Category: முஅத்தா மாலிக்

Muwatta-Malik-2832

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2832. ஸஃப்வான் பின் ஸுலைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் கஞ்சனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கும் அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் “இல்லை” என்று பதிலளித்தார்கள்.


قِيلَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: أَيَكُونُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ بَخِيلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَيَكُونُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ فَقَالَ: لاَ.


Muwatta-Malik-1015

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1015.


أَنَّهُ أَهْدَى لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ حِمَارًا وَحْشِيًّا، وَهُوَ بِالأَبْوَاءِ أَوْ بِوَدَّانَ
, فَرَدَّهُ عَلَيْهِ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَلَمَّا رَأَى رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ مَا فِي وَجْهِي، قَالَ: إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ أَنَّا حُرُمٌ.


Muwatta-Malik-1270

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரார்த்தனையில் மிகச் சிறந்தது, அரஃபா நாளின் போது செய்யும் பிரார்த்தனையாகும்.

நானும், எனக்கு முன் இருந்த நபிமார்களும் கூறியவற்றில் சிறந்தது, ”லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷாரிகலஹு” என்பதாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லா பின் கரீஸ் (ரஹ்)


أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ.


Muwatta-Malik-2749

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2749. ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே! ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நல்ல மனிதர் காணும், (அல்லது அவருக்கு காட்டப்படும்) நல்ல (உண்மையான) கனவு’ ஆகும். இது நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் யஸார் (ரஹ்)


لَنْ يَبْقَى بَعْدِي مِنَ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ، فَقَالُوا: وَمَا الْمُبَشِّرَاتُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: الرُّؤْيَا الصَّالِحَةُ يَرَاهَا الرَّجُلُ الصَّالِحُ أَوْ تُرَى لَهُ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ.


Muwatta-Malik-2746

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 48

கனவு காண்பது.

2746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நல்ல மனிதர் காணும் நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ.


Muwatta-Malik-2804

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2804. காலித் பின் மஃதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்…

இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் பகலைவிட இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது)…என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيَرْضَى بِهِ، وَيُعِينُ عَلَيْهِ مَا لاَ يُعِينُ عَلَى الْعُنْفِ، فَإِذَا رَكِبْتُمْ هَذِهِ الدَّوَابَّ الْعُجْمَ، فَأَنْزِلُوهَا مَنَازِلَهَا، فَإِنْ كَانَتِ الأَرْضُ جَدْبَةً، فَانْجُوا عَلَيْهَا بِنِقْيِهَا، وَعَلَيْكُمْ بِسَيْرِ اللَّيْلِ، فَإِنَّ الأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، مَا لاَ تُطْوَى بِالنَّهَارِ، وَإِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى الطَّرِيقِ، فَإِنَّهَا طُرُقُ الدَّوَابِّ، وَمَأْوَى الْحَيَّاتِ.


Muwatta-Malik-862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

862. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا دَخَلَ رَمَضَانُ، فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، وَصُفِّدَتِ الشَّيَاطِينُ.


Muwatta-Malik-2632

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2632. தொழுகை, தர்மத்தை விட அதிகம் சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா? என ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் என்று மக்கள் கூறினர்.

அவை ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதுதான். உங்களுக்கிடையே விரோதம், பகை ஏற்படுவதை விட்டு எச்சரிக்கை செய்கிறேன். அது மார்க்கத்தை சிதைத்து விடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஹ்யா பின் ஸயீத்


أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرٍ مِنْ كَثِيرٍ مِنَ الصَّلاَةِ وَالصَّدَقَةِ؟ قَالُوا: بَلَى، قَالَ: إِصْلاَحُ ذَاتِ الْبَيْنِ، وَإِيَّاكُمْ وَالْبِغْضَةَ، فَإِنَّهَا هِيَ الْحَالِقَةُ.


Muwatta-Malik-2643

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2643. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரண்டு தடவையும், வியாழக்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் ஒவ்வொரு முஃமினான அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு அடியாரைத் தவிர.

அப்போது, “இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்” என்று கூறப்படுகிறது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸாலிஹ் (ரஹ்)


تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ كُلَّ جُمُعَةٍ مَرَّتَيْنِ، وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُؤْمِنٍ، إِلاَّ عَبْدًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا، أَوِ ارْكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا.


Next Page » « Previous Page