3094. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! (அல்குர்ஆன்: 9:34) எனும் இறைவசனம் அருளப்பட்டபோது நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்.
அப்போது நபித்தோழர்களில் சிலர், “தங்கம் மற்றும் வெள்ளி விஷயத்தில்தான் (இந்தக் கண்டனம்) இறங்கியுள்ளது. எந்தப் பொருள் சிறந்ததென்று நாங்கள் அறிந்தால் அதைச் சேமித்துக் கொள்வோமே!” என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு, நன்றி செலுத்தும் உள்ளம், தனது ஈமானுக்கு உதவி செய்யும் இறைநம்பிக்கை கொண்ட மனைவி ஆகியவையே சிறந்த செல்வங்களாகும்” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
நான் முஹம்மத் பின் இஸ்மாயீல் (புகாரீ இமாம்) அவர்களிடம், ஸாலிம் பின் அபுல்ஜஃத் அவர்கள் ஸவ்பான் (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளாரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்.
பிறகு நான் அவர்களிடம், “அவர் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த நபித்தோழர்களிடம் கேட்டிருக்கிறார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அனஸ் பின் மாலிக்
لَمَّا نَزَلَتْ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ} [التوبة: 34] قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَقَالَ بَعْضُ أَصْحَابِهِ: أُنْزِلَتْ فِي الذَّهَبِ وَالفِضَّةِ، لَوْ عَلِمْنَا أَيُّ المَالِ خَيْرٌ فَنَتَّخِذَهُ؟ فَقَالَ: «أَفْضَلُهُ لِسَانٌ ذَاكِرٌ، وَقَلْبٌ شَاكِرٌ، وَزَوْجَةٌ مُؤْمِنَةٌ تُعِينُهُ عَلَى إِيمَانِهِ».
சமீப விமர்சனங்கள்