச்சை கடமையாக இருந்த நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் அடிமையை உரிமைவிட்டால் அது செல்லுபடியாகுமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஆம்) அவர் சார்பாக நீ அடிமையை உரிமை விடு! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ أَفَيُجْزِئُ عَنْهَا أَنْ أُعْتِقَ عَنْهَا؟ قَالَ: «أَعْتِقْ عَنْ أُمِّكَ»


Musnad-Ahmad-23845

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

23845. ஸஅது பின் உபாதா (ரலி) அவர்களின் தாய் இறந்து விட்டார். எனவே அவர், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். ‘எது சிறந்த தர்மம்?’ என்று கேட்டார். ‘தண்ணீர் வழங்குதல்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மதீனாவில் இருக்கும் இந்த தண்ணீர் பிடிக்கும் இடம் ஸஅது பின் உபாதா (ரலி) யின் குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.

அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)

அறிவிப்பாளர் ஷுஃபா (ரஹ்) அவர்கள் கூறினார்:

நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், தண்ணீர் பிடிக்கும் இடத்தைப்பற்றி யார் கூறியது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று பதிலளித்தார்.


أَنَّ أُمَّهُ مَاتَتْ، فَقَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ» قَالَ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ» قَالَ: فَتِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ بِالْمَدِينَةِ ”

قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِقَتَادَةَ: مَنْ يَقُولُ تِلْكَ سِقَايَةُ آلِ سَعْدٍ قَالَ: الْحَسَنُ


Next Page » « Previous Page