தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-34166

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்-89:23) என்ற வசனத்திற்கு (விளக்கமாக), அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 34166)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ ذَرٍّ، قَالَ عَبْدُ اللَّهِ

{وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23] قَالَ: جِيءَ بِهَا تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ , مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-34166.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-33476.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6806-அஸ்பாத் பின் நஸ்ர் என்பவர் பற்றி இவர் நம்பகமானவர்; என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். அபூநுஐம் அவர்கள் இவர் ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை மாற்றி அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/109, தக்ரீபுத் தஹ்தீப்-1/124)

மேலும் பார்க்க: முஸ்லிம்-5464 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.