Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-7438

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7438.


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ، فَلَا يُدْخِلْ يَدَهُ فِي الْإِنَاءِ، حَتَّى يَغْسِلَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ؟»


Musnad-Ahmad-7282

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7282. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் உளூச் செய்யும் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي إِنَائِهِ، حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Musnad-Ahmad-9869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9869. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (இரவில் உறங்கி) விழித்தெழுந்தால் மூன்று முறை கைகளில் தண்ணீர் ‎ஊற்றிக் கழுவாமல் தனது கையைப் பாத்திரத்தில் விடவேண்டாம். ஏனெனில் இரவில் ‎அவரது கை எங்கெங்கு பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ مَنَامِهِ، فَلَا يَغْمِسْ يَدَهُ فِي إِنَائِهِ حَتَّى يَغْسِلَهَا ثَلَاثًا، فَإِنَّهُ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ مِنْهُ»


Musnad-Ahmad-9996

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9996.


«إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ»


Musnad-Ahmad-20714

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20714. மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும்; உளூ இல்லாத ‎தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


«لَا يَقْبَلُ اللَّهُ صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


Musnad-Ahmad-20708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

20708. (நாங்கள்) ஒரு வீட்டில் (இருக்கும்போது) “உளூ இல்லாத ‎தொழுகையையும்; மோசடி செய்த பணத்திலிருந்து (வழங்கப்படும்) தர்மத்தையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)


أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتٍ يَقُولُ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Musnad-Ahmad-5419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5419. முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நோயுற்றிருந்த இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சென்றார்கள். அப்போது இப்னு ஆமிர் (ரஹ்) அவர்கள், இப்னு உமர் அவர்களே! எனக்காகத் தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மமும் ஏற்கப்படாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள் என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.


دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ يَعُودُهُ فَقَالَ: مَا لَكَ لَا تَدْعُو لِي؟ قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَا يَقْبَلُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ» ، وَقَدْ كُنْتَ عَلَى الْبَصْرَةِ يَعْنِي عَامِلًا


Musnad-Ahmad-5205

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும்; அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையையும் உயர்ந்தோனான அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 


«لَا يَقْبَلُ اللَّهُ تَعَالَى صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


Next Page » « Previous Page