தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-12012

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்ராஹீம் அன்னகயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்கமா (ரஹ்) அவர்கள் நகயீ கிளையைச் சேர்ந்த தன் நண்பர் ஒருவரை நலம் விசாரிக்க சென்றார். அவரின் நெற்றியில் (கைவத்து)  தடவிப்பார்க்கும் போது வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு சிரித்தார். அருகிலிருந்த ஒருவர், அபூஷிப்ல் (அல்கமா அவர்களே) ஏன் சிரிக்கின்றீர்? எனக் கேட்டார்.

அதற்கு அல்கமா (ரஹ்), “இறைநம்பிக்கையாளரின் உயிர், நெற்றியில் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். அவர் சில நேரம் செய்த தீமைக்கு (மன்னிப்பாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு கடினமாக்கப்படும்.

இறைமறுப்பாளரின் உயிர், கழுதையின் உயிர் வெளியேறுவதைப் போன்று தாடை வழியாக வெளியேறும். அவர் சில நேரம் செய்த நன்மைக்கு (கூலியாக) மரணத்தருவாயில் உயிர் பிரிவது அவருக்கு இலேசாக்கப்படும் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்து சிரித்தேன் என்று கூறினார்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 12012)

حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ،

أَنَّهُ دَخَلَ عَلَى صَدِيقٍ لَهُ مِنَ النَّخَعِ يَعُودُهُ، فَمَسَحَ جَبِينَهُ، فَوَجَدَهُ يَرْشَحُ فَضَحِكَ، فَقَالَ لَهُ بَعْضُ الْقَوْمِ: مَا يَضْحَكُكَ يَا أَبَا شِبْلٍ؟ قَالَ: ضَحِكْتُ مِنْ قَوْلِ عَبْدِ اللَّهِ «إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَإِنَّهُ قَدْ يَكُونُ عَمِلَ السَّيِّئَةَ فَيُشَدَّدُ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيَكُونَ بِهَا، وَإِنَّ نَفْسَ الْكَافِرِ وَالْفَاجِرِ لِيَخْرُجَ مِنْ شِدْقِهِ كَمَا يَخْرُجُ نَفْسُ الْحِمَارِ، وَإِنَّهُ قَدْ يَكُونُ عَمِلَ الْحَسَنَةَ، فَهُوِّنَ عَلَيْهِ عِنْدَ الْمَوْتِ لِيَكُونَ بِهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-12012.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-11773.




மேலும் பார்க்க: திர்மிதீ-980 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.