பாடம்: 3
விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோருக்கு உதவி புரிதல்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மேற்கண்ட செய்தியை மாலிக் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் இரவெல்லாம் சோர்ந்து விடாது நின்று வணங்கி, பகலெல்லாம் விடாது நோன்பு நோற்றவரைப் போன்றவர் ஆவார்” (என்றும் நபி-ஸல்-அவர்கள் கூறியதாக மாலிக்-ரஹ்-அவர்கள்) அறிவித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம்: 53
(முஸ்லிம்: 5703)2 – بَابُ الْإِحْسَانِ إِلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ وَالْيَتِيمِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«السَّاعِي عَلَى الْأَرْمَلَةِ وَالْمِسْكِينِ، كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ – وَأَحْسِبُهُ قَالَ – وَكَالْقَائِمِ لَا يَفْتُرُ، وَكَالصَّائِمِ لَا يُفْطِرُ»
Muslim-Tamil-5703.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-2982.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-5299.
சமீப விமர்சனங்கள்