3603. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியார் என்னைப் பற்றி நினைக்கும் விதத்தில் நான் நடந்துகொள்வேன். அவர் என்னை நினைவுகூரும் போது நான் அவருடன் இருப்பேன். அவர் என்னைத் தன் மனதில் நினைவு கூர்ந்தால் நானும் அவரை என் மனதில் நினைவுகூருவேன்.
அவர் என்னை ஓர் அவையில் நினைவு கூர்ந்தால் அவர்களை விட சிறந்த அவையினரிடம் அவரை நான் நினைவுகூருவேன். அவர் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழம் அளவுக்கு அவரை நெருங்குவேன். அவர் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு அவரை நான் நெருங்குவேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவரை நோக்கி விரைந்து செல்வேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ حِينَ يَذْكُرُنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَأٍ ذَكَرْتُهُ فِي مَلَأٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ شِبْرًا اقْتَرَبْتُ مِنْهُ ذِرَاعًا، وَإِنْ اقْتَرَبَ إِلَيَّ ذِرَاعًا اقْتَرَبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً “
சமீப விமர்சனங்கள்