தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

1-மஜ்ஹூல்-அறியப்படாதவர்

---

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

1 . மஜ்ஹூல், மஃரூப், ஸிகத் – யாரென அறியப்படாதவர், அறியப்பட்டவர், பலமானவர் என்று எவ்வாறு முடிவு செய்வது?

சுருக்கம்

1 . ஒரு அறிவிப்பாளர் அறியப்படாதவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். அல்லது யாருமே அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

2 . அல்லது இஸ்மாயீல் என்று ஒருவர் இருந்தார். அவர் இந்த ஊர்க்காரர்; இந்தக் காலத்தவர் என்பன போன்ற விஷயங்களை மட்டுமே ஒருவர் குறிப்பிட்டால் அப்படி ஒருவர் இருந்தார் என்பதற்குத்தான் இது ஆதாரமாகும். அவர் நல்லவரா? நம்பகமானவரா என்பதை முடிவு செய்ய, இந்த தகவல் போதாது.

3 . அவரிடமிருந்து அறிவிப்பவர்களாலும், நாம் அவரைப் பற்றி பலமானவர் என்ற நன்சான்றை பெற முடியவில்லை.

இவ்வாறு இருந்தால் அவர் அறியப்படாதவர் ஆவார்.

1 . நேரடி நற்சான்று

ஒரு அறிவிப்பாளர் குறித்து இவர் நல்லவர், பலமானவர் என்று ஒரே ஒருவர் கூறினாலும் அவர் அறியப்பட்டவர் ஆவார். (இதற்கு இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர் நன்றான்று அளிக்க வேண்டும் என்று எண்ணிக்கை வரம்பு எதுவும் இல்லை. ஒரே ஒரு நல்லறிஞர் நற்சான்றளித்தால் போதும்) இது நேரடியான நற்சான்று ஆகும்.

2 . மறைமுக நற்சான்று

அறிவிப்பாளர்கள் இரு வகையினராக உள்ளனர்.

1 . தன்னளவில் நம்பகமானவராக இருக்கும் அறிவிப்பாளர், தனக்கு ஹதீஸை அறிவித்தவரை எடை போட மாட்டார். நம்பகமானவர் அறிவித்தாலும், நம்பகமில்லாதவர் அறிவித்தாலும் அவர் வழியாக ஹதீஸை அறிவிப்பார். இவர்கள் ஒரு வகையினராவர்.

2 . சில நம்பகமான அறிவிப்பாளர்கள், யாரிடம் கேட்டாலும் அறிவிக்க மாட்டார்கள். மாறாக அவர் நம்பகமானவரா என்று உறுதி செய்து தான் அறிவிப்பார்கள். தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை உறுதியாக இல்லாவிட்டால் அவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார்கள்.

  • இத்தகையவர்கள், அறியப்படாதவர்கள் எனக் கருதப்படும் அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அது அவருக்கான மறைமுக நற்சான்றாக ஆகும். அறியப்படாதவர் என்ற குறைபாடு நீங்கி (பலமானவர் என்று ஆகி) விடும்.

இது தமிழக அறிஞர் சகோ P. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கீழ்கண்ட ஆய்வின் விளக்கத்திலிருந்து கிடைத்த சுருக்கமான தகவலாகும்.


1 . அறிஞர் பி.ஜே அவர்களின் கருத்து:

மஜ்ஹூல் – யாரென அறியப்படாதவர்?

ஹதீஸ் கலையில் சில அறிவிப்பாளர் குறித்து யாரென அறியப்படாதவர் என்று காரணம் கூறி அவர் அறிவிக்கும் ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதை நாம் அறிந்துள்ளோம்.

இந்த விதியை அதிகமான மக்கள் மேலோட்டமாகவே அறிந்துள்ளனர். எனவே இந்த விதியை முழுமையாக விளக்கவே இந்தப் பதிவு.

அறியப்படுதல் என்றால் என்ன?

ஒரு நபர் அல்லது ஒரு செய்தி அறியப்படுதல் என்றால் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது பொருளல்ல. அனைவரைப் பற்றியும், அனைத்தைப் பற்றியும் அனைவரும் அறிந்திருக்க முடியாது.

அறியப்படுதல் என்றால் நம்பகமான யாராவது அறிந்திருப்பதாகக் கூறினால் அவர் அறியப்பட்டவர் ஆவார். பலருக்கு அவரைப் பற்றி தெரியாத காரணத்தால் அறியப்படாதவர் எனக் கூற முடியாது.

உதாரணமாக சாலிம் மகன் இஸ்மாயீல் என்று ஒருவர் ஒரு ஹதீஸில் இடம் பெறுகிறார். இவரைப் பலரும் அறியப்படாதவர் என்கிறார்கள். அல்லது அவரைப் பற்றி எந்த ஹதீஸ் கலை அறிஞரும் எதுவும் கூறாமல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் மட்டும் அவரைத் தெரியும் என்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அவர் அறியப்பட்டவர் ஆகிவிடுவார்.

பலருக்கு ஒருவரைப் பற்றி தெரியாததால் யாருக்குமே தெரியாது என்று கூறமுடியாது.

அதே நேரத்தில் தனக்கு ஒரு அறிவிப்பாளரைத் தெரியும் என்று சொல்பவர் எந்த அளவுக்கு அறிந்துள்ளதாகக் கூறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் அறியப்பட்டவராக ஆவார்.

இஸ்மாயீல் என்று ஒருவர் இருந்தார். அவர் இந்த ஊர்க்காரர்; இந்தக் காலத்தவர் என்பன போன்ற விஷயங்களை மட்டுமே ஒருவர் குறிப்பிட்டால் அப்படி ஒருவர் இருந்தார் என்பதற்கு இது ஆதாரமாகும். அவர் நல்லவரா? நம்பகமானவரா? என்பதை முடிவு செய்ய இது போதுமாகாது.

அவர் நம்பகமானவர்; உண்மையாளர்; மனன சக்தி உள்ளவர் என்பது போன்ற விபரங்களையும் சொன்னால் தான் அந்த அறிவிப்பாளர் ஏற்கப்பட்டவர் ஆவார்.


இதற்குப் பின்வரும் செய்தியை உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததே இல்லை என்று ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) கூறும் செய்தியை எடுத்துக் கொள்வோம்.

مسند أحمد

25787 – حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّحْمَنِ الْمَعْنَى، عَنْ سُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: ” مَنْ حَدَّثَكَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَالَ قَائِمًا بَعْدَمَا أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ فَلَا تُصَدِّقْهُ “، ” مَا بَالَ قَائِمًا مُنْذُ أُنْزِلَ عَلَيْهِ الْفُرْقَانُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்ட பின்பு அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று யாரேனும் உமக்கு அறிவித்தால் அவரை நம்பி விடாதே! திருக்குர்ஆன் அவர்களுக்கு அருளப்பட்டதிலிருந்து அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)
நூல்: அஹ்மத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியாகிய ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் இப்படி கூறியதற்கு எதிராக வேறு எவரும் அறிவிக்காமல் இருந்தால் இதை அப்படியே நாம் எடுத்துக் கொள்வோம்.

ஆனால் இதற்கு மாற்றமாகவும் ஹதீஸ் உள்ளது.

صحيح البخاري

224 – حَدَّثَنَا آدَمُ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ «أَتَى النَّبِيُّ صلّى الله عليه وسلم سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا، ثُمَّ دَعَا بِمَاءٍ فَجِئْتُهُ بِمَاءٍ فَتَوَضَّأَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள். பின்னர் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். நான் தண்ணீர் கொண்டு வந்தேன். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
224

இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் தான் அறிந்த அளவுக்கு இதைக் கூறியுள்ளார்கள்; ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களுக்குத் தெரியும் வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று சிறுநீர் கழித்ததைப் பார்த்து ஒரு நபித்தோழர் அறிவிக்கிறார். இதை மறுத்தால் அந்த நபித்தோழர் பொய் சொன்னதாக ஆகும்.

இவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) பொய் சொன்னார்கள் என்ற கருத்து வராது. அவர் அறிந்த செய்தியை அவர் கூறியுள்ளார் என்ற கருத்து வரும்.

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களுக்குத் தெரியாததால் யாருக்கும் தெரியவில்லை என்று ஆகாது.

அறிவிப்பாளர்கள் குறித்தும் இதே நிலைதான்.


எத்தனை பேர் நற்சான்று கூற வேண்டும்?

கேள்வி:

ஒரு அறிவிப்பாளர் அறியப்படாதவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அல்லது யாருமே அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி அவரது நம்பகத் தன்மை குறித்து சிலர் மட்டும் சான்றளித்துள்ளார்கள் என்றால் அந்தச் சிலர் என்பதற்கு எண்ணிக்கை வரம்பு உண்டா?

பதில்:

  • இதற்கு எண்ணிக்கை வரம்பு எதுவும் இல்லை. ஒரே ஒரு நல்லறிஞர் சான்றளித்தால் போதும்.
  • ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்று ஒருவர் சொல்கிறார். அவரைப் பற்றி மற்ற யாரும் குறை சொல்லவில்லை என்பதைக் காரணம் காட்டி அந்த ஒரு அறிஞரின் நற்சான்றை மறுத்தால் அவரைப் பொய்யராக நாம் ஆக்கியவர்களாவோம். இதனால் அந்த நல்லறிஞரே பலவீனமானவர் என்று ஆகிவிடுவார்.
  • எனவே ஒரே ஒருவர் நற்சான்று அளித்தால் அறியப்படாதவர் என்ற விமர்சனம் விழுந்து விடும்.

இது நேரடியாக வழங்கும் நற்சான்றுக்குரிய நிலை. இது தவிர மறைமுகமான நற்சான்றும் உள்ளது.

மறைமுக நற்சான்று

ஒரு அறிவிப்பாளர் குறித்து இவர் நல்லவர் என்பது போல் விமர்சனம் செய்வது நேரடியான நற்சான்று ஆகும்.

இஸ்மாயீல் என்ற அறிவிப்பாளர் குறித்து ஒருவர் கூட எந்த நற்சான்றும் அளிக்கவில்லை. ஆனால் அந்த அறிவிப்பாளர் வழியாக நம்பகமான சிலர், ஹதீஸ்களை அறிவிக்கிறார்கள் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது?

கேள்வி:

அறியப்படாதவர் என்று மற்ற அறிஞர்களால் கருதப்பட்ட ஒரு அறிவிப்பாளர் வழியாக நம்பகமான அறிவிப்பாளர்கள் (ஒருவரோ அல்லது பலரோ) அறிவித்திருப்பதே நற்சான்றாக ஆகுமா?

பதில்:

  • பொதுவாக அப்படிக் கூற முடியாது.

மறைமுகமாக நற்சான்று அளிப்பவர்கள் இரு வகையினராக உள்ளனர்.

  • 1 . தன்னளவில் நம்பகமானவராக இருக்கும் அறிவிப்பாளர் தனக்கு ஹதீஸை அறிவித்தவரை எடை போட மாட்டார். நம்பகமானவர் அறிவித்தாலும், நம்பகமில்லாதவர் அறிவித்தாலும் அவர் வழியாக ஹதீஸை அறிவிப்பார். இவர்கள் ஒரு வகையினராவர். அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர் வழியாக இந்த வகையான நம்பகமானவர்கள் அறிவித்தால் அது நற்சான்றாக ஆகாது. ஏனெனில் தனக்கு அறிவித்தவர் நம்பகமானவரா? என்பதை உறுதி செய்து அறிவிப்பது இவர்களின் வழக்கம் அல்ல என்பதால் இது நற்சான்றாக ஆகாது.
  • 2 . இன்னும் சில நம்பகமான அறிவிப்பாளர்கள் உள்ளனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் அறிவிக்க மாட்டார்கள். மாறாக அவர் நம்பகமானவரா? என்று உறுதி செய்து தான் அறிவிப்பார்கள். தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை உறுதியாக இல்லாவிட்டால் அவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார்கள். இத்தகையவர்கள், அறியப்படாதவர்கள் எனக் கருதப்படும் அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அது அவருக்கான நற்சான்றாக ஆகும். அறியப்படாதவர் என்ற குறைபாடு நீங்கி விடும்.
  • நேரடியாக நற்சான்று அளிப்பது ஒரே ஒரு அறிஞராக இருந்தால் போதும் என்று முன்னர் அறிந்தோம். மறைமுக நற்சான்றுக்கும் ஒருவரே போதும் என்பதே சரியான கருத்தாகும்.
  • மறைமுக நற்சான்று அளிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் இருவர் அப்படி அறிவிக்க வேண்டும் என்று சிலரும் மூவர் அறிவிக்க வேண்டும் சிலரும் கூறியுள்ளனர். இது சரியான நிலைபாடு இல்லை.
  • நம்பகமானவர் என்று இவர்களும் ஏற்றுக் கொண்ட ஒருவர், நம்பகமானவர் என்று தன்னளவில் உறுதியானால் மட்டுமே அறிவிக்கும் அறிஞராக ஒருவர் இருக்கிறார். இவர் அறியப்படாதவர் என்று கருதப்படும் நபரிடமிருந்து அறிவிக்கும் போது அதை நாம் மறுத்தால் அவர் பொய் சொல்லி விட்டார் என்றும் சரியாக ஆய்வு செய்ய மாட்டார் என்றும் குற்றம் சுமத்தியதாக ஆகும். எனவே ஒருவர் அறிவித்தாலும் அது நற்சான்றாக ஆகும் என்பதே சரியாகும்.

(இதற்கான ஆதாரங்கள்)

علل الترمذي

والمنصوص عن أحمد يدل على أنه من عرف منه أنه لا يروي إلا عن ثقة، فروايته عن إنسان تعديل له. ومن لم يعرف منه ذلك فليس بتعديل، وصرح بذلك طائفة من المحققين من أصحاب الشافعي.

நம்பகமான அறிவிப்பாளர் மூலம் மட்டுமே அறிவிப்பதைக் கொள்கையாகக் கொண்டவர் என்று அறியப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பாளர் வழியாக அறிவித்தால் அதுவே அவர் நம்பகமானவர் என்பதற்கான சான்றாகும். யார் வழியாகவும் அறிவிக்கும் வழக்கமுடையவர் – அவர் தன்னளவில் நம்பகமானவராக இருந்தாலும் – ஒருவரிடமிருந்து அறிவித்தால் அது அவருக்கான நற்சான்றாக ஆகாது. இதை ஷாஃபி பிறப்பு ஹிஜ்ரி 150
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 54
இமாம், மற்றும் அவர்களின் மாணவர்களில் தீர்க்கமான அறிவுடையவர்கள் கூறியுள்ளனர். (அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களின் கருத்தும் இதுதான் என்று தெரிகிறது)

நூல்: இலலுத் திர்மிதீ

ஒருவர் நம்பகமானவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளார். அவர் நம்பகமானவர் வழியாக மட்டுமே அறிவிப்பார். யாரென அறியப்படாதவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார் என்று நாம் ஒப்புக் கொண்டு விட்டு அவர் நற்சான்று அளித்தவரை ஏற்கமாட்டேன் என்று கூறுவது அவரைப் பொய்யராக்குவதாகும். அவரது நம்பகத் தன்மையை சந்தேகிப்பதாகும்.

இக்கருத்தை இன்னும் பல அறிஞர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

قال أحمد – في رواية الأثرم – إذا روى الحديث (عبد الرحمن) بن مهدي (عن) رجل، فهو حجة، ثم قال: كان عبد الرحمن أولا يتساهل في الرواية عن غير واحد، ثم تشدد بعد، وكان يروى عن جابر، ثم تركه.

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
ஒருவர் வழியாக அறிவித்தால் அந்த ஒருவர் ஆதாரமாகக் கொள்ளத் தக்கவராவார். ஆரம்ப காலத்தில் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் நம்பகமானவர் என்று உறுதி செய்யாத பலர் வழியாக அறிவித்து வந்தார். பின்னர் இதில் கடுமையான நிலைபாட்டை எடுத்து விட்டார் என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹம்பல் கூறுகிறார்கள்.


شرح علل الترمذي

وقال) في رواية أبي زرعة: مالك بن أنس إذا روى عن رجل لا يعرف فهو حجة.

இமாம் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
அவர்கள் அறியப்படாத ஒருவர் வழியாக அறிவித்தால் அவர் அறியப்படாதவர் அல்ல. ஆதாரமாகக் கொள்ளத்தக்கவர் ஆவார் என்று அபூஸுர்ஆ கூறுகிறார்.


شرح علل الترمذي

وقال (في) رواية ابن هانئ: ما روى مالك عن أحد إلا وهو ثقة. كل من روى عنه مالك فهو ثقة

நம்பகமானவர் வழியாக தவிர யார் வழியாகவும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அறிவிக்க மாட்டார். எனவே யார் வழியாக மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அறிவிக்கிறாரோ அவர்கள் நம்பகமானவர்கள் ஆவர்.


شرح علل الترمذي

وقال الميموني: سمعت أحمد – غير مرة – يقول: كان مالك من أثبت الناس. ولا تبال أن لا تسأل عن رجل روى عنه مالك، ولا سيما مدني.

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் மக்களில் அதிக உறுதியானவராவார். ஒருவர் வழியாக மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அறிவித்து விட்டால் மற்றவர்களிடம் அவரைப் பற்றிக் கேட்காதே என்றும் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறுகிறார்கள்.


قال الميموني: وقال لي يحيى بن معين: لا تريد أن تسأل عن رجال مالك كل من حدث عنه ثقة إلا رجلا أو رجلين.

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் யார் வழியாக அறிவித்துள்ளாரோ அவர்கள் நம்கமானவர்கள் ஆவார்கள். ஓரிருவரைத் தவிர. எனவே மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் யார் வழியாக அறிவித்தாரோ அவரைப் பற்றிக் கேட்காதே என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார்.


شرح علل الترمذي

وقال يعقوب بن شيبة: قلت ليحيى بن معين: متى يكون الرجل معروفا؟ إذا روى عنه كم؟ قال: إذا روى عن الرجل مثل ابن سيرين والشعبي، وهؤلاء أهل العلم، فهو غير مجهول. قلت: فإذا روى عن الرجل (مثل سماك) بن حرب، وأبي إسحاق؟ قال: هؤلاء يروون عن مجهولين، انتهى. وهذا تفصيل حسن.

யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவர் அறியப்பட்டவராக ஆக எத்தனை நபர்கள் அவர் வழியாக அறிவிக்க வேண்டும் என்று யஹ்யா பின் மயீன் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு இப்னு ஸீரீன்,பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
ஆகிய அறிஞர்கள் அவர் வழியாக அறிவித்தால் அவர் அறியப்படாதவர் ஆக மாட்டார். ஸிமாக் பின் ஹர்ப், அபூ இஸ்ஹாக் ஆகியோர் ஒருவரிடமிருந்து அறிவித்தால் அதனால் அறியப்பட்டவர் ஆக மட்டார். ஏனெனில் இவர்கள் அறியப்படாதவர்கள் வழியாகவும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பதிலளித்ததாக யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
கூறுகிறார்.


وابن المديني يشترط أكثر من ذلك: فإنه يقول فيمن يروي عنه يحيى بن أبي كثير وزيد بن أسلم معا، إنه مجهول.

யாரென அறியப்படாதவர் வழியாக யஹ்யா பின் அபீகஸீர், ஸைத் பின் அஸ்லம் ஆகிய இருவர் அறிவித்தாலும் அவர் அறியப்படாதவர் தான் என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
கூறுகிறார்.

ويقول فيمن يروي عنه شعبة وحده، إنه مجهول .

அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக ஷுஃபா மட்டும் அறிவித்தால் அவர் அறியப்படாதவர் தான் என்றும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
கூறுகிறார்.

(இவர்கள் யாரென அறியப்படாதவர்கள் வழியாகவும் அறிவிப்பவர்கள் என்பதே இதற்குக் காரணம்.)


وقال فيمن يروي عنه ابن المبارك ووكيع وعاصم، هو معروف.

யரென அறியப்படாதவர் வழியாக ஆஸிம், வகீவு, இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
ஆகியோரில் ஒருவர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் ஆவார்.

وقال فيمن يروي عنه عبد الحميد بن جعفر وابن لهيعة، ليس بالمشهور.

அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக இப்னு லஹீ, அப்துல் ஹமீத் பின் ஜாஃபர் ஆகியோர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவராக மாட்டார்.

وقال فيمن عنه ابن وهب وابن المبارك، معروف.

அறியப்படாத அறிவிப்பாளர் வழியாக இப்னு வஹப், இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அறிவித்தால் அவர் அறியப்பட்டவராவார்.

وظاهر هذا أنه لا عبرة بتعدد الرواة، وإنما العبرة بالشهرة ورواية الحفاظ الثقات. قال: هؤلاء يروون عن مجهولين، انتهى. وهذا تفصيل حسن.

இதிலிருந்து தெரிய வருவது என்ன? அறியப்படாதவர் வழியாக எத்தனை பேர் அறிவிக்கிறார்கள் என்பதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஏனெனில் அவர்கள் அறியப்படாதவர்கள் வழியாகவும் அறிவிப்பவர்கள். மாறாக எத்தகையவர்கள் அவர் வழியாக அறிவித்துள்ளார்கள் என்பதற்கே முக்கியத்துவம் உள்ளது என்பது இதிலிருந்து தெரிகின்றது.

இதுதான் அறிவார்ந்த நிலைபாடாகும்.


அறியப்படாதவர் வழியாக மூன்று நம்பகமானவர்கள் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் தம்மளவில் நம்பகமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தனக்கு அறிவிப்பவரின் நம்பகத்தன்மை பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள் என்றால் அவர்கள் அறிவிப்பதால் அறியப்படாதவர், அறியப்பட்டவராக மாட்டார். இது நற்சான்றாக ஆகாது.

அறியப்படாதவர் வழியாக ஒருவர் தான் அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிவிப்பாளரை எடை போட்டு நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டால் தான் அறிவிப்பார் என்றும் வைத்துக் கொள்வோம்.

இத்தகைய தகுதி படைத்தவர் அறியப்படாதவர் வழியாக அறிவித்தால் அறியப்படாதவர் என்ற குறை நீங்கி விடும்.

வழக்கு கொடுக்கல் வாங்கல் போன்றவைகளுக்கு இருவர் சாட்சி கூற வேண்டும்; நால்வர் சாட்சி கூற வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

மார்க்க விஷயத்தில் ஒருவர் சான்றளித்தாலே போதுமாகும்.


ஆதாரப்பூவமான ஹதீஸ்கள் என்று கூறும் ஹதீஸ்களில் பாதிக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை ஒருவரிடமிருந்து ஒருவர் என்று தான் அறிவித்துள்ளனர். ஆனாலும் ஒருவர் அறிவிப்பதால் அந்த ஹதீஸ்களை யாரும் மறுத்ததில்லை.

صحيح البخاري

88 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الحَسَنِ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الحَارِثِ، أَنَّهُ تَزَوَّجَ ابْنَةً لِأَبِي إِهَابِ بْنِ عُزَيْزٍ فَأَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنِّي قَدْ أَرْضَعْتُ عُقْبَةَ وَالَّتِي تَزَوَّجَ، فَقَالَ لَهَا عُقْبَةُ: مَا أَعْلَمُ أَنَّكِ أَرْضَعْتِنِي، وَلاَ أَخْبَرْتِنِي، فَرَكِبَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ فَسَأَلَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَيْفَ وَقَدْ قِيلَ» فَفَارَقَهَا عُقْبَةُ، وَنَكَحَتْ زَوْجًا غَيْرَهُ

88. உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:

நான் அபூஇஹாப் பின் அஸீஸ் என்பவரின் மகளை மணந்து கொண்டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து நான், உக்பாவுக்கும் நீ மணந்து கொண்டுள்ள பெண்ணுக்கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) பாலூட்டியிருக்கிறேன்’ (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர்கள் ஆவீர்கள்) என்று கூறினார். நான் நீங்கள் எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணமுடித்துக் கொண்ட போது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவில்லையே! என்று கேட்டேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவிலிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீயும் உம் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுப் போன பிறகு எப்படி (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே நான் அவளை விட்டுப் பிரிந்துவிட்டேன். அவள் பெண்ணும் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.

நூல்: புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
88

பால் ஊட்டியதாக ஒரு பெண் கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியே ஏற்றுள்ளனர். இதற்கு வேறு சாட்சியைக் கொண்டு வருமாறு கூறவில்லை.


سنن الدارمي

1733 – حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَرَاءَى النَّاسُ الْهِلَالَ، فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي رَأَيْتُهُ، فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِالصِّيَامِ»

[تعليق المحقق] إسناده صحيح*

மக்களெல்லாம் பிறை பார்க்க முயன்றனர். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நான் பிறை பார்த்தேன் என்று தெரிவித்தேன். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்க கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)
நூல் : தாரிமி

ஒரே ஒருவர் சாட்சியத்தை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை முடிவு செய்தார்கள். இன்னொரு சாட்சி வரட்டும் என்று காத்திருக்கவில்லை.

ஒரு நம்பகமானவர் நற்சான்று அளித்தால் போதும் என்ற நிலைபாடு ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது.

இருவர் அல்லது மூவர் அறிவிக்க வேண்டும் என்பது ஆதாரங்களின்படி அமையவில்லை.


மஜ்ஹூல் குறித்து மேலதிகமாக அறிய கீழ்க்காணும் ஆக்கத்தைப் பார்க்கவும்

https://onlinepj.in/index.php/hadees-art/majhool-yaar (லின்க் வேலை செய்யவில்லை)


பிற்சேர்க்கை

மேற்கண்ட கருத்துக்கு மாற்றுக் கருத்து உள்ள தகவல்கள்:

1 . ஆய்வுக்காக: அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களின் கருத்து
.

இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
இப்னு ரஜப் ஆகியோரின் கருத்து

தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோரின் கருத்து

2 . ஆய்வுக்காக: ஹுக்முல் மஜ்ஹூல் .

3 . ஆய்வுக்காக: சில அறிவிப்பாளர்கள் .

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களால், மக்பூல் தரத்தில் கூறப்பட்ட சிலரை அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலமான அறிவிப்பாளர்களைக் கவனித்து ஸிகத் என்றோ அல்லது ஸதூக் என்றோ, அல்லது மஜ்ஹூல் என்றோ அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறிய தகவல்.


பலமானவர்களிடமிருந்து மட்டுமே ஹதீஸ்களை அறிவிப்பதை கொள்கையாக கொண்ட அறிஞர்கள் விவரம், இதற்கு மாற்று கருத்து பற்றி வந்துள்ள தகவல்:

1 . من كان من الحفاظ لا يروي إلا عن ثقة .

2 . அல்மக்தபா .

3 . மேற்கண்ட 2 இல் சிறிது மாற்றம் .

4 . பலமானவர்கள் வழியாக அறிவிப்பவர்கள் பற்றி .

5 . மஜ்ஹூல் .


ஆரம்பக்கால அறிஞர்களில் பெரும்பாலோர் மஜ்ஹூல்-அறியப்படாதவர் என்ற தரத்தில் உள்ளவர்களை பல வகையினர்களாக குறிப்பிடவில்லை.

ஆரம்பக்கால அறிஞர்களில் ஒருவரான துஹ்லீ இமாம் அவர்களின் வழக்குச் சொல்லின் அடிப்படையில் தான், பிற்கால அறிஞர்களில் சிலர் இவர்களை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தினர்.

1 . مجهول العين – மஜ்ஹூலுல் ஐன்.

இன்ன மனிதர் உண்மையில் இருந்துள்ளாரா? என்று அறியப்படாதவர்.

2 . مجهول الحال – மஜ்ஹூலுல் ஹால்.

இன்ன மனிதர் இருந்துள்ளார். ஆனால் வெளிப்படையிலும், மறைவிலும் நிலை அறியப்படாதவர்.

3 . مستور – மஸ்தூர்.

இன்ன மனிதர் இருந்துள்ளார். இவர் வெளிப்படையில் நிலை அறியப்பட்டவர். ஆனால் மறைவில் அறியப்படாதவர்.

மேலும் இவரின் செய்திகள் ஆய்வுசெய்யப்பட்டு, இவர் இன்ன செய்திகளை தனித்து அறிவித்துள்ளாரா? மற்ற பலமானவர்களுக்கு தோதுவாக அல்லது மாற்றமாக அறிவித்துள்ளாரா? என்பது போன்றவை ஆய்வு செய்யப்படாதவர் ஆவார்.

இதுபோன்றவர்கள் இடம்பெறும் செய்திகளை எடுத்தவுடனே பலவீனமானவை என்றுக் கூறக்கூடாது. ஆய்வு செய்த பிறகே முடிவு செய்யவேண்டும்.

(வெளிப்படையில் அறியப்பட்டவர் என்றால் அவர் முஸ்லிமாக இருந்தது; முஸ்லிம்களுடன் தொழுகை போன்ற செயல்களில் பங்குபெற்றது, இன்ன பகுதியில் வாழ்ந்தவர் என்பது போன்ற வரலாற்று தகவலாகும்.

மறைவில், அந்தரங்கத்தில் நிலை அறியப்பட்டவர் என்றால் அவரைப் பற்றித் தெரிந்தவர் அவரை பாராட்டியோ அல்லது குறைக் கூறியோ இருப்பதாகும்.

எவரின் பாராட்டும், விமர்சனமும் இல்லாவிட்டால் இவரின் அந்தரங்க நிலை அறியப்படவில்லை என்று கூறுவர். இவரையே மஸ்தூர் என்று இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
போன்றோர் கூறியுள்ளனர்.

(அந்தரங்க நிலை என்பது உள்ளத்தில் உள்ளதை அறிந்திருப்பது என்பது பொருளல்ல.)


இந்த 3 வகையினர்களின் வரைவிலக்கணம் பற்றி அறிஞர்கள் ஒரே மாதிரி குறிப்பிடவில்லை. (இதைப் பற்றி சில அறிஞர்களின் நிலைப்பாடு பகுதியில் பதிவுசெய்யப்படும்)


அறியப்படாதவர், அறியப்பட்டவர் என்பது பற்றி அறிஞர்களின் நிலைப்பாடு:

1 . இப்னு மயீன்

பிரபலமான அறிஞர்களில் ஒருவராவது, ஒரு அறிவிப்பாளரிடமிருந்து அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் ஆவார்.

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், எத்தனைப் பேர் அறிவிக்கவேண்டும் என்ற எண்ணிக்கையை பார்க்கவில்லை.
  • இவ்வாறே அறியப்படாதவர்களை மஜ்ஹூல் ஐன், மஜ்ஹூல் ஹால் என்று வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை.

2 . இப்னுல் மதீனீ

அறிவிப்பாளர், முக்கிய அறிஞர்களிடம் பிரபலமாக இருக்க வேண்டும். இவ்வாறே இவரின் ஹதீஸ்கள் பிரபலமாக இருக்க வேண்டும்.

இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஒருவராக இருந்தாலும், பலராக இருந்தாலும் அது பிரச்சனையில்லை.

இவரிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்து, இவரும் இவரின் செய்திகளும் பிரபலமாக இருந்தால் இவர் அறியப்பட்டவர்.

இவரிடமிருந்து பலர் அறிவித்தும் இவரும், இவரின் செய்திகளும் பிரபலமாக இல்லாவிட்டால் இவர் அறியப்படாதவர் ஆவார்.

இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், ஒருவரை  அறியப்படாதவர் என்று கூறினால் (பெரும்பாலும்) அவர் அறவே அறியப்படாதவர் என்ற மஜ்ஹூல் ஐன் ஆவார்.

ليس بمشهور – லைஸ பிமஷ்ஹூர் என்று கூறினால் அவரின் செய்திகள் அறிஞர்களிடம் பிரபலமாகவில்லை என்பது பொருளாகும்.

  • இவர் அறியப்படாதவர்களை மஜ்ஹூல் ஐன், மஜ்ஹூல் ஹால் என்று வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை.

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

குறைந்த ஹதீஸ்களை அறிவிப்பவர் அறியப்படாதவர் ஆவார்.

  • இவர் அறியப்படாதவர்களை மஜ்ஹூல் ஐன், மஜ்ஹூல் ஹால் என்று வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை.

4 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்

  • இவர் அறியப்படாதவர்களை மஜ்ஹூல் ஐன், மஜ்ஹூல் ஹால் என்று வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை.

ஒருவரிடமிருந்து பலர் அறிவித்தும் அவரை மஜ்ஹூல் என்று கூறியுள்ளார்…


5 . முஹம்மத் பின் யஹ்யா-துஹ்லீ ஹி-258.

ஒருவரிடமிருந்து இருவர் அறிவித்தால் அவர் அறியப்படாதவர் அல்ல. அதாவது மஜ்ஹூல் ஐன் அல்ல.

இதனடிப்படையில் தான் பின்னால் வந்தவர்கள், ஒருவரிடமிருந்து ஒருவர் மட்டும் அறிவித்திருந்தால் அவர் மஜ்ஹூல் ஐன் என்றும், இருவர் அல்லது இருவருக்கு மேல் அறிவித்தால் மஜ்ஹூல் ஹால் என்றும் கூறினர்.


6 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் ஹி-275.

ஸுஹ்ரீ அவர்கள், ஒருவரிடமிருந்து அறிவித்தால் அவர் அறியப்பட்டவர். அவரிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை பிரச்சனையில்லை.


7 . அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஹி-277, 8 . இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
ஹி-327.

  • இவர் அறியப்படாதவர்களை மஜ்ஹூல் ஐன், மஜ்ஹூல் ஹால் என்று வித்தியாசப்படுத்தி பார்க்கவில்லை.

பிரபலமாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஒருவரிடமிருந்து பலமானவர் அறிவித்தால் அதற்கு தனி இடமுண்டு. மேலும் இவரைப் பற்றி வேறு விமர்சனம் இருக்கக்கூடாது. ஒருவரை பலவீனமானவர் என்று மற்றவர்கள் விமர்சித்திருந்தால் அவரிடமிருந்து பலமானவர் அறிவிப்பதால் எந்த பயனும் இல்லை. அவர் அறியப்படாதவர் என்றால் அவரிடமிருந்து பலமானவர் அறிவிப்பதால் பயன் உண்டு.

இவர் அறியப்படாதவர் என்பதற்கு கூறப்படும் அளவுகோல் ஒரே மாதிரி இல்லை.


9 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஹி-303


10 . இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஹி-, 11 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஹி-356.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களின் நிலைப்பாடு, ஒருவரின் ஆசிரியரும், மாணவரும் பலவீனமானவர்களாக அல்லது அறியப்படாதவர்களாக இருந்தால் அவரும் அறியப்படாதவர் ஆவார் என்பதாகும்.

  • இவர் மஜ்ஹூல் ஐன், மஜ்ஹூல் ஹால் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை.
  • 5 நிபந்தனை இருந்தால் அவர் பலமானவர்…இது ஒரு வகையினர்.
  • தரம், நிலை அறியப்படாதவர். இவரின் ஆசிரியரும், மாணவரும் பலமாக இருந்து அறிவிப்பாளர்தொடரில் குறைகளும் இல்லாமல் இருந்து, இவரைப் பற்றி வேறு விமர்சனம் இல்லாமல் இருந்து, இவர் அறிவிக்கும் ஹதீஸின் கருத்தும் முன்கராக இல்லாவிட்டால் இவர் பலமானவர் ஆவார். இதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் இரண்டாம் வகை பலமானவர்கள் ஆவார்கள்.

இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களின் ஆசிரியரான இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
அவர்களின் கருத்தும் இதுவே என்றும் சிலர் கூறியுள்ளனர். என்றாலும் ஒருவரிடமிருந்து பிரபலமான, பலமான ஒருவர் அறிவித்தால் அவர் மஜ்ஹூல் ஐன் அல்ல. மஜ்ஹுல் ஹால் ஆவார் என்பதே இப்னு குஸைமாவின் கருத்து என்று வேறு சிலர் கூறியுள்ளனர்.


12 . தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் ஹி-385.

ஒருவரிடமிருந்து அறியப்படாத ஒருவர் மட்டுமே அறிவித்திருந்தால் அவரும் அறியப்படாதவர் ஆவார். இவர் மஜ்ஹூல் ஐன் ஆவார்.

அவரிடமிருந்து பிரபலமான; நம்பகமான-பலமான ஒருவர் அறிவித்தாலும் அவர் அறியப்பட்டவர் ஆவார்.

அல்லது பலமான இருவர் அறிவித்தால் அவர் அறியப்பட்டவர் என்பதுடன் அந்தச் செய்தி மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக இல்லாவிட்டால் அவரின் செய்தி ஏற்கப்படும்.

  • 1 . இவ்வாறே ஒருவரிடமிருந்து ஒரே ஒரு பலமானவர் அறிவித்திருந்தால் அவரின் செய்தி போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அவரின் செய்தி சரியானதாகும். மாற்றமாக இருந்தால் பலவீனமாகும்.
  • 2 . ஒருவர் மஜ்ஹூல் ஐன் தரத்தில் உள்ளவராக இருந்தாலும் அவரைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்து அது ஃகரீபாக அல்லது முன்கராக இல்லாவிட்டால் அவரின் செய்தி ஏற்கப்படும். (இந்த இரண்டு நிலையும் ஒரு செய்திக்கு முதாபஅத் இருக்கும் போது ஏற்றுக் கொள்ளுதல் என்பதில் அடங்கும்)

தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் அவர்களின் நிலைப்பாடு துஹ்லீ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோரின் நிலைப்பாடு போன்றதாகும்.


13 . இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
ஹி-456.

..


 

14 . இப்னு அப்துல் பர் ஹி-463.

ஒருவரிடமிருந்து ஒரே ஒரு பலமானவர் மட்டுமே அறிவித்திருந்து அந்த ஒருவர் ஹதீஸ்துறை அல்லாத மற்ற துறைகளில் பிரபலமானவர் என்றால் அவர் மஜ்ஹூல் ஐன் அல்ல என்பது இப்னு அப்துல் பர் அவர்களின் கருத்தாகும்.


15 . கதீப் பஃக்தாதீ ஹி-463.

1 . ஹதீஸைக் கற்பதில் பிரபலமாக இல்லாதவர். (அதிகமான ஆசிரியர்கள் இல்லாதவர்.)

2 . ஹதீஸ்கலை அறிஞர்களாலும் இவர் ஹதீஸ் துறையில் ஈடுபட்டவரா? இல்லையா? என்று கூறப்பட்டிருக்காது.

3 . இவரிடமிருந்து ஒரே ஒருவர் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்திருப்பார்.

4 . இவரைப் பற்றி எந்த அறிஞரும் குறையோ, நிறையோ கூறியிருக்கமாட்டார்.

இந்த 4 நிலை உள்ளவர் மஜ்ஹூல் ஐன்-அறவே அறியப்படாதவர் எனும் தரமுடையவர் ஆவார்.

ஒருவரிடமிருந்து 2 பேர் அல்லது 2 பேருக்கு மேல் அறிவித்தால் அவர் மஜ்ஹூல் ஐன் அல்ல. மஜ்ஹூல் ஹால் எனும் நிலைக்கு வந்துவிடுவார். ஆனால் இதனடிப்படையில் அவர் நம்பகமானவர் என்று முடிவு செய்யக்கூடாது என்பது கதீப் பஃக்தாதீ அவர்களின் நிலைப்படாகும்.


16 . இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
ஹி-628.

ஆரம்பக்கால அறிஞர்களின் நன்சான்று பெறாதவர்கள் அனைவரையும் இப்னுல் கத்தான் அவர்கள், அறியப்படாதவர்கள் என்று கூறுவார்.

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுவிட்டு சில அறிவிப்பாளர்களின் ஹதீஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவை மற்ற பலமானவர்களின் செய்திகளுக்கு தோதுவாக உள்ளது என்பதாலும்; அவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இருப்பதாலும் அவர்கள் அறியப்பட்டவர்கள் என்பதுடன் பலமானவர்கள் என்ற தரத்திலும் உள்ளனர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ஆகியோர் இத்தகைய நிலையில் உள்ளவர்களின் செய்திகளையும் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டுவிட்டு இப்னுல் கத்தான் அவர்களின் நிலைப்பாட்டை சில இடத்தில் விமர்சித்துள்ளார்.


17 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஹி-768.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களால் அறியப்படாதவர்கள் என்று கூறப்பட்டவர்களில் சிலரை அறியப்படாதவர் என்றும், இவ்வாறு கூறப்பட்ட சிலர் விசயத்தில் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் முடிவு செய்திருப்பதைக் காணலாம்.

சில இடங்களில் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், அறியப்படாதவர் என்பதற்கு எண்ணிக்கையைக் கவனிக்கவில்லை. ஒரே செய்தியை அறிவித்துள்ள சிலரை பலமானவர் என்றும் கூறியுள்ளார். ஒரே ஒருவரை மட்டுமே மாணவராக கொண்ட அறிவிப்பாளர்களை பலமானவர் என்றும் கூறியுள்ளார். பிரபலமான முக்கிய அறிஞர்களில் ஒருவர் அறிவித்தாலும் அவரின் செய்தியை ஆதாரமாக ஏற்றுள்ளார். இவ்வாறு வேறுசில சான்றுகளின் அடிப்படையில் தான் இன்ன அறிவிப்பாளர் அறியப்பட்டவரா? அல்லது அறியப்படாதவரா? என்று முடிவு செய்துள்ளார் என்பதைக் காணலாம்.


18 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஹி-852.

மஜ்ஹூல் ஐன்

  • ஒருவரிடமிருந்து ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அறிவித்துள்ளார்.
  • இவரைப் பற்றி எந்த அறிஞரின் நற்சான்றும் இல்லை.

இந்த 2 நிலையுள்ள அறிவிப்பாளர்கள் மஜ்ஹூல் என்று, தனது 12 வகை அறிவிப்பாளர்களில் 9 ஆவது வகையினரில் இவர்களைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.

மஜ்ஹூலுல் ஹால், மஸ்தூர்.

  • ஒருவரிடமிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • ஆனால் இவரைப் பற்றி எந்த அறிஞரின் நற்சான்றும் இல்லை.

இந்த 2 நிலையுள்ள அறிவிப்பாளர்கள் மஜ்ஹூலுல் ஹால், மஸ்தூர்-நிலை அறியப்படாதவர்கள் என்று, தனது 12 வகை அறிவிப்பாளர்களில் 7 ஆவது வகையினரில் இவர்களைப் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.


قال ابن عدي رحمه الله : “ان الثقات اذا رووا عن أحد فهو مستقيم الحديث “

والاصل في لفظ ( مستقيم الحديث ) أنه ثقة والله أعلم , انظر تفصيل الحال في شفاء العليل (ص125)

وقال ابن ابي حاتم : ” سألت أبي عن رواية الثقات عن رجل غير ثقه مما يقويه قال إذا كان معروفا بالضعف لم تقوه روايته عنه وإذا كان مجهولا نفعه رواية الثقة عنه “الجرح والتعديل (2/36)

والنفع هاهنا محمول على العدالة في اقل الاحوال

فقد قال الدارقطني : “من روى عنه ثقتان فقد ارتفعت جهالته وثبتت عدالته ” فتح المغيث (1/322)

قال الامام أحمد في حصين بن عبد الرحمن الحارثي : (( ليس بعرف )) ما روى عنه غير حجاج بن أرطأة وإسماعيل بن أبي خالد روى عنه حديثاً واحداً )) . ومع ذلك فهم ثقتان

وقال في عبد الرحمن بن وعلة : (( إنه مجهول )) مع أنه روى عنه جماعة ثقات ، لكن مراده أنه لم يشتهر حديثه ولم ينتشر بين العلماء .

وقد صحح حديث بعض من ورى عنه واحد ولم يجعله مجهولاً ، قال في خالد بن سمير : (( لا أعلم عنه أحد سوى الأسود بن شيبان ولكنه حسن الحديث )) . وقال مرة أخرى : (( حديثه عندي صحيح )) .

قال ابن رجب الحنبلي : “وظاهر هذا أنه لا عبرة بتعدد الرواة ، إنما العبرة بالشهرة ورواية الحفاظ الثقات .”وهذا هو الصحيح

فلكي نقول بان الراوي المجهول يصبح ثقة أو حسن الحديث فيلزمنا عدة شروط

أولاً : رواية جمع من الثقات عنه على الاقل اثنان لاثبات عدالته

ثانياً : ان تكون القرينة في صف قوة حفظهم , بمعنى الا يكونوا من الثقات فحسب , بل يكونوا من الحفاظ المتقنين فمتى روى عنه هؤلاء الاثبات ( وان كان مجهول العين ) <وهو مذهب أحمد> فحديثه مقبول يحتج به .

ثالثاً : ان لا يكون له ماينكر عليه , واشنرطه ابن حبان , فهو في هذه الحالة لم يعد من المجهولين , بل من الضعفاء , فلاتنفعه رواية الثقات

رابعاً : فائدة : هناك من الائمة الحفاظ المتقنين من لايروي الا عن ثقة وهم كثر ( انظر اتحاف النبيل س208)

التفرد في طبقة التابعين محتمل في الغالب ، فهذا الذي يقبل فيه تفرد المجهول الذي روى عنه جماعة من “الثقات” ، إذا “سلم من ركاكة الألفاظ ومخالفة الأصول” كما يقول الذهبي…

مقدمة ابن الصلاح = معرفة أنواع علم الحديث ت الفحل والهميم (ص224):

…قُلْتُ: ويُشْبِهُ أنْ يكونَ العمَلُ على هذا الرأيِ في كثيرٍ مِنْ كُتُبِ الحديثِ

المشهُورَةِ، في غيرِ واحِدٍ مِنَ الروَاةِ الذينَ تَقَادَمَ العهْدُ بهِمْ وتَعَذَّرَتْ الخِبْرَةُ الباطِنَةُ بهِمْ (3)، واللهُ أعلمُ


نظم علوم الحديث = أقصى الأمل والسول في علم حديث الرسول (ص132 بترقيم الشاملة آليا):
(2) يَقصد “مجهول الحال” -وهو عدل الظاهر، خفي الباطن؛ (لم ينص أحدٌ عليه جرحاً ولا تعديلاً) -، وهو مَن روى عنه واحد ولم يوثق، واختلفوا في قبول روايته على أقوال:
1 – لَا تُقْبَلُ عِنْدَ الْجَمَاهِيرِ، عزاه ابن المواق للمحققين منهم أبو حاتم الرازي.
2 – وَقِيلَ: تُقْبَلُ مُطْلَقًا، نسبه ابن المواق لأكثر أهل الحديث كالبزار والدارقطني.
3 – وَقِيلَ: إِنْ كَانَ مَنْ رَوَى عَنْهُ فِيهِمْ مَنْ لَا يَرْوِي عَنْ غَيْرِ عَدْلٍ قُبِلَ وَإِلَّا فَلَا.
انظر: “علوم الحديث ص 111” “فتح المغيث 2/ 212” “تدريب الراوي 1/ 372” “معجم المصطلحات ص 666”
(3) الْمَسْتُور: هُوَ عَدْلُ الظَّاهِر (لم يوقف منه على فسق) خَفِيُّ الْبَاطِنِ (لم ينص عليه أحد جرحاً ولا تعديلاً)، وهو مَن روى عنه اثنان ولم يوثق، ويَحْتَجُّ بِهَا بَعْضُ مَنْ رَدَّ الْأَوَّلَ، وَهُوَ قَوْلُ بَعْضِ الشَّافِعِيِّينَ، كَسُلَيْمٍ الرَّازِيِّ، قَالَ ابْنُ الصَّلَاحِ: وَيُشْبِهُهُ أَنْ يَكُونَ الْعَمَلُ عَلَى هَذَا في كَثِيرٍ مِنْ كُتُبِ الْحَدِيثِ الْمَشْهُورَةِ فِي جَمَاعَةٍ مِنَ الرُّوَاةِ تَقَادَمَ الْعَهْدُ بِهِمْ، وَتَعَذَّرَتْ خِبْرَتُهُمْ بَاطِنًا، وَكَذَا صَحَّحَهُ النووي.
انظر: “علوم الحديث ص 111 ” “فتح المغيث 2/ 213 ” “تدريب الراوي 1/ 372” “ضوابط الجرح والتعديل ص 117”
(4) في (هـ): ولم هي
(5) الْقِسْمُ الثَّالِثُ مِنْ أَقْسَامِ الْمَجْهُولِ: مَجْهُولُ الْعَيْنِ وَهُوَ: من لم يرو عنه إلا راو واحد ولم يوثق، واختلفوا في قبول روايته:
1 – لَا يَقْبَلُهُ بَعْضُ مَنْ يَقْبَلُ مَجْهُولَ الْعَدَالَةِ وَرَدُّهُ هُوَ الصَّحِيحُ الَّذِي عَلَيْهِ أَكْثَرُ الْعُلَمَاءِ مِنْ أَهْلِ الْحَدِيثِ، وَغَيْرِهِمْ.
2 – وَقِيلَ: يُقْبَلُ مُطْلَقًا، وَهُوَ قَوْلُ مَنْ لَا يَشْتَرِطُ فِي الرَّاوِي مَزِيدًا عَلَى الْإِسْلَامِ.
3 – إِنْ تَفَرَّدَ بِالرِّوَايَةِ عَنْهُ مَنْ لَا يَرْوِي إِلَّا عَنْ عَدْلٍ، كَابْنِ مَهْدِيٍّ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، وَاكْتَفَيْنَا فِي التَّعْدِيلِ بِوَاحِدٍ قُبِلَ، وَإِلَّا فَلَا.
4 – إِنْ كَانَ مَشْهُورًا فِي غَيْرِ الْعِلْمِ بِالزُّهْدِ، أَوِ النَّجْدَةِ قُبِلَ، وَإِلَّا فَلَا، وَاخْتَارَهُ ابْنُ عَبْدِ الْبَرِّ.

5 – إِنْ زَكَّاهُ أَحَدٌ مِنْ أَئِمَّةِ الْجَرْحِ وَالتَّعْدِيلِ مَعَ رِوَايَةِ، وَاحِدٍ عَنْهُ قُبِلَ، وَإِلَّا فَلَا، وَاخْتَارَهُ أَبُو الْحَسَنِ بْنُ الْقَطَّانِ، وَصَحَّحَهُ ابن حجر.

انظر: “علوم الحديث ص 112 ” “نزهة النظر ص 63″ ” فتح المغيث 2/ 202 ” “تدريب الراوي 1/ 373” “ضوابط الجرح والتعديل ص 116”


இதுவரை உள்ள தகவல்படி இதன் சாரம்சம்:

அறியப்படாதவர்கள் மூன்று வகையினர் ஆவார்கள்.

1 . مجهول الذات – மஜ்ஹூலுத் தாத்.

  • பெயர் குறிப்பிடப்படாமல் شيخ , رجل , فلان , இன்ன மனிதர், இன்ன பெரியவர், மரியாதைக்குரியவர், இன்ன பலமானவர், இன்ன நம்பிக்கைக்குரியவர் என்று கூறப்படுவோருக்கு مجهول الذات என்று கூறப்படும். இந்த வகையில் உள்ளவர்களை சிலர் مبهم முப்ஹம் என்று கூறுவர்.
  • தந்தைப் பெயருடன் கூறப்படாத, அடையாளம் காணமுடியாத அறிவிப்பாளர்களும் இந்த வகையினர் ஆவார்கள். இந்த வகையில் உள்ளவர்களை சிலர் مهمل முஹ்மல் என்று கூறுவர்.

இவர்கள் இடம்பெறும் செய்திகள் பலவீனமானவையாகும். (முப்ஹமாக அல்லது முஹ்மலாக கூறப்பட்டவர்கள் பற்றி வேறு அறிவிப்பாளர்தொடரில் விவரம் இருந்தால் அதன்படி முடிவு செய்யவேண்டும்.)

  • என்றாலும் “நபித்தோழர்களில் ஒரு மனிதர் அறிவித்தார்” என்பது போன்ற வாசகம் இருந்தால் அந்தச் செய்தி ஏற்கப்படும். ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவார்கள்.
  • முப்ஹமாக கூறப்பட்டவர்கள் ஒரு குடும்பத்தினர் என்றோ அல்லது ஒரு ஊர்வாசிகள் என்றோ குறிப்பிடப்பட்டால் அவர்கள் அறியப்பட்டவர்கள் என்பது சிலரின் நிலைப்பாடாகும்…

2 . مجهول العين – மஜ்ஹூலுல் ஐன்.

  • ஒருவரின் பெயர் கூறப்பட்டு,
  • இவர் உண்மையில் இருந்துள்ளார் என்பதற்கு வேறு சான்று உள்ளது.
  • ஆனால் இவர் குறைந்த ஹதீஸ்களை மட்டுமே அறிவித்துள்ளார்.
  • மேலும் இவரிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார்.
  • மேலும் இவரைப் பற்றி எந்த அறிஞரும் குறையோ, நிறையோ கூறவில்லை.

இவர்களை மொழி வழக்கில் அறியப்பட்டவர் என்று கூறினாலும், ஹதீஸ்கலை வழக்கில் இவரை மஜ்ஹூல் ஐன் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த வகையினர்களின் பெயர்களை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் தனியாக தொகுத்துள்ளார். (பார்க்க: அல்முன்ஃபரிதாது வல்வுஹ்தான்)

இவர்களின் செய்திகளை ஏற்கலாமா? ஏற்கக்கூடாதா? என்பதில் அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளது.

1 . அதிகமான ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளதாக சில ஹதீஸ்கலை நூல்களில் உள்ளது.

2 . ஒருவரிடமிருந்து பலமானவர் அறிவித்து; அந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் வேறு குறைகள் இல்லாமல் இருந்து; அந்தச் செய்தியும் முன்கராக இல்லாவிட்டால் அவர் அறியப்பட்டவர் ஆவார்.

இந்த நிலை இல்லாதவர்கள் அறியப்படாதவர்கள் என்பது இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இப்னுல் வஸீர் அல்யமானீ போன்ற இன்னும் சிலரின் நிலைப்பாடாகும்.

3 . பலமானவர்களின் வழியாக மட்டுமே அறிவிப்போம் என்ற கொள்கையுடயவர், ஒருவரிடமிருந்து அறிவித்தால் அவருக்கு மஜ்ஹூல் ஐன் என்று கூறப்படாது. அவர் பலமானவர் ஆவார்.

இந்த நிலை இல்லாதவர்கள் ஒருவரிடமிருந்து அறிவித்தால் அவர் மஜ்ஹூல் ஐன் என்பது சிலரின்…கருத்தாகும்.

4 . ஒருவரிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார். இவர் ஹதீஸ்துறை அல்லாத வேறுதுறைகளில் பிரபலமானவர் என்று அறியப்பட்டிருந்தால் இவர் மஜ்ஹூல் ஐன் அல்ல. இவரின் செய்தியை ஏற்கலாம் என்பது இப்னு அப்துல்பர் போன்றோரின் கருத்தாகும்.

5 . ஒருவரிடமிருந்து ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார். ஆனால் அவரைப் பற்றி ஏதேனும் ஒரே ஒரு அறிஞர் நற்சான்று அளித்துவிட்டாலும் அவர் மஜ்ஹூல் ஐன் அல்ல. அவரின் செய்தியை ஏற்கலாம் என்பது அபுல்ஹஸன் அல்கத்தான் அல்ஃபாஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றோரின் கருத்தாகும்.

6 . ஒரு நபித்தோழரிடமிருந்து, ஒருவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் அந்த நபித்தோழருக்கு மஜ்ஹூல் ஐன் என்று கூறப்படாது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.


3 . مجهول الحال – மஜ்ஹூலுல் ஹால்.

ஒருவரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர். இவரைப் பற்றி எந்த அறிஞரும் குறையோ, நிறையோ கூறவில்லை.

இவர்கள் இரு வகையாக உள்ளனர்.

1 . مجهول العدالة ظاهرا وباطنا – வெளிப்படையிலும், அந்தரங்கத்திலும் நம்பகத்தன்மை அறியப்படாதவர்கள்.

வெளிப்படையில் நம்பகத் தன்மையை அறிவது என்றால் இன்ன மனிதர் முஸ்லிம்களில் வாழ்ந்துள்ளார் என்பது போன்ற வரலாற்று குறிப்பாகும்.

அந்தரங்கத்தில் நம்பகத் தன்மையை அறிவது என்றால் இன்ன மனிதர் பற்றி மற்ற அறிஞர்கள் பலமானவர் என்றோ அல்லது உண்மையாளர் என்றோ நற்சான்று அளித்திருப்பதாகும்.

  • இவர்களின் செய்திகள் ஏற்கப்படாது என்பது அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோரின் கருத்து என்று சிலர் கூறியுள்ளனர்…
  • முஹம்மத் பின் யஹ்யா-துஹ்லீ, நஸாயீ…, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் ஒருவரிடமிருந்து இரு பலமானவர்கள் அறிவித்தால் அவர் பலமானவர் என்ற கருத்தில் உள்ளனர்.
  • பலமானவர்கள் வழியாக மட்டுமே அறிவிக்கும் கொள்கையுடையவர்களில் 2 பேர் அறிவித்திருந்தால் அவர் மஜ்ஹூல் ஹால் என்ற வட்டத்துக்குள் வரமாட்டார் என்பது வேறு சிலரின் கருத்தாகும்…

2 . مجهول العدالة باطنا لا ظاهرا، وهو المستور – அந்தரங்கத்தில் நம்பகத் தன்மை அறியப்படாதவர். (வெளிப்படையில் இவரின் நம்பகத் தன்மை அறியப்பட்டுள்ளது)

இவரையே மஸ்தூர் என்று இப்னுஸ் ஸலாஹ் பிறப்பு ஹிஜ்ரி 577
இறப்பு ஹிஜ்ரி 643
வயது: 66
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

  • ஒருவரின் நம்பகத்தன்மை தெரியவில்லை என்பதால் அவர் பாவியா? பாவி இல்லையா? என்பது அறியப்படவில்லை. எனவே இந்த வகையினரின் செய்திகளை ஏற்கப்படாது என்பது சிலரின் கருத்தாகும்.
  • ஒருவரைப் பற்றி வெளிப்படையான நிலை தெரிந்தால் போதும். அதாவது ஒருவர் பற்றி விமர்சனம் இல்லாவிட்டால் போதும். அவர் நம்பகமானவர் ஆவார். இஸ்லாம் வெளிப்படையை தான் பார்க்க சொல்கிறது. ஒருவரின் அந்தரங்க நிலையை அல்லாஹ்வையன்றி யாரும் அறியமுடியாது என்று கூறி இந்த வகையினரின் செய்திகளை ஏற்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

அபூஹனீஃபா,பிறப்பு ஹிஜ்ரி 80
இறப்பு ஹிஜ்ரி 150
வயது: 70
இப்னுஹிப்பான் போன்ற சிலர் இந்த கருத்தின்படி முடிவு செய்கின்றனர்.

  • இப்னுஸ் ஸலாஹ்,பிறப்பு ஹிஜ்ரி 577
    இறப்பு ஹிஜ்ரி 643
    வயது: 66
    இமாம் நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இந்த நிலையில் உள்ளவர்கள் தாபிஈன்கள் என்றால் அவர்களின் செய்திகளை ஏற்கலாம். அதற்கடுத்த தலைமுறையினர் விசயத்தில் ஏற்கப்படாது என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இந்த நிலையில் உள்ளவர்களின் செய்திகளை எடுத்தவுடனே ஏற்கவோ அல்லது மறுக்கவோ கூடாது. அவர்களின் நிலைகளையும், செய்திகளையும் ஆய்வு செய்த பிறகே முடிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஹதீஸுள் ளயீஃப் வ ஹுக்முல் இஹ்திஜாஜி பிஹ்-1/169-177)


  • ஒருவரிடமிருந்து இருவருக்கு மேல் பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இவரைப் பற்றி எந்த அறிஞரும் குறையோ, நிறையோ கூறவில்லை. மூவர் அறிவித்தால் அவர் குறைந்தபட்சம் ஹஸன் தரமுடையவர் என்றும் சில அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்…
  • வேறு சிலர், ஒருவரிடமிருந்து எத்தனைப்பேர் அறிவித்துள்ளனர் என்பதைக் கவனிக்காமல் அறிவிப்பவரின் நிலையை வைத்தே முடிவு செய்கின்றனர். அதாவது பலமானவர்களிடமிருந்தே அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர் அறிவித்தால் அது ஏற்கப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் ஏற்கப்படாது என்று கூறியுள்ளனர். (என்றாலும் இந்தக் கருத்தை ஸகாவீ இமாம் போன்றோர் விமர்சித்துள்ளனர்)

 



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.