Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-8545

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


” مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا، وَلَا يُفَرِّقَ بَيْنَهُمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا


Shuabul-Iman-8559

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8559. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நான் நபித்தோழர் ஒருவரிடம்,  ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவரை முத்தமிடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்றார்.  அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டேன். அதற்கும் அவர் கூடாது என்றார். முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி அளித்தார்.

 

பைஹகீ (நூலாசிரியர்) கூறுகிறார் :

இது ஹன்ளலா அஸ்ஸதூஸி தனித்து அறிவிக்கும் செய்தி. இவர் கடைசி காலத்தில் மூளை குழம்பிவிட்டார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

 

 


سَأَلْتُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّجُلِ يَلْقَى الرَّجُلَ أَيُقَبِّلُهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: أَفَيَنْحَنِي لَهُ؟، قَالَ: ” لَا “. وَسُئِلَ عَنِ الْمُصَافَحَةِ فَرَخَّصَ فِيهَا.


Shuabul-Iman-8558

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8558. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்று அவர் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள்.


قِيلَ: يَا رَسُولَ اللهِ يَنْحَنِي أَحَدُنَا لِأَخِيهِ إِذَا لَقِيَهُ؟، قَالَ: ” لَا “، قَالَ: فَيَلْتَزِمُهُ؟ قَالَ: ” لَا


Shuabul-Iman-3517

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா நாளில் கண்ணில் சுருமா தீட்டியவருக்குக் கண்வலி வராது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


مَنِ اكْتَحَلَ بالْإِثْمَدِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَرْمَدْ أَبَدًا


Shuabul-Iman-3516

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3516. இப்ராஹீம் பின் முஹம்மது பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அவர்கள் அந்த வருடம் முழுவதும் விசாலமான செல்வசெழிப்பில் இருப்பார்கள் என்று (எங்கள் காலத்தில்) கூறப்பட்டது.


مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ لَمْ يَزَالُوا فِي سَعَةٍ مِنْ رِزْقِهِمْ سَائِرَ سَنَتِهِمْ


Shuabul-Iman-3515

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3515. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ وَأَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ

 


Shuabul-Iman-3514

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3514. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ


Shuabul-Iman-3513

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3513. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ فِي سَائِرِ سَنَتِهِ


Shuabul-Iman-3512

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3512. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் நீண்ட வருடம் அவரின் குடும்பத்திற்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَى أَهْلِهِ طُولَ سَنَتِهِ


Shuabul-Iman-1090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1090. உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு “அல்லாஹ் அதிகமாக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி)


مَا مِنْ مُسْلِمٍ يَدْعُو بِدَعْوَةٍ لَيْسَ فِيهَا إِثْمٌ وَلَا قَطِيعَةُ رَحِمٍ إِلَّا أَعْطَاهُ اللهُ إِحْدَى ثَلَاثٍ، إِمَّا يُعَجِّلُ لَهُ دَعْوَتَهُ، وَإِمَّا أَنْ يَدَّخِرَهَا لَهُ فِي الْآخِرَةِ، وَإِمَّا أَنْ يَدْفَعَ عَنْهُ مِنَ السَّوْءِ مِثْلَهَا


Next Page » « Previous Page