கைஸ் அல்மதனீ கூறுகிறார்:
ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலி) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:
நீங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் இன்னாரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.
உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா) உங்களை முந்திவிட்டார்’ என்றார்கள்.
(ஹாகிம்: 6158)حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْأَصْبَهَانِيُّ، ثَنَا الْحُسَيْنُ بْنُ حَفْصٍ، ثَنَا حَمَّادُ بْنُ شُعَيْبٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ، أَنَّ مُحَمَّدَ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ، حَدَّثَهُ،
أَنَّ رَجُلًا جَاءَ زَيْدَ بْنَ ثَابِتٍ فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، فَقَالَ لَهُ زَيْدٌ: عَلَيْكَ بِأَبِي هُرَيْرَةَ، فَإِنَّهُ بَيْنَا أَنَا وَأَبُو هُرَيْرَةَ وَفُلَانٌ فِي الْمَسْجِدِ ذَاتَ يَوْمٍ نَدْعُو اللَّهَ تَعَالَى، وَنَذْكُرُ رَبَّنَا خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ إِلَيْنَا، قَالَ: فَجَلَسَ وَسَكَتْنَا، فَقَالَ: «عُودُوا لِلَّذِي كُنْتُمْ فِيهِ» . قَالَ زَيْدٌ: فَدَعَوْتُ أَنَا وَصَاحِبِي قَبْلَ أَبِي هُرَيْرَةَ، وَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَمِّنُ عَلَى دُعَائِنَا، قَالَ: ثُمَّ دَعَا أَبُو هُرَيْرَةَ فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِثْلَ الَّذِي سَأَلَكَ صَاحِبَايَ هَذَانِ، وَأَسْأَلُكَ عِلْمًا لَا يُنْسَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمِينَ» ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، وَنَحْنُ نَسْأَلُ اللَّهَ عِلْمًا لَا يَنْسَى فَقَالَ: «سَبَقَكُمَا بِهَا الدَّوْسِيُّ»
صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-6158.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-6170.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்
2 . முஹம்மத் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் புத்தா-அபூஅப்துல்லாஹ்-முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல்அஸ்பஹானீ
3 . ஹுஸைன் பின் ஹஃப்ஸ்
4 . ஹம்மாத் பின் ஷுஐப்
5 . இஸ்மாயீல் பின் உமைய்யா
6 . முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா
7 . ஸைத் பின் ஸாபித் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13932-ஹம்மாத் பின் ஷுஐப் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற பலரும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ்-பலமானவருக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். - அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள், இவரின் ஹதீஸ்களை அறிஞர்கள் கைவிட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/142, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/15, தஃஜீலுல் மன்ஃபஆ-1/464, லிஸானுல் மீஸான்-3/270)
- இந்தச் செய்தியை இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஃபள்ல் பின் அலாஃ அவர்கள், இஸ்மாயீல் பின் உமைய்யா —> முஹம்மத் பின் கைஸ் அல்காஸ் —> கைஸ் அல்மதனீ —> ஸைத் பின் ஸாபித் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இவ்வாறே நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தப்ரானீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். - ஆனால் ஹம்மாத் பின் ஷுஐப் என்பவர், இஸ்மாயீல் பின் உமைய்யா —> முஹம்மத் பின் கைஸ் பின் மக்ரமா —> ஸைத் பின் ஸாபித் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். எனவே இது முன்கர் என்பதால் மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: குப்ரா நஸாயீ-5839.
இந்த செய்தியில் இஸ்மாயீல் இப்னு உமைய்யா என்பவர் இடம் பெறுகிறார் இவர் கைவிடபட்டவர் அதனால் இது பலவீனமான செய்தியாகும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. சில ஹதீஸ்களின் தரம் பற்றி பிறகு விரிவாக பதிவு செய்ய வேண்டும் என்பதால் அதைப்பற்றிய விவரம் பதிவுசெய்யவில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் பார்த்தவரை இந்தச் செய்தியில் இடம்பெறும் இஸ்மாயீல் இப்னு உமைய்யா என்பவர் பற்றி விமர்சனம் இல்லை. நீங்கள் எதிலிருந்து இந்த தகவலை கூறினீர்கள் என்று குறிப்பிடவும். ஹம்மாத் பின் ஷுஐப் என்பவரால் தான் இது பலவீனமானது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இதன் தரம் صَحِيحُ الْإِسْنَادِ சஹீஹ் என்று போட்டுள்ளதே? சஹீஹா?
வ அலைக்கும் ஸலாம்.
ஹாகிம் இமாம் இவ்வாறு கூறியிருக்கும் போது மற்ற அறிஞர்களின் கருத்து அதற்கு மாற்றமாக ஆதாரத்துடன் இருந்தால் அதை தான் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். அறிவிப்பாளரின் தரம், விமர்சனம் போன்ற தகவலை வைத்துதான் அதை சரியா அல்லது பலவீனமானதா என்று முடிவு செய்ய வேண்டும்.