தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4259

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். பின்பு அவர், “அல்லாஹ்வின் தூதரே! இறைநம்பிக்கை கொண்டோரில் மிகச் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நற்குணம் உடையவரே மிகச் சிறந்தவர்” என்று பதில் கூறினார்கள்.

பிறகு அவர், “இறைநம்பிக்கை கொண்டோரில் மிகவும் புத்திசாலி யார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் மரணத்தை அதிகம் நினைத்து, அதற்கு பின்னுள்ள (மறுமை) வாழ்விற்காக அழகிய முறையில் முன்னேற்பாடு செய்துக் கொண்டவரே அவர்களில் மிகவும் புத்திசாலி ஆவார்” என்று பதில் கூறினார்கள்.

(இப்னுமாஜா: 4259)

حَدَّثَنَا الزُّبَيْرُ بْنُ بَكَّارٍ قَالَ: حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ قَالَ: حَدَّثَنَا نَافِعُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ فَرْوَةَ بْنِ قَيْسٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ:

كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْمُؤْمِنِينَ أَفْضَلُ؟ قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» ، قَالَ: فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْيَسُ؟ قَالَ: «أَكْثَرُهُمْ لِلْمَوْتِ ذِكْرًا، وَأَحْسَنُهُمْ لِمَا بَعْدَهُ اسْتِعْدَادًا، أُولَئِكَ الْأَكْيَاسُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4259.
Ibn-Majah-Alamiah-4249.
Ibn-Majah-JawamiulKalim-4257.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . ஸுபைர் பின் பக்கார்

3 . அனஸ் பின் இயாள்

4 . நாஃபிஉ பின் அப்துல்லாஹ்

5 . ஃபர்வா பின் கைஸ்

6 . அதாஉ பின் அபூரபாஹ்

7 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ…


சரியான ஹதீஸ் பார்க்க: ஹாகிம்-8623.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.