Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-17442

ஹதீஸின் தரம்: Pending

17442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகனான அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து ,  சொர்க்கத்தில் நுழைத்து விடுவேன் என்று  அல்லாஹ் கூறுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


يَعْجَبُ رَبُّكَ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ الشَّظِيَّةِ لِلْجَبَلِ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي، فَيَقُولُ اللَّهُ: انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا، يُؤَذِّنُ وَيُقِيمُ، يَخَافُ شَيْئًا؟ قَدْ غَفَرْتُ لَهُ وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ


Musnad-Ahmad-17312

ஹதீஸின் தரம்: Pending

17312. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகனான அல்லாஹ் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும் இகாமத்தும் கூறித் தொழுகின்றான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


«يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي شَظِيَّةٍ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُقِيمُ»


Musnad-Ahmad-8947

ஹதீஸின் தரம்: Pending

8947. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அழகிய முறையில் உளூச் செய்து (பள்ளிக்குச்) சென்று அங்கே மக்கள் தொழுது முடித்து விட்டிருப்பதைக் காண்கிறாரோ அவருக்கு, அல்லாஹ் ஜமாஅத்துடன் தொழுத கூலியை வழங்குகிறான். ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழுதவர்களுக்கும் கூலியை குறைத்து விடாமல் வழங்குகிறான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا، أَعْطَاهُ اللَّهُ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا، أَوْ حَضَرَهَا، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا»


Musnad-Ahmad-22316

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

22316. ஹதீஸ் எண்-22315 இல் வரும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.


«هَذَانِ جَمَاعَةٌ»


Musnad-Ahmad-22315

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22315. (நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு) ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து, தொழ ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் எழுந்து, வந்த மனிதருடன் சேர்ந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வலீத் பின் அபூமாலிக் (ரஹ்)


دَخَلَ رَجُلٌ الْمَسْجِدَ فَصَلَّى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ؟» قَالَ: فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَانِ جَمَاعَةٌ»


Musnad-Ahmad-22189

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22189. (பள்ளிக்குத் தாமதமாக வந்து) தனியாக தொழும் மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். ஒரு மனிதர் எழுந்து, வந்த மனிதருடன் சேர்ந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்விருவரும் ஜமாஅத் தான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا يُصَلِّي مَعَهُ؟» فَقَامَ رَجُلٌ فَصَلَّى مَعَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَانِ جَمَاعَةٌ»


Musnad-Ahmad-11808

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11808. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு லுஹர் தொழுகை நடத்தி முடித்தார்கள். அப்போது நபித்தோழர் ஒருவர் (பள்ளிக்குள்) வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மை (குறித்த நேரத்தில்) தொழ வரவிடாமல் தடுத்தது எது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் காரணத்தை கூறினார்.

பிறகு அவர் தனியாக தொழ நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.  அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ الظُّهْرَ، قَالَ: فَدَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا حَبَسَكَ يَا فُلَانُ عَنِ الصَّلَاةِ؟» قَالَ: فَذَكَرَ شَيْئًا اعْتَلَّ بِهِ، قَالَ: فَقَامَ يُصَلِّي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ» قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ


Musnad-Ahmad-11613

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11613. நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாராவது இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்ய மாட்டீர்களா?” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)


أَنَّ رَجُلًا جَاءَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَقَالَ: «أَلَا رَجُلٌ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ»


Musnad-Ahmad-11408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11408. நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்குத் தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள்.  அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)


أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَقَدْ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَصْحَابِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ؟» . فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَصَلَّى مَعَهُ


Next Page » « Previous Page