431. திறந்த வெளியில் தடுப்பேதுமின்றி தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹிஷாம் கூறுகின்றார்கள்.
أَنَّ أَبَاهُ كَانَ: «يُصَلِّي فِي الصَّحْرَاءِ إِلَى غَيْرِ سُتْرَةٍ»
431. திறந்த வெளியில் தடுப்பேதுமின்றி தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹிஷாம் கூறுகின்றார்கள்.
أَنَّ أَبَاهُ كَانَ: «يُصَلِّي فِي الصَّحْرَاءِ إِلَى غَيْرِ سُتْرَةٍ»
பாடம் 97
பயணி தன் தொழுகையின் போது முன்னே தடுப்பை ஏற்படுத்துதல் !
430. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் தொழுதால் தன் வாகனத்தையே தடுப்பாக்கிக் கொள்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَسْتَتِرُ بِرَاحِلَتِهِ إِذَا صَلَّى»
429. தொழுகையாளியின் குறுக்கே நடப்பதினால் தொழுகையை முறித்து விடாது என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.
«لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ مِمَّا يَمُرُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي»
428. தொழுகையாளின் குறுக்கே நடப்பதினால் தொழுகை முறிந்து விடாது என அலீ இப்னு அபீதாலிப்(ரலி) அறிவித்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
«لَا يَقْطَعُ الصَّلَاةَ شَيْءٌ مِمَّا يَمُرُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي»
427. தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது. ஸஹ்து இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் ஸஃப்புகளுக்கு மத்தியில் நடந்து செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு, இமாமும் (தக்பீர் கூறி) ஹரமாக்கிய பின், ஒருவர் பள்ளிக்கு நுழைய ஸப்புகளுக்கு மத்தியில் நுழைவதைத் தவிர வேறு ஒன்றை பெற்றுக் கொள்ளவில்லையானால், ஸஃப்புகளுக்குள் நுழையக் கூடும் என்றே கருதுகின்றேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَ «يَمُرُّ بَيْنَ يَدَيْ بَعْضِ الصُّفُوفِ، وَالصَّلَاةُ قَائِمَةٌ»
قَالَ مَالِكٌ: «وَأَنَا أَرَى ذَلِكَ وَاسِعًا، إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، وَبَعْدَ أَنْ يُحْرِمَ الْإِمَامُ، وَلَمْ يَجِدِ الْمَرْءُ مَدْخَلًا إِلَى الْمَسْجِدِ إِلَّا بَيْنَ الصُّفُوفِ»
பாடம் 96
தொழுபவனின் முன்னே நடந்து செல்ல அனுமதி
426. நான் பருவ வயதை நெருங்கிய காலத்தில், மினாவில் மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும் நிலையில் கழுதையின் மீது ஏறி நான் வந்து கொண்டிருந்தேன். ஸப்புகளுக்கு மத்தியில் குறுக்கே சென்று, பின்பு வாகனத்தில் இறங்கி கழுதையை மேய அனுப்பினேன். ஸஃபில் நுழைந்தேன். யாரும் எனக்கு ஆட்சேபணை தொரிவிக்கவில்லை என அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இதே கருத்து புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ யில் இடம் பெற்றுள்ளது).
أَقْبَلْتُ رَاكِبًا عَلَى أَتَانٍ وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلَامَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي لِلنَّاسِ، بِمِنًى «فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ»، فَنَزَلْتُ، فَأَرْسَلْتُ الْأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ
425. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் (தொழும்) ஒருவரின் குறுக்கே செல்லவும் மாட்டார்கள். தன் முன்னே யாரையும் நடக்கவும் விடமாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَمُرُّ بَيْنَ يَدَيْ أَحَدٍ، وَلَا يَدَعُ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ»
424. பெண்கள் தொழுது கொண்டிருக்கும் போது, அவர்கள் முன்னே நடந்து செல்வதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) வெறுத்தார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَكْرَهُ أَنْ يَمُرَّ بَيْنَ أَيْدِي النِّسَاءِ، وَهُنَّ يُصَلِّينَ»
423. தொழுகையாளியின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை அறிந்தால் அவன் குறுக்கெ செல்வதை விட பூமிக்குள் உயிருடன் புதையுண்டு போவது அவனுக்கு சிறப்பாகி விடும் என கஃபுல் அஹ்பார் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.
«لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي، مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يُخْسَفَ بِهِ، خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»
422. தொழுபவனின் குறுக்கே நடப்பவன் விஷயமாக நபி(ஸல்) அவர்களின் இருந்து அறிந்து என்ன? என அபூஜுஹைம்(ரலி) அவர்களிடம் கேட்க வரும்படி என்னை ஜைத் இப்னு காலித் அனுப்பி வைத்தார்கள்.
”தொழுபவனின் குறுக்கே நடந்து செல்பவன், அவன் மீது உள்ளதை (தண்டனையை) அறிந்தால், அவன் முன் நடந்து செல்வதை விட நாற்பது நாள் கூட (தொழுகையை முடிக்கட்டும் என எதிர்பார்த்து) நிற்பது அவனுக்கு சிறப்பாகி விடும்”” என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் கூறினார்கள்.
(என்னிடம்) கூறியவர் நாற்பது நாள் அல்லது நாற்பது மாதம் அல்லது நாற்பது வருடம் என்பதில் எதைக் கூறினார் என்பதை நான் அறிய மாட்டேன் என இதன் அறிவிப்பாளாரில் ஒருவரான அபூ நஸ்ர் கூறுகின்றார்கள்.
أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ، مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَارِّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي؟ فَقَالَ أَبُو جُهَيْمٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي، مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ، خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ»، قَالَ أَبُو النَّضْرِ: لَا أَدْرِي أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً
சமீப விமர்சனங்கள்