Category: திர்மிதீ

Tirmidhi-982

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார் என்பது குறித்து வந்துள்ளவை.

982. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார்.

அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

இதில் இடம்பெறும் கதாதா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையும் செவியேற்றதாக நாம் அறியவில்லை என சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.


«المُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الجَبِينِ»


Tirmidhi-1887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பானத்தில் ஊதுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

1887. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பானத்தில் ஊதுவதற்கு நபி (ஸல்) தடைவிதித்தார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நான் (பானத்தில்) தூசிப் போன்றதைக் கண்டால் என்ன செய்வது? என்றுக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அதை (சிறிது சாய்த்துக்) கொட்டிவிடு! (தூசி போன்றவை நீங்கி விடும்) என்று கூறினார்கள்.

அவர், என்னால் ஒரே மூச்சில் பானத்தைக் குடிக்க முடியாது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் வாயிலிருந்து கோப்பையை அகற்றி(விட்டு மூச்சுவிட்டுக்) கொள்!” என்றுக் கூறினார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ النَّفْخِ فِي الشُّرْبِ» فَقَالَ رَجُلٌ: القَذَاةُ أَرَاهَا فِي الإِنَاءِ؟ قَالَ: «أَهْرِقْهَا»، قَالَ: فَإِنِّي لَا أَرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ؟ قَالَ: «فَأَبِنِ القَدَحَ إِذَنْ عَنْ فِيكَ»


Tirmidhi-1888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1888. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திரங்களில் மூச்சுவிடுவதையும், அதில் ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ»


Tirmidhi-2647

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2647. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மார்க்க) கல்வியைத் தேடிச் செல்பவர், திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதைச் சிலர் நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.


«مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»


Tirmidhi-2402

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

2402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் சோதனைகளுக்குள்ளானவர்களுக்கு மறுமையில் நன்மை வழங்கப்படும் போது, உலகில் ஆரோக்கியமாக (நல்ல நிலையில்) வாழ்ந்தவர்கள், “நாங்கள் உலகில் வாழும்போது எங்களுடைய தோல்கள் கத்திரிக்கோலால் வெட்டப்பட்டிருக்க வேண்டுமே!” என்று ஆசைப்படுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த (அரிதான) செய்தியாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இது வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.

வேறு சிலர் அஃமஷ் அவர்களிடமிருந்து, அஃமஷ் —> தல்ஹா பின் முஸர்ரிஃப் —> மஸ்ரூக் என்ற அறிவிப்பாளர்தொடரில் மஸ்ரூக் அவர்களின் சொல்லாக இதில் சிலதை அறிவித்துள்ளனர்.


«يَوَدُّ أَهْلُ العَافِيَةِ يَوْمَ القِيَامَةِ حِينَ يُعْطَى أَهْلُ البَلَاءِ الثَّوَابَ لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بِالمَقَارِيضِ»


Tirmidhi-1701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடுவது வெறுப்புக்குரியது என்பது பற்றி வந்துள்ளவை.

1701. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திண்ணமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வால்) கட்டளையிடப்படும் ஓர் அடியாராக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மற்ற) மக்களுக்கு சொல்லாமல் எங்களுக்காக மட்டும் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால் மூன்று விஷயங்களைத் தவிர. (அதை எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்கள்.) 

அவைகள்:

1 . நாங்கள் உளூ எனும் அங்கத்தூய்மையை முழுமையாகச் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
2 . தர்மப் பொருளை உண்ணக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
3 . (இனப்பெருக்கத்திற்காக) கழுதையைக் குதிரையுடன் இணையவிடக் கூடாது என்று தடுத்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி, அலீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், அபூஜஹ்ளம் —> உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் —> இப்னு அப்பாஸ்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا مَأْمُورًا، مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ حِمَارًا عَلَى فَرَسٍ»


Tirmidhi-3386

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பிரார்த்தனை செய்யும் போது கைகளை உயர்த்துவது பற்றி வந்துள்ளவை.

3386. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரார்த்தனை செய்யும் போது தமது இரு கைகளையும் உயர்த்தினால் (முடிவில்) அவற்றால் தமது முகத்தை தடவாமல் கீழே விடமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்களில் மற்றொருவரான) முஹம்மத் பின் முஸன்னா அவர்கள், இதே கருத்தை வேறு வார்த்தையில் அறிவித்தார்.

மேற்கண்ட செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை ஹம்மாத் பின் ஈஸா என்பவர் மட்டுமே அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். இவர் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார். இவரிடமிருந்து சிலர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். மேலும் இவர் இந்தச் செய்தியை தனித்து அறிவித்துள்ளார்.

(இதில் வரும் அறிவிப்பாளர்) ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் அல்ஜுமஹீ என்பவர் பலமானவர் ஆவார். (ஏனெனில்) இவரை யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ، لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ»

قَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى فِي حَدِيثِهِ: لَمْ يَرُدَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ


Tirmidhi-2853

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

இலக்கியமாக பேசுவது பற்றி வந்துள்ளவை.

2853. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மாடு தனது நாவால் (அசைத்து அசைத்து) தின்பது போன்று, தங்கள் நாவுகளை அசைத்து அசைத்து வார்த்தை ஜாலத்துடன் பேசும் ஆண்களை அல்லாஹ் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.


«إِنَّ اللَّهَ يَبْغَضُ البَلِيغَ مِنَ الرِّجَالِ الَّذِي يَتَخَلَّلُ بِلِسَانِهِ كَمَا تَتَخَلَّلُ البَقَرَةُ»


Tirmidhi-3577

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3577. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், “அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யல் கய்யூம், வ அதூபு இலைஹ்”

(பொருள்: நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடி அவனிடமே திரும்புகின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்)

என்று மூன்று தடவை கூறினால் அவருடைய பாவங்கள் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடியிருந்தாலும் (அதையும் மன்னிக்கப்படும்).

அறிவிப்பவர்: ஸைத் பின் பவ்லா (ரலி)…


«مَنْ قَالَ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الحَيَّ القَيُّومَ وَأَتُوبُ إِلَيْهِ، غُفِرَ لَهُ وَإِنْ كَانَ فَرَّ مِنْ الزَّحْفِ»


Next Page » « Previous Page