Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-1351

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1351. என்னுடைய தாயார் தன் மீது கடமையாக இருந்த ஒரு நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கு முன் இறந்துவிட்டார். அது பற்றிய மார்க்கத்தீர்ப்பு என்ன? என்று ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதை அவரின் சார்பாக நீர் நிறைவேற்றுவீராக! என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ اسْتَفْتَى رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا نَذْرٌ وَلَمْ تَقْضِهِ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: اقْضِهِ عَنهَا


Muwatta-Malik-2261

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 8

இறந்தவருக்காக உயிருள்ளவர், அடிமையை உரிமை விடுதல்.

2261. அப்துர்ரஹ்மான் பின் அபூஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது தாயார் வஸிய்யத் செய்ய நாடினார். இயலாமையால் அதை செய்யவில்லை. அதற்குள் அவர் இறந்துவிட்டார். அவர்களின் விருப்பம் ஒரு அடிமையை விடுதலை செய்வதாக இருந்தது. எனவே நான் காஸிம் பின் முஹம்மது அவர்களிடம், நான் அடிமையை உரிமைவிட்டால் எனது தாயாருக்கு அதன் நன்மை பயனளிக்குமா என்று கேட்டேன்.

அதற்கு காஸிம் அவர்கள் (இப்படித்தான்) ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார். அவர் சார்பில் நான் அடிமையை உரிமை விட்டால் அவருக்கு நன்மை கிடைக்குமா?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள் என்று பதிலளித்தார்கள்.


أَنَّ أُمَّهُ أَرَادَتْ أَنْ تُوصِيَ، ثُمَّ أَخَّرَتْ ذَلِكَ إِلَى أَنْ تُصْبِحَ، فَهَلَكَتْ، وَقَدْ كَانَتْ هَمَّتْ بِأَنْ تُعْتِقَ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنهَا، فَقَالَ الْقَاسِمُ: إِنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ قَالَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: إِنَّ أُمِّي هَلَكَتْ، فَهَلْ يَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنهَا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: نَعَمْ.


Muwatta-Malik-651

ஹதீஸின் தரம்: More Info

651. ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்’ என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)


أَسْرِعُوا بِجَنَائِزِكُمْ، فَإِنَّمَا هُوَ خَيْرٌ تُقَدِّمُونَهُمْ إِلَيْهِ، أَوْ شَرٌّ تَضَعُونَهُ عَن رِقَابِكُمْ


Muwatta-Malik-3338

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3338. நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ


Muwatta-Malik-2641

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஒருவர் மற்றவருக்கு கைகொடுங்கள். குரோதம் நீங்கிவிடும். நீங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பளிப்பு செய்துக் கொள்ளுங்கள், நீங்கள் அன்பு கொள்வீர்கள், பொறாமை நீங்கி விடும்.

 


«تَصَافَحُوا يَذْهَبِ الْغِلُّ، وَتَهَادَوْا تَحَابُّوا، وَتَذْهَبِ الشَّحْنَاءُ»


Muwatta-Malik-744

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

744. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)


«أَتَانِي جِبْرِيلُ فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي – أَوْ مَنْ مَعِي – أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّلْبِيَةِ أَوْ بِالْإِهْلَالِ» يُرِيدُ أَحَدَهُمَا.


Muwatta-Malik-577

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்: 138

பிரார்த்தனையின் ஒழுங்குகள்.

577. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) கூறியதாவது:

நான் பிரார்த்தனை செய்யும் போது இரு கைகளின், இரு விரல்களால் சைக்கினை செய்ததை கண்ட அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (ஒரு விரலால் மட்டுமே சைக்கினை செய்ய வேண்டும் என்று கூறி) இரு விரல்களால் சைக்கினை செய்வதை தடுத்தார்கள்.

 

 

 


رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ «وَأَنَا أَدْعُو وَأُشِيرُ بِأُصْبُعَيْنِ، أُصْبُعٍ مِنْ كُلِّ يَدٍ فَنَهَانِي»


Muwatta-Malik-517

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

517.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِذَا أَنْشَأَتْ بَحْرِيَّةً ثُمَّ تَشَاءَمَتْ، فَتِلْكَ عَيْنٌ غُدَيْقَةٌ»


muwatta-malik-504

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

504. …(படையில்) ஒரு பிரிவினர் இமாமுடன் இருக்கவும், மற்றொரு பிரிவினர் எதிரிகளின் எதிரேயும் இருக்க இமாம் (தொழ) தயாராகுவார். ஒரு ரக்அத்தின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து இமாம் செய்வார். பின்பு நிலைக்கு வருவார். நிலையிலேயே இருப்பார். இமாம் நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் தாங்களாகவே மற்றொரு ரக்அத்தை பூர்த்தி செய்து விட்டு ஸலாம் கூறி முடிப்பார்கள். பின்பு எதிரிகளை எதிர் நோக்குவார்கள். ஏற்கனவே தொழாமல் இருந்த மற்றவர்கள் முன்னோக்குவார்கள். இமாமுக்கும் பின்னே நின்று தக்பீர் கூறுவார்கள். அவர்களுடன் ருகூஉ ம், ஸஜ்தாவும் செய்து ஸலாம் கொடுத்து விடுவார். உடன் இவர்கள் எழுந்து தாங்களாகவே இரண்டாவது ரக்அத்தை முடித்து ஸலாம் கூறுவார்கள்.

இதுவே பயத் தொழுகை முறையாகும் என ஸாலிஹ் இப்னு கவ்வாத் அவர்களிடம் ஸஹ்ல் இப்னு அபூ ஹஸமா (ரலி) கூறினார்கள்….


أَنَّ: «صَلَاةَ الْخَوْفِ أَنْ يَقُومَ الْإِمَامُ، وَمَعَهُ طَائِفَةٌ مِنْ أَصْحَابِهِ، وَطَائِفَةٌ مُوَاجِهَةٌ الْعَدُوَّ. فَيَرْكَعُ الْإِمَامُ رَكْعَةً، وَيَسْجُدُ بِالَّذِينَ مَعَهُ، ثُمَّ يَقُومُ. فَإِذَا اسْتَوَى قَائِمًا، ثَبَتَ وَأَتَمُّوا لِأَنْفُسِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ. ثُمَّ يُسَلِّمُونَ، وَيَنْصَرِفُونَ. وَالْإِمَامُ قَائِمٌ. فَيَكُونُونَ وِجَاهَ الْعَدُوِّ. ثُمَّ يُقْبِلُ الْآخَرُونَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، فَيُكَبِّرُونَ وَرَاءَ الْإِمَامِ، فَيَرْكَعُ بِهِمُ الرَّكْعَةَ وَيَسْجُدُ. ثُمَّ يُسَلِّمُ، فَيَقُومُونَ فَيَرْكَعُونَ لِأَنْفُسِهِمُ الرَّكْعَةَ الْبَاقِيَةَ. ثُمَّ يُسَلِّمُونَ»


muwatta-malik-124

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

124. உமர்(ரலி) அவர்கள் சுப்ஹை மக்களுக்குத் தொழ வைத்தார்கள். பின்பு ஜுர்ப் என்ற இடத்தில் உள்ள தன் நிலத்திற்கு காலையில் வந்தார்கள். தன் ஆடையில் விந்து கொட்டி உள்ளதைக் கண்டார்கள். உடனே, அவர்கள் ‘கொழுப்பு நமக்கு ஏற்பட்டதால் விந்து வெளியாகி விட்டது” என்று கூறிவிட்டு, குளித்தார்கள். தன் ஆடையில் இருந்த விந்துவைக் கழுவினார்கள். பின்பு சூரியன் உதயமாகிய பின்பு (மீண்டும்)  தொழுதார்கள் என சுலைமான் இப்னு யஸார் கூறுகிறார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ صَلَّى بِالنَّاسِ الصُّبْحَ. ثُمَّ غَدَا إِلَى أَرْضِهِ بِالْجُرُفِ فَوَجَدَ فِي ثَوْبِهِ احْتِلَامًا. فَقَالَ: «إِنَّا لَمَّا أَصَبْنَا الْوَدَكَ لَانَتِ الْعُرُوقُ». فَاغْتَسَلَ، وَغَسَلَ الِاحْتِلَامَ مِنْ ثَوْبِهِ، وَعَادَ لِصَلَاتِهِ


Next Page » « Previous Page