654.
نَحْوَهُ.
653.
…
ஹுப்ஷீ பின் ஜுனாதா அஸ்ஸலூலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, விடைபெறும் ஹஜ்ஜின்போது (ஹஜ்ஜுல் வதா) அரஃபாவில் நின்றுகொண்டிருக்கும்போது கேட்கிறேன். அப்போது ஒரு பழங்குடி மனிதர் அவர்களிடம் வந்து, அவர்களுடைய மேல்துண்டின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு, அதைத் தமக்குக் கொடுக்கும்படி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அதை அவருக்குக் கொடுத்தார்கள். அவர் சென்றபிறகு, அந்த நேரத்தில்தான் (பிறரிடம்) கேட்பது தடைசெய்யப்பட்டது.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யாசகம் கேட்பது பணக்காரனுக்கோ அல்லது உடல் நலம் மிக்கவனுக்கோ அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், கடுமையான வறுமையில் உள்ளவனுக்கோ அல்லது பெரும் கடனில் சிக்கியவனுக்கோ மட்டுமே அனுமதிக்கப்படும்.
யார் மக்களிடம் கேட்டுத் தமது செல்வத்தை அதிகரிக்க முயல்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் அவரது முகத்தில் கீறல்கள் ஏற்படும். மேலும், அவர் நரகத்திலிருந்து கொதிக்கும் கற்களை உண்பார். யார் விரும்புகிறாரோ, அவர் (இந்த எச்சரிக்கையை) குறைவாக எடுத்துக்கொள்ளட்டும். யார் விரும்புகிறாரோ, அவர் அதிகமாக எடுத்துக்கொள்ளட்டும்.
…
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي حَجَّةِ الوَدَاعِ وَهُوَ وَاقِفٌ بِعَرَفَةَ، أَتَاهُ أَعْرَابِيٌّ، فَأَخَذَ بِطَرَفِ رِدَائِهِ، فَسَأَلَهُ إِيَّاهُ، فَأَعْطَاهُ وَذَهَبَ، فَعِنْدَ ذَلِكَ حَرُمَتِ المَسْأَلَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَسْأَلَةَ لَا تَحِلُّ لِغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ، إِلَّا لِذِي فَقْرٍ مُدْقِعٍ، أَوْ غُرْمٍ مُفْظِعٍ، وَمَنْ سَأَلَ النَّاسَ لِيُثْرِيَ بِهِ مَالَهُ، كَانَ خُمُوشًا فِي وَجْهِهِ يَوْمَ القِيَامَةِ، وَرَضْفًا يَأْكُلُهُ مِنْ جَهَنَّمَ، وَمَنْ شَاءَ فَلْيُقِلَّ، وَمَنْ شَاءَ فَلْيُكْثِرْ»
2486. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவர் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«الطَّاعِمُ الشَّاكِرُ بِمَنْزِلَةِ الصَّائِمِ الصَّابِرِ»
398 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவிலும் பகலிலும் பத்து ரக்ஆத்கள் (சுன்னத்) தொழுததை நான் நினைவில் வைத்துள்ளேன். அவை: ‘லுஹ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு, மகரிப் தொழுகைக்கு பின் இரண்டு ரக்அத்கள். ‘இஷா தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள் ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இரண்டு ரக்ஆத்கள் (சுன்னத்) தொழுவார்கள் என ஹஃப்ஸா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ . قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ
பாடம் : 91
குளித்த பின் ஒருவர் தம் மனைவியை அணைத்து குளிர் காய்வது தொடர்பாக வந்துள்ளவை.
123 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சில சமயங்களில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விட்டு வந்து, என்னை அணைத்துச் சூடேற்றிக்கொள்வார்கள். நானும் அவர்களை என்னோடு அணைத்து கொள்வேன். அப்போது நான் குளித்திருக்க மாட்டேன்.
رُبَّمَا اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ ثُمَّ جَاءَ فَاسْتَدْفَأَ بِي فَضَمَمْتُهُ إِلَىَّ وَلَمْ أَغْتَسِلْ ”
பாடம் : 116
அப்துல் அஸீஸ் இப்னு ருஃபை (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து வைத்துள்ள ஏதேனும் ஒரு செய்தியை எனக்கு கூறுங்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாளில் (யவ்முத் தர்வியா) எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?” என கேட்டேன்.
அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ” மினாவில் (தொழுதார்கள்) என பதிலளித்தார்கள். நான், “(கிரியைகளை முடித்து) மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13 ஆவது) நாளில் (யவ்முந் நஃப்ர்) எங்கு அவர்கள் அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டேன். ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் என்று பதிலளித்து விட்டு, பிறகு உன்னுடைய (ஹஜ் குழுவின்) தலைவர்கள் செய்வதைப் போன்று செய்துகொள்” என்றும் கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்::
இது ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இது சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இஸ்ஹாக் பின் யூசுஃப் அல்அஸ்ரக் (ரஹ்)வழியாக மட்டுமே ஃகரீபாக அறிவிக்கப்படுகிறது.
أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى . قَالَ قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ . ثُمَّ قَالَ افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ
80.
«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مَعَهُ، فَدَخَلَ عَلَى امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ، فَذَبَحَتْ لَهُ شَاةً، فَأَكَلَ، وَأَتَتْهُ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ فَأَكَلَ مِنْهُ، ثُمَّ تَوَضَّأَ لِلظُّهْرِ وَصَلَّى، ثُمَّ انْصَرَفَ، فَأَتَتْهُ بِعُلَالَةٍ مِنْ عُلَالَةِ الشَّاةِ، فَأَكَلَ، ثُمَّ صَلَّى العَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ»
79.
«الوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ، وَلَوْ مِنْ ثَوْرِ أَقِطٍ»، قَالَ: فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: يَا أَبَا هُرَيْرَةَ، أَنَتَوَضَّأُ مِنَ الدُّهْنِ؟ أَنَتَوَضَّأُ مِنَ الحَمِيمِ؟ قَالَ: فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «يَا ابْنَ أَخِي، إِذَا سَمِعْتَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا تَضْرِبْ لَهُ مَثَلًا»
78.
«كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُونَ ثُمَّ يَقُومُونَ فَيُصَلُّونَ، وَلَا يَتَوَضَّئُونَ»
சமீப விமர்சனங்கள்