தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-6772

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்ராஹீம் அன்னகயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்களின் சகோதரர் மரணத்தருவாயில் இருக்கும் போது அவருக்கு நெற்றியில் வியர்வை அரும்பியது. உடனே அல்கமா (ரஹ்) சிரித்தார். அருகிலிருந்த யஸீத் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள், அபூஷிப்ல் (அல்கமா அவர்களே) ஏன் சிரிக்கின்றீர்? எனக் கேட்டார்.

அதற்கு அல்கமா (ரஹ்), “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும்.

இறைநம்பிக்கையாளருக்கு அவர்செய்த தீமைக்கு (மன்னிப்பாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது கடினமாக்கப்படும். இறைமறுப்பாளருக்கு அவர் செய்த நன்மைக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது இலேசாக்கப்படும் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

(musannaf-abdur-razzaq-6772: 6772)

عَنِ الثَّوْرِيِّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ:

كَانَ عِنْدَ أَخٍ لَهُ وَهُوَ يَسُوقُ فَجَعَلَ يَرْشَحُ جَبِينُهُ، فَضَحِكَ عَلْقَمَةُ، فَقَالَ لَهُ يَزِيدُ بْنُ أَوْسٍ: مَا يُضْحِكُكَ يَا أَبَا شِبْلٍ؟ قَالَ: إِنِّي سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ يَقُولُ: «إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ تَخْرُجُ مِنْ شِدْقِهِ كَمَا تَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، إِنَّ الْمُؤْمِنَ لَيُشَدَّدُ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ بِالسَّيِّئَةِ قَدْ عَمِلَهَا لِتَكُونَ بِهَا، وَإِنَّ الْكَافِرَ لَيُهَوَّنُ عَلَيْهِ عِنْدَ مَوْتِهِ بِالْحَسَنَةِ قَدْ عَمِلَهَا لِتَكُونَ بِهَا»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-6772.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-6603.




மேலும் பார்க்க: திர்மிதீ-980 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.