ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
7364. முஹம்மத் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற போது (ஜகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதத்தையும், உமர் (ரலி) அவர்களுடைய கடிதத்தையும் கேட்டு மதீனாவுக்கு ஒருவரை அனுப்பிவைத்தார்கள். அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஜகாத்) தர்மங்கள் தொடர்பாக அம்ரு பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு (எழுதப்பட்ட) நபியவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரிடத்திலே (ஜகாத்) தர்மங்கள் தொடர்பான உமர் (ரலி) அவர்களுடைய கடிதம் பெற்றுக் கொள்ளப்பட்டது. (உமருடைய கடிதம்) நபி (ஸல்) அவர்களுடைய கடிதத்தைப் போன்றே இருந்தது. அவை இரண்டும் அவருக்காகப் பிரிதியெடுக்கப்பட்டது.
ஹபீப் இப்னு அபீ ஹபீப் கூறுகிறார் : அம்ரு இப்னு ஹர்ம் அவர்கள் முஹம்மத் இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களிடம் அந்த இரண்டு கடிதங்களிலும் உள்ள விபரங்களை தனக்கு பிரதியெடுத்துத் தருமாறு வேண்டினார்.
ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி, பேரீத்தம் பழம், தானியம், உலர்ந்த திராட்சை முதலியவற்றுக்கான ஜகாத் தொடர்பான விபரங்கள் அக்கடித்தில் இருந்தது. (அதை) அவருக்கு அவர் பிரதியெடுத்துக் கொடுத்தார்………
لَمَّا اسْتُخْلِفَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَرْسَلَ إِلَى الْمَدِينَةِ , يَلْتَمِسُ كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ , وَكِتَابَ عُمَرَ. فَوَجَدَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ حَزْمٍ , كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَمْرِو بْنِ حَزْمٍ فِي الصَّدَقَاتِ. وَوَجَدَ عِنْدَ آلِ عُمَرَ كِتَابَ عُمَرَ فِي الصَّدَقَاتِ , مِثْلَ كِتَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُسِخَا. فَحَدَّثَنِي عَمْرٌو , أَنَّهُ طَلَبَ آلُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنْ يَنْسَخَهُ مَا فِي ذَيْنِكَ الْكِتَابَيْنِ , فَيَنْسَخَ لَهُ مَا فِي هَذَا الْكِتَابِ فَكَانَ مِمَّا فِي ذَلِكَ الْكِتَابِ «أَنَّ الْإِبِلَ إِذَا زَادَتْ عَلَى تِسْعِينَ وَاحِدَةً , فَفِيهَا حِقَّتَانِ طَرُوقَتَا الْفَحْلِ إِلَى أَنْ يَبْلُغَ عِشْرِينَ وَمِائَةً. فَإِذَا بَلَغَتِ الْإِبِلُ عِشْرِينَ وَمِائَةً , فَلَيْسَ فِيمَا زَادَ مِنْهَا دُونَ الْعَشْرِ شَيْءٌ. فَإِذَا بَلَغَتْ ثَلَاثِينَ وَمِائَةً , فَفِيهَا بِنْتَا لَبُونٍ وَحِقَّةٌ , إِلَى أَنْ تَبْلُغَ أَرْبَعِينَ وَمِائَةً. فَإِذَا كَانَتْ أَرْبَعِينَ وَمِائَةً , فَفِيهَا حِقَّتَانِ , وَابْنَةُ لَبُونٍ , إِلَى أَنْ تَبْلُغَ خَمْسِينَ وَمِائَةً. فَإِذَا كَانَتْ خَمْسِينَ وَمِائَةً , فَفِيهَا ثَلَاثُ حِقَاقٍ , ثُمَّ أَجْرَى الْفَرِيضَةَ كَذَلِكَ , حَتَّى يَبْلُغَ ثَلَاثَمِائَةٍ. فَإِذَا بَلَغَتْ ثَلَثَمِائَةٍ , فَفِيهَا مِنْ كُلِّ خَمْسِينَ حِقَّةٌ , وَمِنْ كُلِّ أَرْبَعِينَ , بِنْتُ لَبُونٍ»
சமீப விமர்சனங்கள்