தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-612

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டுக் கழிவறையிலிருந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால், தண்ணீரைத் தொடவேயில்லை (உளூச் செய்யவில்லை).

சயீத் பின் அல்ஹுவைரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உளூச் செய்யவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நான் எந்தத் தொழுகையையும் நிறைவேற்றப்போக வில்லையே, அவ்வாறிருந்தால்தானே நான் உளூச் செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

Book : 3

(முஸ்லிம்: 612)

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ حُوَيْرِثٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ

«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى حَاجَتَهُ مِنَ الْخَلَاءِ، فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فَأَكَلَ وَلَمْ يَمَسَّ مَاءً»، قَالَ: وَزَادَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ: إِنَّكَ لَمْ تَوَضَّأْ؟ قَالَ: «مَا أَرَدْتُ صَلَاةً فَأَتَوَضَّأَ» وَزَعَمَ عَمْرٌو، أَنَّهُ سَمِعَ مِنْ سَعِيدِ بْنِ الْحُوَيْرِثِ


Tamil-612
Shamila-374
JawamiulKalim-567




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.