Category: திர்மிதீ

Tirmidhi-2988

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2988. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “திண்ணமாக ஆதத்தின் மக (மனித)னுக்கு ஷைத்தானின் தூண்டலும் (மலக்)வானவரின் தொடுதலும் உண்டு. தெரிந்துகொள்ளுங்கள்! “ஷைத்தானின் தீண்டல் தீங்கையும் உண்மையைப் பொய்யாக்கும் (மன) நிலையையும் தரும். வானவர்கள் தீண்டல் சிறந்ததையும், உண்மையை உண்மையாக்கும் (மன) நிலையையும் தரும்.

எவர் வானவரின் தீண்டலை (உணர்வாரோ) பெற்றுக்கொள்வாரோ அவர் அது அல்லாஹ்வின் சார்பாக உண்டானது என்று புரிந்து அல்லாஹ்வைப் புகழட்டும்.
ஷைத்தானின் தீண்டலை உணருபவர் “எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும்” என்று கூறிவிட்டு பின்பு “(தர்மம் செய்வதால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சமூட்டி (கஞ்சத்தனம் என்னும்) அருவருப்பானதைக்கொண்டு ஏவுவான். ஆனால், அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும் செல்வத்தையும் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வனும் நன்கறிவோனுமாவான்” (அல்குர்ஆன்: 2:268) எனும் அருள்மறை வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

«إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالحَقِّ، وَأَمَّا لَمَّةُ المَلَكِ فَإِيعَادٌ بِالخَيْرِ وَتَصْدِيقٌ بِالحَقِّ، فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ الأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»، ثُمَّ قَرَأَ {الشَّيْطَانُ يَعِدُكُمُ الفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالفَحْشَاءِ} [البقرة: 268] الآيَةَ