Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-23624

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

23624.  மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரான) எங்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது எங்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழுவித்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)


أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ فِي مَسْجِدِنَا فَلَمَّا سَلَّمَ مِنْهَا قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ» لِلسُّبْحَةِ بَعْدَ الْمَغْرِبِ


Musnad-Ahmad-21677

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

21677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களில் (சில தொழுகைகளை) தொழுதுக் கொள்ளுங்கள். அவற்றை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)


«صَلُّوا فِي بُيُوتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Musnad-Ahmad-17030

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

17030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا، صَلُّوا فِيهَا»


Musnad-Ahmad-22255

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22255.


«لَا يَأْتِ أَحَدُكُمُ الصَّلَاةَ وَهُوَ حَاقِنٌ، وَلَا يَخُصَّ نَفْسَهُ بِشَيْءٍ دُونَ أَصْحَابِهِ، وَلَا يُدْخِلْ عَيْنَيْهِ بَيْتًا حَتَّى يَسْتَأْذِنَ»

فَقَالَ شَيْخٌ لَمَّا حَدَّثَهُ يَزِيدُ: أَنَا سَمِعْتُ أَبَا أُمَامَةَ يُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ


Musnad-Ahmad-22241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22241.


«لَا يَأْتِي أَحَدُكُمُ الصَّلَاةَ وَهُوَ حَاقِنٌ، وَلَا يَؤُمَّنَّ أَحَدُكُمْ فَيَخُصَّ نَفْسَهُ بِالدُّعَاءِ دُونَهُمْ، فَمَنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Musnad-Ahmad-22152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22152.


«لَا يَأْتِ أَحَدُكُمُ الصَّلَاةَ وَهُوَ حَاقِنٌ، وَلَا يَدْخُلْ بَيْتًا إِلَّا بِإِذْنٍ، وَلَا يَؤُمَّنَّ إِمَامٌ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ»


Musnad-Ahmad-22415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22415.


«لَا يَحِلُّ لَامْرِئٍ مِنَ الْمُسْلِمِينَ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ، وَلَا يَؤُمَّ قَوْمًا فَيَخْتَصَّ نَفْسَهُ بِدُعَاءٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Musnad-Ahmad-22910

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22910. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (அல்லாஹ்வின்) ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன். அவை:

1 . (தலைவரின் ஆணையைச்) செவியேற்றல்.

2 . (தலைமைக்குக்) கட்டுப்படல்.

3 . சமூகக் கட்டமைப்பு(டன் இணைந்திருத்தல்)

4 . (அவசியம் நேர்ந்தால்) புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்லல்.

5 . அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் ஆகியவையாகும்.

ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேரினாலும் அவர் (மீண்டும் அதனுள்) திரும்பி வரும்வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது தலையிலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார். யார் அறியாமைக் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரக குவியலுக்குச் செல்பவர்களில் உள்ளவர் ஆவார்.

(இவ்வாறு நபி (ஸல் அவர்கள் சொன்னபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பு நோற்றாலும் தொழுதாலுமா?’ என்று ஒரு மனிதர் கேட்டார். “(ஆம்) அவர் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் சரியா! (நரகத்துக்குத் தான் செல்வார்). ஆயினும் (இவர்கள் முஸ்லிம்கள்தாம். இவர்களை) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே இபாதுல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்); முஸ்லிம்கள் (இறைவனுக்கு கீழ்படிபவர்கள்); முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) என்றே அழையுங்கள்” என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸ்

وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ آمُرُكُمْ: بِالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالْجَمَاعَةِ، وَالْهِجْرَةِ، وَالْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ. فَمَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ رَأْسِهِ. وَمَنْ دَعَا دَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ جُثَاءُ جَهَنَّمَ “. قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنْ صَامَ وَصَلَّى؟ قَالَ: «نَعَمْ. وَإِنْ صَامَ وَصَلَّى، وَلَكِنْ تَسَمَّوْا بِاسْمِ اللَّهِ الَّذِي سَمَّاكُمْ عِبَادَ اللَّهِ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ»


Musnad-Ahmad-8222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ أَحَدِكُمْ إِذَا أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ»


Next Page » « Previous Page